நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 11 2018
கேரளாவின் புதிய நீதியரசாக நீதிபதி அண்டனி டொமினிக் (Antony Dominic)பதவியேற்றுக் கொண்டார். கேரளா கவர்னர் பி. சதாசிவம் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதலாவது கேலோ இந்தியா ஸ்கூல் விளையாட்டு போட்டிகள் தில்லியில நடைபெற்றது. இதில 38 தங்கம் மற்றும் 26 வெள்ளியுடன் 108 பதக்கங்களுடன் ஹரியானா முதலிடத்திலும் 111 பதக்கங்களில் மகாராஷ்டிரா 2 வது இடத்திலும் உள்ளது.
ஒட்டுமொத்த சுகாதாரப்பட்டியலில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில கேரளா முதலிடம் பிடித்துள்ளது. நிதி அயோக் வெளியிட்டுள்ள சுகாதார ஆய்வறிக்கையின் படி கேரளா முதலிடத்திலும், பஞ்சாப் தமிழ்நாடு மற்றும் குஜராத் அடுத்தடுத்த இடத்திலும்; உள்ளது. இதனை “ஆரோக்கியமான மாநிலங்கள் முற்போக்கு இந்தியா” அறிக்கையின்படி ஆகும்.
2 வது அக்பர் கேக்கட்டில் விருது 2018 “Akbar Kakkatti Award 2018” T.D ராமகிருஷ்ணனின் “சுகந்தி என்ன ஆண்டாள் தேவநாயகி” எனும் நாவலுக்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது கோழிக்கூடுவில் நடைபெறும் விழாவில் அக்பர் கக்கட்டில் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும்.
6 வது Intellectual Property – Index (IPI – 2018) அறிவார்ந்த சொத்து குறியீட்டின்படி 50 நாடுகளில் 44 வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த அறிக்கையினை U.S. சேம்பர் ஆஃப் காமர்ஸ் உலகளாவிய கண்டுபிடிப்பு கொள்கை மையம் வெளியிட்டது. (GIPC)
அறிவியல் மற்றும் புதுமையான ஆராய்ச்சி அகாடமி (ACSIR) என்பது தமிழ் நாட்டிலுள்ள சென்னையில் CSIR வளாகத்தில் உள்ளது. முனைவர் பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பை வழங்குவதற்காக இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.
மணிப்பூரின் புதிய உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி அபிலாஸ் குமாரி பதவியேற்றுக் கொண்டார். மணிப்பூரின் ஆளுநனர் நஜ்மா ஹெப்துல்லா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களால் “ஸ்வச் பாரத் சனிட்டியன் பார்க்” டெல்லியில் தொடங்கப்பட்டது.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்புற எழை மக்களுக்கு 39.25 லட்சம் வீடுகள் வழங்கப்படுகின்றன.
யுனானி மருத்துவத்தின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் தொடங்கி நடைபெற்றது.