ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 27 2018
அக்டோபர் 27 – உலக பாரம்பரிய ஆடியோகாட்சி தினம்
தீம் “Your Story is Moving”.
- அரியானா குர்கானில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் அறிவித்தார்.
- சுகன்யா சம்ரிதி யோஜனாவின் கீழ் 16 லட்சம் தபால் சேமிப்புக் கணக்குகளை திறந்து தமிழ்நாடு ஒரு தேசிய சாதனை படைத்துள்ளது.
- உலகின் மிகச்சிறிய ஆப்டிகல் கைரோஸ்கோப் உருவாக்கப்பட்டது
- இந்தோனேசியாவில் புதிய இலைப் பறவை இனம் கண்டுபிடிக்கப்பட்டது
- இரண்டு புதிய கெக்கோ பல்லி இனங்கள் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கண்டுபிடிப்பு.
- அருணாச்சல பிரதேசத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிப்பு.
- புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் வட கிழக்கு திருவிழா 5 நாள் நடைபெறவுள்ளது.
- இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) டெல்லியில் தொடங்கியது. தீம் “New Digital Horizons – Connect. Create. Innovate.”
- இந்தியா மற்றும் ஜப்பான் இடையே 13 வது ஆண்டு இருதரப்பு உச்சி மாநாடு
- சஞ்சய் குமார் மிஸ்ரா – தலைமை அமலாக்க இயக்குநர்
- மஹிந்தர ராஜபக்சே – இலங்கையின் புதிய பிரதமர்
- தர்பன் திட்டம் – இந்தியாவில் கிராமப்புற தபால் அலுவலகங்கள் டிஜிட்டல் முன்னேற்றம் பெறுவதற்காக.
- இந்திய கடலோரக் காவல்படையின் 17 டோர்னியர் விமானம் 950 மில்லியன் ரூபாய் செலவில் மேம்பாட்டிற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
- விவசாயிகளின் வருவாயை இருமடங்காக்க ஜனாதிபதிக்கு 21 பரிந்துரைகளை ஆளுநர்கள் குழு முன்வைத்துள்ளது.
- ஊட்டியில் இந்திய இராணுவத்தின் காலாட்படையின் 72வது தொடக்க தின கொண்டாட்டம்.
- அமெரிக்க இராணுவம் வெற்றிகரமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இடைமறிப்பு அமைப்பை சோதனை செய்தது.
ஐ.நா மனித உரிமை பரிசு
1) பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் அஸ்மா ஜஹாங்கீர் [மரணத்திற்கு பின்]
2) தான்சானியாவின் ரெபேக்கா க்யுமி
3) பிரேசிலின் முதல் உள்நாட்டு வழக்கறிஞர் ஜோனீயா வாபிச்சானா
4) அயர்லாந்தின் மனித உரிமை அமைப்பு முன்னணி பாதுகாவலர்கள்
- சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்டை சவுரவ் கோத்தாரி பிரிட்டனில் நடைபெற்ற போட்டியில் வீழ்த்தி 2018 உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
- 300 ஒருநாள் போட்டிகளில் நடுவராக பணிபுரிந்த ஐசிசி எலைட் பேனலின் இரண்டாவது உறுப்பினரானார் இங்கிலாந்தின் கிறிஸ் பிராட்.