ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 4,5 2018
நவம்பர் 5 – உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
- அடுத்த ஆண்டு ஜனவரி மாத அளவில் ஆறு தெற்காசிய நாடுகளுடன் கவுஹாத்தியை ஆறு தென் ஆசிய நாடுகளுடன் இணைக்கத் திட்டம்.
- புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவி மற்றும் தகவல் வசதியை சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தொடங்கி வைத்தார்.
- 3 வது தேசிய ஆயுர்வேத தினம் – 2018, ஷில்லாங் மேகாலயாவில் அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் “Ayurveda for Public Health” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட மாநிலமாக ஜார்கண்ட், நவம்பர் 15-ந்தேதிக்குள் உருவாகும்.
- காமன்வெல்த் நாடுகளுக்கு பிரிட்டிஷ் ஆயுதப்படைகளில் வேலைவாய்ப்பு பெறும் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தளர்த்துவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
- நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி வானில் ஒரு புன்னகை முகத்தை ஒத்திருக்கும்[ஸ்மைலி] விண்மீன் குழுக்களை கண்டறிந்தது.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் [ஆர்.ஐ.எல்]& எச்எஸ்பிசி பிளாக்செயின் வர்த்தக நிதி பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியது.
நீர் தரக் குறியீடு
- 122 நாடுகளில் 120 வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
- ஆயுர்வேத மருத்துவத்தில் தொழில்முனைப்பு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்த இரண்டுநாள் தேசிய கருத்தரங்கு புதுதில்லியில் தொடங்கியது.
- இந்திய போட்டி ஆணையம் (CCI) ஏற்பாடு செய்துள்ள பொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம் பற்றிய தேசிய மாநாடு தில்லியில் நடைபெறுகிறது.
- சீனாவின் ஷாங்காயில் நடைபெறும் முதலாவது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் (CIIE) இந்தியாவின் பெவிலியனை அங்கு அமைத்துள்ளது.
- ஆப்ரேஷன் கிரீன்ஸ் – நாடு முழுவதும், அனைத்து காலங்களிலும் டி.ஒ.பி பயிர்கள் என அழைக்கப்படும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிவை விலை ஏற்ற தாழ்வின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
- சுற்றுலா மற்றும் விளையாட்டு துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் கொரியக் குடியரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இந்தியா மற்றும் மலாவி நாட்டுக்கு இடையே குற்றவாளிகளை இரு நாடுகளுக்கு இடையில் ஒப்படைக்கும் ஒப்பந்தம், அணுசக்தி துறையில் சமாதான நோக்கங்களுக்கான ஒத்துழைப்பு, தூதரக மற்றும் உத்தியோகபூர்வ பாஸ்போர்ட்டுகளுக்கு விசா விலக்கு ஆகிய மூன்று உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன.
- சர்வதேச பத்திரிக்கை [பிரஸ்] நிறுவன இந்தியா விருது – நம்ரதா பிஜி அஹுஜா
- நேபாளத்தில் நடைபெற்ற SAFF U-15 ஆண்கள் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் பங்களாதேஷ் பெனால்டி ஷூட் முறையில் பாகிஸ்தானை வென்றது.
- ஜெர்மனியில் நடைபெற்ற சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சுபாங்கர் டே வென்றார்.
- ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.