ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 29 2018
நவம்பர் 29 – ஐக்கிய அரபு நாடு நினைவு தினம்
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யு.ஜி.சி., கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளின் (CARE) கூட்டமைப்பு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.
- உத்தரப்பிரதேசத்தில் திறமையான சுற்றுச்சூழல் கங்கா தோழர்கள்[மித்ராஸ்] எனும் நாட்டின் முதல் சுற்றுச்சூழலுக்கான பயிற்சி மையம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் துவங்கியது.
- 2050 வாக்கில் ‘காலநிலை நடுநிலை’ அடைய ஐரோப்பிய ஒன்றியம் இலக்கை அமைத்தது.
- தென் கொரியா ஒரு ராக்கெட் என்ஜின் பரிசோதனையை நடத்தியது, இது அதன் சொந்த விண்வெளி வெளியீட்டு வாகன வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
- இந்தியாவின் நவீன புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் ஹைசிஸ் மற்றும் 30 வெளிநாட்டு இணை செயற்கைக் கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி-சி43 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜேட்லி வழங்கவுள்ளார்.
- உலகெங்கிலும் ‘பசியில்லா நிலை‘யை அடைவதற்கு ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) சிறந்த கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு முறையீடுகளை புதுப்பித்தது.
- மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனான திரு.ஸ்ரீ கிருஷ்ணா ஜி. குல்கர்னி, காந்தி தர்ஷன், புது டில்லியில் மூன்று நாள் தெற்காசிய மண்டல இளைஞர் அமைதி மாநாட்டை துவக்கி வைத்தார்.
- மும்பையின் துறைமுக வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப திட்டங்களுக்காக டச்சு அரசாங்கம் மும்பை போர்ட் டிரஸ்டிற்கு உதவி வழங்குகிறது.
- மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் – திரு.அரவிந்த் சக்ஸேனா.
- டிசம்பர் 31, 2018-ற்குள் நாட்டில் 100% வீடுகள் மின்மயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 22 இந்திய மொழிகளுக்கு பள்ளி மாணவர்களை அறிமுகப்படுத்த பாஷா சங்கம் என்ற தனித்துவமான முயற்சியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
- உத்தரபிரதேசத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இந்திரா இராணுவ கூட்டுப் பயிற்சி முடிவடைந்தது.