இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறையின் ஒரு சுயவிவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வருவாய், இலாபங்கள் மற்றும் பணியாளர்கள் பொறுத்து அளவிடும் ஒரு ஆய்வை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது.
ஐசிசி பெண்கள் டி20 சர்வதேச டாப் 5 தரவரிசைப் பட்டியலில் நுழைந்து மூன்றாம் இடம் பிடித்தார் இந்திய அணியின் ஹர்மன் பிரீத் கவுர்.
பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் நடைபெறும்13 வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார்.
2018 தீம்– Building Consensus for a Fair and Sustainable Development.
நைரோபியில் நடைபெறும் கடல்சார் பொருளாதார மாநாட்டில் உரையாற்ற உள்ளார் மத்திய அமைச்சர் திரு. நிதின் காட்காரி.
இந்த மாநாட்டிற்கு கனடா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கென்யா ஏற்பாடு செய்துள்ளது.
புலனாய்வு முகமைகள் தலைவர்களின் இரண்டாவது தேசிய மாநாடு புதுதில்லியில் தொடங்குகிறது.
கர்நாடகாவின் நான்கு கரையோர நகரங்களில் நீர் விநியோக திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கி ஏடிபி 75 மில்லியன் டாலர் கடன் வழங்கும்.
நகர்ப்புற ஏழைகளின் நன்மைக்காக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மலிவு வீடுகளை கட்டித்தர வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ஒப்புதல் அளித்துள்ளது.
செஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் அமெரிக்கர் பேபியானோ கருவானா இடையே நடைபெறும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வயது மோசடிகளுக்குதடையை இரட்டிப்பு ஆக்கியது.
இதற்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் ஒரு ஆண்டு காலம் தடை விதிக்கப்படுவர்.