கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) ஜார்கண்ட் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. முதல் தடவையாக திருவிழாவில் கவனம் செலுத்தும் மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் இந்தியாவிற்கு நான்கு நாள் பயணமாக புது டெல்லி வந்து சேர்ந்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடக்கு மற்றும் தென் கொரியாவிற்கு எல்லையில் ரயில்வேயை மீண்டும் இணைப்பதற்கான ஒரு ஆய்வு நடத்த பொருளாதார தடைகளிலிருந்து விலக்கு அளித்தது.
மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரிப்பதை மதிப்பிடுவதற்கான ‘தாக்கம் அடிப்படையிலான முன்அறிவிப்பு அணுகுமுறை’ எனும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய வானிலை துறை (IMD) உருவாக்கியுள்ளது.
பாலில் கலப்படத்தை கண்டுபிடிக்க ஐஐடி- ஹைதராபாத்[ஐஐடி-] ஆய்வாளர்களால் ஸ்மார்ட் போன் அடிப்படையிலான சென்சார் உருவாக்கப்பட்டது.
விஞ்ஞானிகள் ஒரு செயற்கை “ரோபோ மூக்கு” கருவியை உருவாக்கியுள்ளனர், இது போதைப்பொருள் மற்றும் வெடிமருந்துகளை கண்டறிவதற்கு நாய்களுக்குப் பதிலாக பயன்படுத்தத் திட்டம்.
சீனாவின் செங்டு நகரில் இந்திய எல்லை மற்றும் சீன எல்லையின் சிறப்பு பிரதிநிதிகள் இடையே எல்லை குறித்து 21-வது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், எய்ம்ஸ் புது தில்லியில் இருநாள் ஆர்தோக்னாதிக் அறுவை சிகிச்சை ஒர்க்ஷாப் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இது தாடை திருத்தும் அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படும்.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு காலநிலை ஆராய்ச்சி-மாதிரிக் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சேவைகள் (ACROSS) திட்டத்தை தொடர அனுமதித்தது.
EURAXESS சயின்ஸ்ஸ்லாம்இந்தியாவிருது – திரு சக்ரபூர்த்தி [தியேட்டரின் மூலம் அறிவியல் தொடர்புக்காக]
புது தில்லி மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடை பிரிவில் உக்ரைனின் ஹன்னா ஓகோட்டாவை தோற்கடித்து மேரி கோம் வரலாற்றில் இடம் பிடித்தார்.
இதன் மூலம் மேரி கோம் ஆறு உலக சாம்பியன்களை வென்ற வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான குத்துச்சண்டை வீரர் எனும் சாதனை படைத்தார்.
லக்னோவில் நடைபெறும் சையது மோடி சர்வதேச சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடரில், சாய்னா நேவால் உட்பட ஏழு இந்திய வீரர்கள் அரை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.