ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 20 2018
நவம்பர் 20 – உலகளாவிய குழந்தைகள் தினம்
- 2018 தீம்: Children are taking over and turning the world blue
- இந்தியாவின் 49 வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவா பனாஜி நகரில் தொடங்கியது.
- தமிழ்நாடு முதலமைச்சர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை அறிவித்தார்.
- திரிபுராவின் அகர்தலாவில் “7 வது சர்வதேச சுற்றுலா மார்ட்” 2018 ஆம் ஆண்டு நவம்பர் 22 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- மாலத்தீவு அமைச்சரவை 53 நாடுகளின் குழுவில் இருந்து வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காமன்வெல்த் குழுவில் மீண்டும் இணைவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- குவாத்தமாலாவில், ஃபூகோ எரிமலை இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக வெடித்தது.
- பிரிட்டிஷ் பிரதமர் வரைவு பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான வணிக ஆதரவைப் பெற்றார்.
- மூலதன உபரி பற்றிய பிரச்சினைகளை ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைக்க ரிசர்வ் வங்கி முடிவு.
- இந்தியாவின் பிரதம மந்திரி அடையாளம் காணக்கூடிய ஏழு வணிக பிரச்சனைகளை தொழிநுட்பங்களை பயன்படுத்தி தீர்ப்பதற்கான பெரும் சவால் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
- காலநிலை மாற்றத்திற்கான 27 வது BASIC ஆலோசனைக் கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான டெல்லியில் நடத்தப்பட்டது.
- BASIC (பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா) நாடுகள், புது தில்லியில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
- உள்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் கிரன் ரிஜிஜூ புது தில்லியில், ‘பேரழிவு மேலாண்மையில் ஊடகத்துறைக்கான பங்கு’ பற்றிய ஓர்க்ஷாப்பைத் திறந்து வைத்தார்.
- உத்திரப்பிரதேசத்தில், நரி சஷக்திகரன் சங்கல்ப் திட்டம் அல்லது மகளிர் அதிகாரமளித்தல் பிரச்சாரம் லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களால் தொடங்கப்பட உள்ளது.
- ஜார்க்கண்ட் குடிமக்களுக்கு 24×7 மின்சாரம் வழங்க ஜார்க்கண்ட் பவர் சிஸ்டம் மேம்பாட்டு திட்டத்திற்கான 310 மில்லியன் டாலருக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இராணுவ தளபதிகளின் தலைவரான பிபின் ராவத் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
- ‘ரேடியோ காஷ்மீர் – டைம்ஸ் ஆஃப் பீஸ் அண்ட் வார்‘ என்ற புத்தகத்தை டாக்டர் ராஜேஷ் பாட் எழுதி [டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்]
- ‘ஏரோ இந்தியா 2019’ இன் 12 வது பதிப்பு 20 முதல் 24 பிப்ரவரி 2019 வரை பெங்களூருவில் உள்ள எலஹன்கா விமான தளத்தில் நடைபெறும்.
- மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 48 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் நுழைந்தார் ஐந்து முறை உலக சாம்பியனான மேரி கோம்.
- 59 வது சுப்ரோதா சர்வதேச கால்பந்து கோப்பை ஆண்களுக்கான U-17 இறுதிப்போட்டி புதுதில்லியில் நடக்க உள்ளது.