ஆந்திர மாநில அரசு ரூ.86.03 கோடி மதிப்புள்ள சொத்துக்களை 23,000 ஏழை பயனாளிகளுக்கு எஸ்.டி.பி.சி அடிப்படையில் ஆதாரனா திட்டம் II – பெடாரிகம் பை கெலுப்பு [Pedarikam Pai Gelupu]ன் கீழ் விநியோகித்தது.
கோவா அரசு, மாநிலத்தில் மீன் இறக்குமதி மீதான தடை விதித்து உத்தரவிட்டது.
ஆயுஷ்க்கான மத்திய மாநில மந்திரி ஸ்ரீபத் நாயக் வடக்கு கோவா தர்காலில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
புலி எலும்பு மற்றும் ரைனோ கொம்பு தயாரிப்புகளுக்கு சீனா வர்த்தகம் தடை விதித்தது.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அவை, சூ கியுக்கு அளிக்கப்பட்ட ‘மனசாட்சி விருது தூதர்’ என்னும் கவுரவத்தை பறித்து விட்டது.
நாசாவின் ஜுனோ விண்கலம் வியாழன், வாயு கிரகத்தின் மாபெரும் பல வண்ணமயமான, சுழலும் மேகங்களின் புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டது.
நவீன தகவல் தொடர்புக்கான ஜிசாட் -29 செயற்கைக் கோளைத் தாங்கியபடி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பொது சுகாதாரத்திற்கான யோகாவின் சர்வதேச மாநாடு, பஞ்சிம் [கோவா] கலா அகாடமியில் தொடங்கப்பட்டது.
2018ஆம் ஆண்டுக்கான உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்க சந்தை மாநாட்டை(GDCM) தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை (DIPP), வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் புதுதில்லியில் நடத்துகிறது.
பெய்ஜிங்கில் 2வது ஸ்டார்ட் அப் இந்தியா முதலீட்டு கருத்தரங்கு.
மத்திய மாநில மந்திரி சத்ய பால் சிங் புது தில்லியில் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு கல்வியாளர்களுக்கான தலைமை (LEAP), உயர் கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான ஆண்டு புத்துணர்வு நிகழ்ச்சி(ARPIT) ஆகிய இரண்டு புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தினார்.
இந்தியா – ரஷ்யா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இந்த்ரா – 2018 (உத்தரப்பிரதேச மாநிலம்) நவம்பர் 18 முதல் நடைபெற உள்ளது.
இந்திய பெருங்கடல் கடற்படை சங்கத்தின் பத்தாவது ஆண்டு விழா கொச்சியில் தொடங்கியது.