ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 29 2019
- கோவாவின் பனாஜி நகரில், மண்டோவி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மூன்றாவது கேபிள் பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
- மும்பையில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) ஊழியர்களுக்கு ‘செக்வே‘ எனப்படும் இரு சக்கர பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்கியுள்ளது.
- கோஹிமாவில் நாகாலாந்து மாநிலத்தின் முதல் ஆஸ்ட்ரோ டர்ப் கால்பந்து தளத்தை திறந்துவைத்தனர்.
- மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ராஜஸ்தானில் நான்கு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் மத்திய வங்கிகள், “அபெர்” என்றழைக்கப்படும் ஒரு பொதுவான டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்தது.
- அமேரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை தொடர சீனாவின் உயர் அதிகாரி வாஷிங்டன் வந்தார்.
- ஈரானுடன் நீண்ட கால பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட்டது.
- அகதிகள் நாடு திரும்ப சிரியாவில் பாதுகாப்பான பகுதிகளை அமைப்பதற்கு துருக்கி நடவடிக்கை.
- போர்ட் பிளேரில் சமூக வானொலி விழிப்புணர்வு ஒர்க்ஷாப்பை, அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் நிர்வாகசெயலாளர் ஸ்ரீ அஜய் குமார் குப்தா துவக்கி வைத்தார்.
- நான்கு வழிச்சாலை கங்கை எக்ஸ்பிரஸ்வே கட்டுமானத்திற்கு உபி அரசு ஒப்புதல்.
- இந்திய புகையிலைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா மற்றும் சீனா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- ஹஜ் மீதான ஜிஎஸ்டி 18% முதல் 5% வரை குறைக்கப்பட்டது.
- இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.7,214.03 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல்.
நியூயார்க் டைம்ஸ் டிராவல் ஷோ 2019
- ‘சிறந்த ஷோவுக்கான‘ சிறப்பு விருது – இந்தியா
- புதுதில்லியில் “தேர்வு குறித்த விவாதம்0” நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக பிரதமர் மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடினார்.
- டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்கப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் மூன்றாம் இடம் பிடித்தார்.
- ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2020 அட்டவணை வெளியிடப்பட்டது.
- சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அம்பத்தி ராயுடுவுக்கு ஐசிசி தடை விதித்தது.