ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 23 2019
ஜனவரி 23 – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி
- பீகாரில் அண்மையில் கொண்டு வரப்பட்ட 10 சதவிகிதம் ஒதுக்கீடுக்கு தனி மசோதா கொண்டு வர முடிவு.
- தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த ஆண்டினைக் குறிக்கும் வகையில் செங்கோட்டையில் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
- ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் அமைச்சர் நிதின் கட்காரி கெர்ரியன் கண்டியல் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
- ஆந்திர பல்கலைக்கழகத்தில் பனை-இலை கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது.
- இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள கர்தார்பூர் பகுதியின் கோ-ஆர்டினேட்ஸை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது.
- கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இராணுவ ஆட்சிக்குப் பின்னர், மார்ச் 24 ம் தேதி தாய்லாந்தில் தேர்தல் நடைபெறவவுள்ளது.
- கத்தார் நாட்டில் அமெரிக்க தூதுவர் மற்றும் தலிபான் சந்திப்பை அமெரிக்கா உறுதிப்படுத்துகிறது.
- இஸ்ரோ மாணவர் செயற்கைக்கோள் கலாம்சாட் மற்றும் செயற்கைக்கோள் மைக்ரோசாட்-ஆர் ஆகியவற்றை ஜனவரி 24 ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.
- இந்தியாவில் நீர் நெருக்கடி வங்கி NPA பிரச்சனையை மேலும் மோசமாக்கலாம்: WWF அறிக்கை.
- தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு சென்னையில் தொடங்கப்பட்டது.
- மத்திய அமைச்சரவை உணவுப்பதப்படுத்துதல் துறையில் இந்தியா- ஜப்பான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய அமைச்சரவை வீட்டுவேலைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் ஒத்துழைக்க இந்தியா-குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- சார்க் உறுப்பு நாடுகளுக்கு இடையே நாணய பரிமாற்ற ஏற்பாட்டுக்கான கட்டமைப்பின் சட்டதிருத்தம்.
- மத்திய அமைச்சரவை சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தேசிய அமர்வை (ஜிஎஸ்டிஏடி) உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்ததினமான ஜனவரி 23-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சுபாஷ் சந்திரபோஸ் அப்டா பிரபந்தன் புரஸ்கார் விருது அறிவிக்கப்படும்.
- 100 விக்கெட்டுகளை மிகவேகமாகத் தனது 56-வது ஒருநாள் போட்டியில் அடைந்த இந்திய வீரர் எனும் சிறப்பை முகமது ஷமி பெற்றார்.
- சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பு சஞ்சிதா சானு மீதான தடையை ரத்து செய்தது.