ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 22 2019
பிப்ரவரி 22 – உலக சிந்தனை தினம்
- ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்வர்ண பாரத் டிரஸ்ட் (எஸ்.பி.டி)-ன் 18வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்வார்.
- மகாராஷ்டிரா தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலில் ஊனமுற்றவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக பிக் அப் டிராப் வசதியை ஏற்பாடு செய்துள்ளது.
- புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
- உத்தரப் பிரதேச அங்கன்வாடி தொழிலாளர்களின் ஊதியம் உயர்வு.
- ஐரோப்பாவில் புதிய ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு ரஷ்யா எச்சரிக்கை.
- 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்காய்டோவை தாக்கியது.
- தீவிரவாதத்தை கையாள்வதில் இந்தியாவுடன் தீவிரமாக ஒத்துழைக்க சர்வதேச சமூகத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்.
- யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார வளர்ச்சி கட்டமைப்பை இலங்கை தொடங்கியது.
- 2017-18ல் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வர்த்தகக் கூட்டணியாக ஆசியான் அமைப்பு வளர்ந்துள்ளது.
- நீதிபதி டி.கே. ஜெயின் – பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி
- நீதிபதி உமாநாத் சிங் – நாகாலாந்து மாநிலத்தின் முதல் லோகாயுக்தா
- மத்திய ஸ்மிருதி இரானி அருணாச்சல பிரதேசத்தில் ஒருங்கிணைந்த பெரிய அளவிலான எறி சில்க் வேளாண்மையை இடாநகரில் தொடங்கி வைத்தார்.
- மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய ஆயுதக் காவல் துறையினர், சிஏபிஎப்-க்கள் அனைவருக்கும் விமானப் பயணத்தின் உரிமையை அங்கீகரித்துள்ளது.
- பாகிஸ்தானுக்குள் ஓடும் ஆற்று நீரின் பங்கை நிறுத்த இந்தியா முடிவு.
- மோடி சியோல் அமைதிப் பரிசைப் பெற்றார்.
PDF Download
ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு