ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 30,31 2018
- போர்ட் பிளேய்ரில் டிசம்பர் 30, 1943 அன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் மூவர்ணக் கொடி ஏற்றிவைத்ததன் 75வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்.
- ராஸ் தீவு – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு 2) நீல் தீவு – ஷாஹீத் தீவு மற்றும் 3) தி ஹேவ்லாக் தீவு – ஸ்வராஜ் தீவு எனப் பெயர் மாற்றப்பட்டது.
- ஒரு புதிய ஆன்மீகத் துறையை அமைக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
- இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை ஆகியோரால் சிக்கிக்கொண்ட சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை மேகாலயாவில் தொடங்கியது.
- தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘தண்டி யாத்ரா’ கண்காட்சி புது தில்லியில் திறந்து வைக்கப்பட்டது.
- தூத்துக்குடி விமான நிலையம் தமிழ்நாட்டின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட உள்ளது.
- கடுமையான மழை மற்றும் கொடிய நிலச்சரிவுகளை தூண்டிய உஸ்மான் புயல் பிலிப்பைன்ஸ், மணிலாவின் பிகோல் பகுதியை தாக்கியது.
- நடுத்தர வருமானம் பெறும் குழுவிற்கான கடன் மானியம் மார்ச் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பார்வைக் குறைபாடுடையவர்கள் ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காண உதவ கைபேசி சார்ந்த தீர்வு.
ஐசிசி டெஸ்ட் வீரர்களின் தரவரிசை
- பேட்ஸ்மேன் – 1) விராட் கோலி
- பந்துவீச்சாளர் – 1) காகிசோ ரபாடா
- பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 3ம் தேதி பஞ்சாப், ஜலந்தரில் இந்திய அறிவியல் காங்கிரஸ் 2019-ஐ துவக்கி வைப்பார்.
- இந்த நிகழ்வின் 106 வது பதிப்பாக இது ஆகும். தீம் – ‘Future India: Science and Technology’.
- பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும், மனித வளத்துறை அமைச்சகம், ‘கலா உத்சவ்’ என்ற கலை திருவிழா போட்டிகளை, ஆண்டு தோறும் நடத்துகிறது.
- ஒரே பாரதம் – உன்னத பாரதம் [ஏக் பாரத் ஸ்ரேஸ்த்த பாரத்]திட்டத்தின் கீழ் தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்காக மனித வளத்துறை அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
- விளையாட்டு அமைச்சகம் டாப்ஸ்[TOPS] திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்க 100 கோடி நிதி ஒதுக்கீடு.
- 10வது ஆர் ஆர் லக்ஷியா கோப்பை, சர்வதேச துப்பாக்கிச்சூடு போட்டி, கர்னாலாவில் நடைபெறும்.
- பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது பதிப்பு கர்நாடகாவின் விஜயநகராவில் தொடங்குகிறது.
- மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
- கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
- ஐசிசி, 2018ம் ஆண்டிற்கான பெண்கள் ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது.
- நியூஸிலாந்தின் சுஜி பேட்ஸ் ஒரு நாள் அணியின் கேப்டனாகவும், இந்தியாவின் ஹர்மன் பிரீத் கவுர் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
PDF Download
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel –ல் சேர கிளிக் செய்யவும்