நடப்பு நிகழ்வுகள் – 11 நவம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 11 நவம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 11 நவம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 11 நவம்பர் 2022

தேசிய செய்திகள்

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு நெக்ஸ்ட் தேர்வு அறிமுகம்

  • இளநிலை மருத்துவ படிப்புகளைப்போல முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் ஆண்டுதோறும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
  • இந்த தேர்வுக்கு பதிலாக ‘நெக்ஸ்ட்’ (தேசிய வெளியேறுதல் தேர்வு) என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர்கள் இந்த தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். மேலும் இந்த சட்டம் கடந்த 2020-ம் ஆண்டு அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த தேர்வை நடத்துவதற்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் வரை கால அவகாசம் பெறப்பட்டு இருந்தது.

டிஜி லாக்கர் உபயோகிப்பாளர்கள் புதிய ஆவணங்களை சேமிக்க மத்திய அரசு திட்டம்

  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் பரிமாற்ற தளமான டிஜி லாக்கர், ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்துடன்  ஒருங்கிணைக்கும்  தனது  இரண்டாம்  நிலையை செயல்படுத்தியுள்ளது.
  • முன்னதாக, டிஜி லாக்கர் அதன் முதல் நிலை மூலம் ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தை  ஒருங்கிணைந்து ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கை அதன் 13 கோடி உபயோகிப்பாளர்களுக்காக உருவாக்கியது.
  • தற்போது புதிய ஒருங்கிணைப்பு மூலம் டிஜி லாக்கர் உபயோகிப்பாளர்கள் சுய சுகாதார ஆவணங்கள் செயலியாக பயன்படுத்த முடியும்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறை

  • சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க காலதாமதம் ஏற்படுவதால் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
  • அதில், சுப்ரீம் கோர்ட்டில் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும், அடுத்த திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.இது தொடர்பாக நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

ஒற்றை சாளர வசதியை இந்திய இராணுவம் தொடங்கியுள்ளது

  • வீர் நாரிகளின் நலன் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான “வீராங்கனா சேவா கேந்திரா” (VSK). திட்டத்தை 10 நவம்பர் 2022 அன்று ஜனாதிபதி இராணுவ மனைவிகள் நல சங்கத்தால் (AWWA) தொடங்கப்பட்டது.
  • வீராங்கனை சேவா கேந்திரா (VSK) இந்திய ராணுவ வீரர்களின் தங்களுக்கான சேவைகளை இணைய தளத்தில் indianarmyveterans.gov.in -ல்  பெறமுடியும் .கண்காணிப்பு மற்றும் விண்ணப்பதாரருக்கு வழக்கமான பின்னூட்டம் ஆகியவற்றுடன் குறைகளை பதிவு செய்வதற்கு இந்த அமைப்பு உதவுகிறது. வீர்னாரிஸ் /அவர்களின்  உறவினர்கள் VSK ஐ தொலைபேசி, SMS , WhatsApp, அஞ்சல், மின்னஞ்சல் மற்றும் உதவி பெற வாக்-இன்கள் மூலம் அணுகுவதற்கு பல வழிகளைக் கொண்டிருக்கும்.

வாழ்க்கை அறிவியல் தரவுகளுக்கான இந்தியாவின் முதல் தேசிய களஞ்சியத்தை மத்திய அரசு வெளியிட்டது

  • நாட்டில் பொது நிதியுதவி பெற்ற ஆராய்ச்சியில் இருந்து உருவாக்கப்பட்ட வாழ்க்கை அறிவியல் தரவுகளுக்கான இந்தியாவின் முதல் தேசிய களஞ்சியத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
  • இங்குள்ள பயோடெக்னாலஜியின் பிராந்திய மையத்தில் நிறுவப்பட்ட ‘இந்தியன் உயிரியல் தரவு மையம்’ (IBDC), நான்கு பெட்டாபைட் தரவு சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளது மற்றும் ‘பிரம்’ உயர் செயல்திறன் கணினி வசதியையும் கொண்டுள்ளது.

 

சர்வதேச செய்திகள்

அமெரிக்கா நாடாளுமன்ற தேர்தலில் 5 இந்தியர்கள் வெற்றி

  • அமெரிக்கா நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைத்தேர்தல் 08/11/2022 அன்று நடைபெற்றது அதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த 5 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
  • ஸ்ரீ தனேதர்,ராஜா கிருஷ்ணா மூர்த்தி,ரோ கன்னா,பிரமீளா ஜெயபால் ஆகியோர் வெற்றி பெற்றனர் மேலும் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில்19 கோடி அமெரிக்கர்களில் ஒரு சதவீதம் இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

 

மாநில செய்திகள்

பெங்களூரு புதிய விமான நிலையம் திறப்பு

  • பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2-வது முனையத்தையும் மற்றும் 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பே கவுடா சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
  • மேலும் தென்னிந்தியாவின் முதலாவது மற்றும் நாட்டின் 5-வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை சென்னை – மைசூரு இடையே பிரதமர் நரேந்திர‌ மோடி 11/11/2022 அன்று  தொடங்கி வைக்கிறார்.

 

பொருளாதார செய்திகள்

இறையாண்மை பசுமைப் பத்திரங்கள் கட்டமைப்பு  திட்டம் 

  • இந்தியாவில் இறையாண்மை பசுமைப் பத்திரங்கள் கட்டமைப்பிற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். பசுமைப் பத்திரங்கள் என்பது சுற்றுச்சூழலுக்கு நிலையான மற்றும் காலநிலைக்கு ஏற்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வருமானத்தை உருவாக்கும் நிதி கருவிகள் ஆகும்.
  • இந்த ஒப்புதல், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்குகளை நோக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை மேலும் சிறப்பாக செயல் பட உதவியாக அமையும்.

 

நியமனங்கள்

இந்திய சட்ட ஆணைய உறுப்பினராக உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் நியமனம்

  • மத்திய அரசு 22-வது சட்ட ஆணையத்தை அமைத்துள்ளது. ஆணையத்தின் தலைவராக கர்நாடக மாநில முன்னாள் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆணையத்தின் உறுப்பினர்களாக கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.சங்கரன், பேராசிரியர்கள் ஆனந்த் பாலிவால், டி.பி.வர்மா, ரக ஆர்யா,மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் மா.கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

புத்தக வெளியீடு

தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின் லஞ்ச ஒழிப்பு இதழின் 1வது பதிப்பு

  • அனைத்து பங்குதாரர்களிடையே நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதில் NMDC இன் உறுதிப்பாட்டை வலுப்படுத்த, NMDC லஞ்ச ஒழிப்பு துறை, ஹைதராபாத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதன் உள்-லஞ்ச ஒழிப்பு இதழான “சுபோத்” இன் முதல் பதிப்பை வெளியிட்டது.
  • ஸ்ரீ சுமித் டெப் CMD, NMDC, இயக்குனர் (நிதி) ஸ்ரீ அமிதவ முகர்ஜி, இயக்குனர் (தயாரிப்பு) ஸ்ரீ திலீப் குமார் மொஹந்தி முன்னிலையில் இதழை வெளியிட்டார்மற்றும் இந்த இதழ் ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிடப்படும்.                  

                                      

விருதுகள்

சிறந்த சீர்திருத்த மாநில விருது

  • டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுக்கு சிறந்த சீர்திருத்த மாநில விருதை பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி சுஷில் மோடி வழங்கினார்.
  • இவ்விருதை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மத்திய அரசு விருது

  • கொச்சியில் நடை பெற்ற 15-வது இந்திய நகர்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ‘சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்’ என்ற விருது வழங்கப்பட்டது.
  • சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Chennai Bus’ என்ற செயலியை திறம்பட செயல்படுத்தியதற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் வணிக விருதுகள் 2022

  • இந்திய உணவு மற்றும் விவசாய சபை (ICFA), அதிக எண்ணிக்கையிலான தேசிய/சர்வதேச தொழில்துறை சங்கங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய அரசாங்க அமைப்பான “AgroWorld 2022”- India International Agro Trade and Technology Fair – 2022 ஐ நவம்பர் 9 முதல் 11 வரை ஏற்பாடு செய்துள்ளது.
  • இச்சங்கத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், மீன்பிடித் துறையில் செய்த முன்மாதிரியான பணிகளுக்காக மீன்வளத் துறையின் கீழ் சிறந்த வேளாண் வணிக விருதுக்காக “இந்திய வேளாண் வணிக விருதுகள் 2022” வழங்கப்பட்டது.

 

விளையாட்டு செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20ஐ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் சூர்யகுமார் யாதவ்(869 புள்ளி) முதல் இடத்தை பிடித்துள்ளார்.
  • பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 830 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே 779 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.இந்த முறை பட்டியலில் விராட் கோலி 11 -ம் இடத்தை பிடித்துள்ளார்.

 

முக்கிய தினம்

தேசிய கல்வி தினம்

  • சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 அன்று தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டின் தேசிய கல்வி தினத்தின் கருப்பொருள் “Changing Course, Transforming Education.”

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!