நடப்பு நிகழ்வுகள் – 10 நவம்பர் 2022
தேசிய செய்திகள்
AIM பெண்களை மையமாகக் கொண்ட சவால்களை அறிமுகப்படுத்துகிறது
- அடல் இன்னோவேஷன் மிஷன் (AIM), NITI ஆயோக் இன்று அடல் நியூ இந்தியா சேலஞ்ச் (ANIC) 2வது பதிப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ் பெண்களை மையமாகக் கொண்ட சவால்களை அறிமுகப்படுத்துகிறது.
- ANIC இன் பெண் மையச் சவால்கள், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலிருந்தும் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்கிறது.
NMCG –ன் 12வது வெபினார் பதிப்பை ஏற்பாடு செய்துள்ளது
- பல்கலைக்கழகங்களுடனான மாதாந்திர வெபினார் தொடரின் 12வது பதிப்பு ‘இளைஞர் மனதைத் தூண்டுகிறது:
- புத்துணர்ச்சியூட்டும் நதி’ தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தால் (NMCG) ஏற்பாடு செய்யப்பட்டது.
- வெபினார் தொடர்களின் நோக்கம், நீர் பாதுகாப்பு மற்றும் நதி புத்துயிர் பற்றிய முக்கியமான பிரச்சினைகளில் இளைய தலைமுறையினருடன் தொடர்புகொள்வதாகும், மற்றும் வெபினாரின் கருப்பொருள் ‘பொது பங்கேற்பு’ ஆகும்.
சர்வதேச செய்திகள்
ஆசிய பல்கலை கழகங்களின் முதல் 200 தரவரிசை பட்டியல் வெளியீடு
- சர்வதேச தரவரிசை கழகங்களில் ஒன்றான கியூ.எஸ். (குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்) அமைப்பு 2023-ம் ஆண்டுக்கான ஆசிய பல்கலை கழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இதில் இந்தியாவின் 19 பல்கலை கழகங்கள் இடம் பெற்று உள்ளன. இதில் மும்பை ஐ.ஐ.டி. மீண்டும் இந்த ஆண்டில் 40வது இடம் பிடித்து உள்ளது. டெல்லி ஐ.ஐ.டி. 46-வது இடமும், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி. 52-வது இடமும் பிடித்து உள்ளன. தமிழகத்தின் சென்னை ஐ.ஐ.டி. 53-வது இடம் பிடித்து உள்ளது.
ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல் வெளியீடு
- கொரோனா ஊரடங்கால் தொழில் செயல்பாடுகள் முடங்கிய நிலையில் நெருக்கடிகளை எதிர்கொண்டு தங்கள் தொழிலை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய 20 ஆசிய பெண் தொழில் தலைவர்களின் பெயர் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சோமா மண்டல், எம்க்யூர் பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நமீதா தாப்பர், ஹோனசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் இணை நிறுவனர் கஜல் அலக் ஆகிய 3 இந்திய பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
மாநில செய்திகள்
உத்தரகாண்ட் மாநிலம் உருவான தினம் – நவம்பர் 9
- 2000 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி இந்தியாவின் 27 வது மாநிலமாக உத்தரகாண்ட் உருவாக்கப்பட்டது, இது வடக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
- இமயமலை மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இது, வடக்கே சீனா (திபெத்) மற்றும் கிழக்கில் நேபாளத்துடன் சர்வதேச எல்லைகளைக் கொண்ட பெரும்பாலும் மலைப்பாங்கான மாநிலமாகும்.
வணிகச் செய்திகள்
ஆதார் மூலம் UPI செயல்படுத்தலை இயக்கும் முதல் பிளேயர் PhonePe ஆகும்
- ஆதார் அடிப்படையிலான OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தி UPI செயல்படுத்தலை இயக்கியுள்ளதாக முன்னணி fintech தளமான PhonePe புதன்கிழமை அறிவித்தது.
- ஆதார் அடிப்படையிலான UPI ஆன்போர்டிங் ஃப்ளோவை வெளியிடும் முதல் UPI மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநர் (TPAP) செயலி PhonePe ஆகும்.
நியமனங்கள்
தெற்கு ரயில்வேயின் புதிய பொதுமேலாளராக ஆர்.என்.சிங் பதவியேற்பு
- தெற்கு ரயில்வே பொதுமேலாளராக இருந்த ஜான் தாமஸ், கடந்த ஜனவரி 31-ம் தேதி ஓய்வுபெற்றார்.
- இதையடுத்து, தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளர் சிலர் வகித்து வந்த இந்நிலையில், தற்போது தெற்கு ரயில்வே புதிய பொதுமேலாளராக ஆர்.என்.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொல்லியல் ஆய்வுகள்
விஜய நகர கால சிவன் கோயில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு
- திருப்பத்தூர் அருகே விஜய நகர காலத்தைச் சேர்ந்த சிவன் கோயில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கல்வெட்டு மணிபிரவாள முறையிலேயே எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டானது விஜய நகர மன்னன் அச்சுத தேவனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னன் கோயிலுக்கு அளித்துள்ள தானங்கள் குறித்து குறிப்பும் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
15ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு பரமக்குடியில் கண்டெடுப்பு
- ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி அருகே கீழக்கொடுமலூரில் பழமையான எழுத்துப் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இக்கல்வெட்டு 15ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட்
- இந்தியாவில் தனியார் விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டான விக்ரம் எஸ் – ஐ விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.
- விக்ரம் எஸ் ராக்கெட் நவம்பர் 12ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. வானிலையைப் பொறுத்து, ராக்கெட் ஏவப்படும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
- டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடைபெற்றது.
- இப்போட்டியில் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை வீழ்த்தி, பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு ரூ.12¾ கோடி பரிசாக வழங்கப்பட்டது.
- மேலும் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் வெரோனிகா குடெர்மித்தோவா (ரஷியா)-எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஜோடி நடப்பு சாம்பியனான செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-கேத்ரினா சினியகோவா இணையை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றனர். இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2¾ கோடி பரிசாக வழங்கப்பட்டது.
உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியல்
- வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் டென்மார்க் வீரரான விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் லக்ஷயா சென் 6-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 11-வது இடத்திலும், எச்.எஸ்.பிரனாய் 12-வது இடத்திலும் உள்ளனர்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 5-வது பிடித்துள்ளார். அதே சமயம் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி-2023
- IBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை 2023-இல் இந்தியா நடத்த உள்ளது.
- இப்போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MoU) சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (IBA) மற்றும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (BFI) இடையே IBA தலைவர் உமர் கிரெம்லேவ் மற்றும் BFI தலைவர் அஜய் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
முக்கிய தினம்
தமிழ் அகராதியியல் நாள் விழா
- தமிழ் அகராதியியலின் தந்தை” என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான நவம்பர் 8ஆம் நாளைத் “தமிழ் அகராதியியல் நாள் விழா”வாகக் கொண்டாடப்படுகிறது.
- இவ்விழாவில் 2021 ஆம் ஆண்டுக்கான “தூயதமிழ்ப் பற்றாளர் விருது”, “தூயதமிழ் ஊடக விருது”, “நற்றமிழ்ப் பாவலர் விருது” ஆகிய விருதுகளை வழங்கபட்டது மேலும் 58 அறிஞர்களின் கருத்துச் செறிவார்ந்த கட்டுரைகள் அடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான “அகராதி ஆய்வு மலரும்” வெளியிடபட்டது.
சர்வதேச கணக்கியல் தினம்
- சர்வதேச கணக்கியல் தினம் (அல்லது சர்வதேச கணக்காளர்கள் தினம்) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது.
- பல நாடுகளில், இந்த நாள் நிறுவனங்களின் நிதி மற்றும் நிதி உத்திகளை சரியான முறையில் வைத்திருப்பதற்காக கணக்காளர்களை நினைவுகூரும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.