நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –24, 2019

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –24, 2019

தேசிய செய்திகள்

பிறந்த குழந்தைகளின் மரபணு நோய்களைக் கையாள்வதற்கான ‘யு.எம்.எம்.ஐ.டி என்ற முயற்சி
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பூமி அறிவியல் ,சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மரபுசார்ந்த கோளாறுகளின் மேலாண்மை மற்றும் சிகிச்சையின் தனித்துவமான முறைகள் என்ற யு.எம்.எம்.ஐ.டி முன்முயற்சியைத் தொடங்கினார் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயோடெக்னாலஜி (டிபிடி) துறையால் ஆதரிக்கப்படும் நிடான் (தேசிய மரபு சார்ந்த நோய்கள் நிர்வாகம்) கேந்த்ராக்களையும் திறந்து வைத்தார்.

உத்திர பிரதேசம்

உத்திர பிரதேசம், பி.எம்.ஜே.யின் முதல் ஆண்டு விழாவை ஆயுஷ்மான் பாரத் தினமாக கொண்டாடியது
  • பிரதமர் ஜன ஆரோக்ய யோஜ்னாவின் முதல் ஆண்டு விழாவை செப்டம்பர் 23 அன்று ஆயுஷ்மான் பாரத் தினமாக உத்தரபிரதேசம் கொண்டாடியது.
  • இந்த திட்டத்தின் கீழ், மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் 36 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.
லக்னோவிலிருந்து டெல்லிக்கு செல்லும் முதல் கார்ப்பரேட் ரயிலான  ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
  • லக்னோவிலிருந்து டெல்லிக்கு செல்லும் நாட்டின் முதல் கார்ப்பரேட் ரயிலான  “தேஜாஸ் எக்ஸ்பிரஸ்” உத்தரபிரதேசத்தில், அக்டோபர் 4 ஆம் தேதி இயங்க  தயாராக உள்ளது.
  • லக்னோவிலிருந்து ஐ.ஆர்.சி.டி.சி இயக்கவுள்ள ரயிலை முதல்வர் யோகி ஆதித்யநாத்  கோடி அசைத்து துவக்கி வைக்கவுள்ளார்.

அறிவியல்

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் காணப்பட்ட ராட்சத மண்புழு
  • மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சுமார் 950 மிமீ (3 அடிக்கு மேல்) நீளமும் மற்றும் 20 மிமீ அகலம் கொண்ட ராட்சச மண்புழு காணப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் கடலோரப் பகுதியிலும் இவ்வளவு பெரிய மண்புழு காணப்படுவது இதுவே முதல் முறை. இராட்சச  மண்புழுக்கள் பருவமழைக்காலத்திற்கு முந்தைய மற்றும்  பிந்தைய காலங்களில் இரவில் இடம்பெயரத் தொடங்கும்.
சூறாவளி புயல் ‘ஹிகா
  • செப்டம்பர் 25 அதிகாலைக்குள் சூறாவளி புயல் ‘ஹிகா’ ஓமான் கடற்கரையை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
  • அரேபிய கடலில் காற்றழுத்தம் காரணமாக ‘ஹிகா’ என்ற சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக குஜராத் கடற்கரையில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு-மத்திய அரேபிய கடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்த பின்னர் ஹிகா சூறாவளி புயலாக  தீவிரமடைந்தது.
சூறாவளி தபா தென் கொரியாவைத் தாக்கியது
  • சக்திவாய்ந்த சூறாவளியான “தபா”  தென் கொரியாவின்  தெற்கு பகுதியை தாக்கியது, இதனால் 26 பேர் காயமடைந்து சுமார் 27,790 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
  • சூறாவளி தபா முன்னர் ஜப்பானின் தெற்கு தீவுகளின் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்றுடன் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

செயலி & இனைய போர்டல்

அறிவு மேலாண்மை போர்டல் “SIDHIEE”
  • அமைச்சர்கள் ஸ்ரீ நிதின் கட்கரி மற்றும் ஸ்ரீ ஆர்.கே.சிங் ஆகியோர் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான எரிசக்தி பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டனர் மேலும் ஆற்றல் திறன் பணியகத்தின் எம்எஸ்எம்இ திட்டத்தின் கீழ் அறிவு மேலாண்மை போர்ட்டலான ““SIDHIEE”” யும் தொடங்கி வைத்தனர்.
  • ஆற்றல் திறமையான தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்வதற்காக எம்.எஸ்.எம்.இ க்களுக்கான மல்டிமீடியா டுடோரியல்களின் ஐம்பது வீடியோக்கள் உள்ளிட்ட பயனுள்ள தகவல்களை போர்டல் வழங்கும்.

மாநாடுகள்

எம்.எஸ்.எம்.இ துறையில் ஆற்றல் திறன் குறித்த தேசிய மாநாடு
  • புது தில்லியில் எம்.எஸ்.எம்.இ துறையில் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துவதற்கான தேசிய மாநாட்டை ஸ்ரீ நிதின் கட்கரி மற்றும் ஸ்ரீ ஆர்.கே.சிங் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
  • எம்.எஸ்.எம்.இ தொழில் முனைவோர், கைத்தொழில் சங்கங்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்குநர்கள், துறை எரிசக்தி வல்லுநர்கள் மற்றும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இரண்டு நாள் கான்க்ளேவ்வை எரிசக்தி திறன் பணியகம் (பி.இ.இ) ஏற்பாடு செய்துள்ளது .
காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு 2019
  • காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், 2019 காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டை 23 செப்டம்பர் 2019 அன்று காலநிலை சவாலை எதிர்கொள்ள ஏற்பாடு செய்தார்.
  • ஐ.நா 2019 காலநிலை உச்சிமாநாட்டின் தீம்: ‘Climate Action Summit 2019: A Race We Can Win. A Race We Must Win.’

விருதுகள்

ஆண்டின் சிறந்த ஃபிஃபா வீரர் விருது
  • அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, லிவர்பூல் வீரர் “விர்ஜில் வான் டிஜ்க்” மற்றும் ஐந்து முறை சிறந்த ஃபிஃபா வீரர் விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை வீழ்த்தி ஆண்டின் சிறந்த ஃபிஃபா வீரருக்கான விருதை ஆறாவது முறையாக வென்று சாதனைப்படைத்துள்ளார்

விளையாட்டு செய்திகள்

மாலத்தீவு சர்வதேச எதிர்காலத் தொடர்
  • இளம் இந்திய ஷட்லர் மால்விகா பன்சோட், மியான்மரின் தெட் ஹ்தார் துசாரை வீழ்த்தி மாலத்தீவு சர்வதேச எதிர்காலத் தொடரை வென்றார், இது அவரது முதல் பட்டமாகும் .

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!