நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –15 & 16, 2019

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –15 & 16, 2019

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 15 – சர்வதேச ஜனநாயக தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி உலகெங்கிலும் சர்வதேச ஜனநாயக தினம் கொண்டாடப்படுகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் பலப்படுத்தவும் அரசாங்கங்களை ஊக்குவிக்க 2007 ல் ஐ.நா பொதுச் சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் இது நிறுவப்பட்டது. சர்வதேச தினம் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தின் நிலையை மறுஆய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பாகும்.
  • 2019 தீம்: பங்கேற்பு
செப்டம்பர் 15 – தேசிய பொறியாளர்கள் தினம்
  • இந்தியாவின் சிறந்த பொறியியலாளர்களில் ஒருவரான சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 1968 முதல் தேசிய பொறியாளர்கள் தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
  • மைசூரில் கிருஷ்ண ராஜா சாகரா அணை கட்டுவதற்கு விஸ்வேஸ்வரயா பொறுப்பேற்றார். இத்திட்டத்தில் தலைமை பொறியாளராக இருந்தார். ஹைதராபாத்தின் வெள்ள பாதுகாப்பு அமைப்பின் தலைமை வடிவமைப்பாளராகவும் இருந்தார்.

52 வது பொறியாளர்கள் தினத்தின் தீம் “மாற்றத்திற்கான பொறியியல்.

செப்டம்பர் 16 – சர்வதேச ஓசோன் தினம்
  • ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓசோன் அடுக்கை குறைக்கும் பொருள்களின் மீது 1987 ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நெறிமுறை கையெழுத்திட்டதை நினைவுகூரும் வகையில், இந்த நாள் காலநிலை மாற்றம் மற்றும் ஓசோன் சிதைவு தொடர்பான தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.

தேசிய செய்திகள்

தூர்தர்ஷன் தொடங்கி 60 வருடங்கள் நிறைவடைந்தன
  • தூர்தர்ஷன் என்பது இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பொது சேவை ஒளிபரப்பாளராகும், தூர்தர்ஷன் செப்டம்பர் 15, 1959 அன்று டெல்லியில் நிறுவப்பட்டது.
  • இந்திய மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த ஒளிபரப்பை பெறுகின்றனர். இந்த 60 வருடங்களில் தூர்தர்ஷன் 34 செயற்கைக்கோள் சேனல்களை இயக்கும் நெட்வொர்க்காக வளர்ந்துள்ளது, தவிர முன்பதிவுகளில் டி.டி.எச் சேவையை இலவசமாக வழங்குகிறது.
நீர்மஹால் ஜல் உட்சவ்
  • திரிபுராவில், ருத்ராசாகர் ஏரியில் மூன்று நாள் நடந்த பாரம்பரிய நீர்மஹால் ஜல் உட்சவ் கண்கவர் படகுப் பந்தயம் மற்றும் நீச்சல் போட்டிகளுடன் முடிவடைந்தது.
  • 1930 ஆம் ஆண்டில் மகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் மாணிக்காவால், ருத்ராசாகர் ஏரியின் நடுவில் கட்டப்பட்ட நீர் அரண்மனையே நீர்மஹால் ஆகும். இது கோடை காலத்தில் அவரது ஓய்வுக்காக முகலாய கட்டிடக்கலையில்  கட்டப்பட்டது ஆகும்.
தீட்சி  நீர்மின் திட்டம்
  • அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு, தீட்சி நீர் மின் திட்டத்தை அந்த மாநில மக்களுக்கு அர்ப்பணித்தார்.
  • மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள தீட்சி கிராமத்தில் 24 மெகா வாட் நீர் மின் திட்டம் நிறுவப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்திலிருந்து மின் உற்பத்தியில் பயன்பெறும் ஒரே மாநிலம் அருணாச்சல பிரதேசம் ஆகும். அதன் செயல்பாட்டின் 2 வது ஆண்டிலிருந்து மாநில அரசு 10% இலவச மின்சாரத்தை பெறும் .

சர்வதேச செய்திகள்

இந்திய ஜனாதிபதி சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார்
  • 2019 செப்டம்பர் 14 ஆம் தேதி, இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்தின் வில்லெனுவேவில் மகாத்மா காந்தியின் சிலையை கேன்டன் வட் மாவட்டத்தின்  மேயர்  மற்றும் பிற பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
  • ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தில் உள்ளது. இருநாடுகளின் வர்த்தக அளவு சுமார் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
மாலத்தீவு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டம்
  • தேசிய நல்லாட்சிக்கான மையம் (என்.சி.ஜி.ஜி) மற்றும் மாலத்தீவு சிவில் சர்வீஸ் கமிஷன் (சி.எஸ்.சி) ஆகியவற்றுக்கு இடையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில், மாலத்தீவு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டம் , இந்தியா-மாலத்தீவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 2019 செப்டம்பர் 16-28 வரை முசோரி மற்றும் டெல்லியில் நடத்தப்படும . 32 உறுப்பினர்கள் மாலத்தீவு குழு முசோரியில் உள்ள என்.சி.ஜி.ஜி வளாகத்திற்கு வந்துள்ளனர்.
செயலி & இனைய போர்டல்
இ-சரல் இந்தி வாக்யா கோஷ் மற்றும் இ-மஹா ஷப்தா கோஷ் மொபைல் பயன்பாடு
  • ஸ்ரீ அமித் ஷா “இ-சரல் இந்தி வாக்யா கோஷ் மற்றும்இ-மஹா ஷப்தா கோஷ்” என இரண்டு மொபைல் பயன்பாட்டினை அறிமுகப்படுத்தினார். இந்தி வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அதிகாரப்பூர்வ மொழித் துறையின் ஒரு முயற்சியே இந்த  மொபைல் பயன்பாடாகும்.
  • அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை பிரிவுகளில் இந்தி மொழிக்கு பங்களித்ததற்காக ராஜ்பஷா கவுரவ் புராஸ்கர் மற்றும் ராஜ்பஷா கீர்த்தி புராஸ்கர் ஆகிய விருதையும் அமித் ஷாஹ் வழங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்தியாவும் சுவிட்சர்லாந்தும், இரு நாடுகளின் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு கூட்டணியை உருவாக்குவதற்கும், லொசேன் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியை புதுப்பிக்கவும் மற்றும் காலநிலை மாற்றத் துறையில் ஒத்துழைப்புக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டன.
  • தகவல் பரிமாற்றத்தின் கட்டமைப்பின் கீழ் வரி விஷயங்கள் குறித்த தகவல்களைப் பகிர்வது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். தகவல் பகிர்வு இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விருதுகள்

சிறந்த பொறியாளர்கான விருது
  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, ரயில்வே வாரியத்தின் தலைவர் ஸ்ரீ வினோத் குமார் யாதவுக்கு சிறந்த பொறியாளர் விருதை வழங்கினார்.
  • புதுதில்லியில் பொறியியல் நிறுவனம் ஏற்பாடு செய்த 52 வது பொறியாளர்கள் தினத்தை குறிக்கும் சிறப்பு நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

யு -19 ஆசிய கோப்பையை இந்தியா வென்றது
  • கொழும்பில் நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா, பங்களாதேஷை  ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
ஐ.பி.எஸ்.எஃப் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்
  • பங்கஜ் அத்வானி, மியான்மரில் நடந்த ஐ.பி.எஸ்.எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் நான்காவது இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 22  உலக பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அத்வானி மியான்மரின் நா த்வேவை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது  .
பெல்ஜிய சர்வதேச பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பட்டத்தை லக்ஷ்ய சென் வென்றுள்ளார்
  • பேட்மிண்டனில், பெல்ஜியம் சர்வதேச பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  வளர்ந்து வரும்  இந்திய  வீரர்  “லக்ஷ்ய சென்”, டென்மார்க்கின் விக்டர் ஸ்வென்ட்சனை நேர் செட்களில் தோற்கடித்து பட்டத்தை வென்றார் .
வியட்நாம் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பட்டம்
  • பேட்மிண்டனில், ஹோ சி மின் நகரில் நடந்த விறுவிறுப்பான ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில்   சீனாவின் சன் ஃபை சியாங்கை தோற்கடித்து, இந்தியாவின் சவுரப் வர்மா வியட்நாம் ஓபன் சூப்பர் 100 பட்டத்தை வென்றார்.
  • இதன் மூலம் நடப்பு ஆண்டில் வர்மாவின் இரண்டாவது சூப்பர் 100 வெற்றி இதுவாகும். முன்னதாக ஆகஸ்டில் ஹைதராபாத் ஓபனை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
மியான்மர் சர்வதேச  ஆண்கள் ஒற்றையர் பட்டம்
  • பேட்மிண்டனில் யாங்கோனில் நடந்த விறுவிறுப்பான ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கவுசல் தர்மர் இந்தோனேசியாவின் கரோனோ கரோனோவை வீழ்த்தி மியான்மர் சர்வதேச தொடரை வென்றார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!