நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 25, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 25, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

தேசிய செய்திகள்

தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான மையத்தை ஐ சி எம் ஆர் தொடங்கியது
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) மருத்துவ புள்ளிவிவரங்களுக்கான தேசிய நிறுவனம் (ஐ.சி.எம்.ஆர்-நிம்ஸ்), மக்கள் தொகை கவுன்சிலுடன் இணைந்து தேசிய தரவு தர மன்றத்தை (என்.டி.கியூ.எஃப்) அறிமுகப்படுத்தியது.

பீகார்

சந்தேகத்துக்குரிய விண்கல்  பீகாரில் கண்டுபிடிப்பு
  • பீகாரின் மதுபானி மாவட்டத்தில் 10 கிலோகிராம் எடையுள்ள மற்றும் காந்த பண்புகளைக் கொண்ட ஒரு விண்கல் ஜூலை 24 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, முதலமைச்சர் நிதீஷ் குமாரின் அறிவுறுத்தலின் பேரில் அவ்விண்கல் பாட்னாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

திரிபுரா

திரிபுராவில் மின் திட்டங்களுக்கு ஏடிபி சுமார் 2000 கோடி ரூபாய் வழங்கவுள்ளது
  • திரிபுராவில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக 1,925 கோடி ரூபாய் திட்டத்தை ஆசிய மேம்பாட்டு வங்கி அனுமதித்துள்ளது. ரோக்கியா திட்டத்தின் திறனை மேம்படுத்துவதற்கும், கும்தி ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்தை நவீனப்படுத்துவதற்கும் இந்த திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

இந்தியா-நேபாள உறவை மேலும் வலுப்படுத்தும் மோத்திகரி- அமலேக் கஞ்ச் எண்ணெய் குழாய் இணைப்பு
  • மோத்திகரி- அமலேக் கஞ்ச் எண்ணெய் குழாய் இணைப்பு எனும் மைல்கல் திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐஓசி) மற்றும் நேபாள ஆயில் கார்ப்பரேஷன் (என்ஓசி) இணைந்து நிறைவு செய்துள்ளது. இது இந்தியாவிலிருந்து வரும் முதல் நாடுகடந்த பெட்ரோலிய குழாய் மற்றும் முதல் தெற்காசிய எண்ணெய் குழாய் நடைபாதையாகும். அதுமட்டுமன்றி இது நேபாளத்தின் முதல் எண்ணெய் குழாய் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல்

கடந்த 3 ஆண்டுகளில் 239 செயற்கைக்கோள்களை ஏவியது இஸ்ரோவின் அன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்
  • கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 6,289 கோடி ரூபாய் மதிப்புள்ள 239 செயற்கைக்கோள்களை இஸ்ரோவின் வணிகப் பிரிவான அன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம் & பொருளாதாரம்

பேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதம்
  • நுகர்வோரின் தனியுரிமையை மீறியதற்காக அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் பேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்தனர். இதுவரை விதிமீறலுக்கும் அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் இது ஒன்றாகும்.
அமெரிக்காவும் சீனாவும் ஜூலை 30 அன்று ஷாங்காயில் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளன
  • அமெரிக்கா மற்றும் சீன பேச்சுவார்த்தையாளர்கள் ஜூலை 30 அன்று ஷாங்காயில் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவுள்ளனர் , “அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதே இப்பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்

சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய நிறுவனத்தை  ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.ஓ.எச் உடன் இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய நிறுவனத்தை ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.ஓ.எச் உடன் இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பொது நிதிகளை திறம்பட நிர்வகிப்பதோடு , தொழில்சார் சுகாதாரத் துறையில் மேம்பட்ட நிபுணத்துவத்தின் அடிப்படையில் இரு நிறுவனங்களுக்கும் உதவும்.

விருதுகள்

ஐஐடி-மெட்ராஸ் அணி எலோன் மஸ்க்கின் பாராட்டு விருதை வென்றது
  • ஐ.ஐ.டி-மெட்ராஸைச் சேர்ந்த மாணவர் கண்டுபிடிப்பாளர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஸ்பேஸ்எக்ஸ் ஒழுங்கமைக்கப்பட்ட போட்டியில் ஹைப்பர்லூப் பாட் வடிவமைப்பதன் மூலம் தொழில்நுட்ப தொழில்முனைவோர் எலோன் மஸ்க்கின் பாராட்டைப் பெற்றனர்.

நியமனங்கள்

ஆந்திர மாநில ஆளுநர்
  • ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள ராஜ்பவனில் ஆந்திராவின் புதிய ஆளுநராக ஸ்ரீ பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் பொறுப்பேற்றார். அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்ற செயல் தலைமை நீதிபதி சி. பிரவீன் குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அஜய் பல்லா  புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்
  • 1984 தொகுதி ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தற்போது மின் அமைச்சின் செயலாளருமான அஜய் குமார் பல்லா, உடனடியாக உள்துறை அமைச்சகத்திற்கு சிறப்பு கடமை (ஓ.எஸ்.டி) அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிதி படேல் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்
  • பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியினரான பிரிதி படேலை நாட்டின் உள்துறை செயலாளராக நியமித்துள்ளார்.

புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்

“சந்திர சேகர் – கருத்தியல் அரசியலின் கடைசி சின்னம்”- புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார்
  • நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, “சந்திர சேகர் – கருத்தியல் அரசியலின் கடைசி சின்னம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தை மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் மற்றும் திரு. ரவி தத் பாஜ்பாய் எழுதியுள்ளனர்.

தரவரிசை மற்றும் குறியீடுகள்

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு -2019ல் இந்தியா 52 வது இடத்தைப் பிடித்தது.
  • மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல், புதுடில்லியில் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டு (ஜிஐஐ) 2019 ஐ அறிமுகப்படுத்தினார்.இதில் இந்தியா 52 ஆவது இடத்தை இடித்துள்ளது.கடந்த ஆண்டு 57 ஆவது இடத்தில்  இடத்தில இருந்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

தேசிய விளையாட்டுக்களை நடத்த கோவா அரசு புதிய தேதிகளை கேட்டுள்ளது.
  • தேசிய விளையாட்டுக்களை நடத்துவதற்கு கோவா அரசு புதிய தேதிகளை கோரியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டுகளை நடத்துவதற்கான காலக்கெடுவை அடிக்கடி தவறவிட்டதற்காக கோவா அரசுக்கு ஐ.ஓ.ஏ சமீபத்தில் அபராதம் விதித்தது. முன்னதாக தேசிய விளையாட்டுக்கள் மார்ச்-ஏப்ரல் 2019 இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் மக்களவை தேர்தல்கள், மாநிலத்தில் இடைத்தேர்தல் மற்றும் எச்.எஸ்.சி தேர்வுகள் காரணமாக நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணுக் கழிவுகளில்  தயாரிக்கப்பட்ட பதக்கங்களை வெளியிட்டது
  • டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் விளையாட்டு வீரர்களின் “ஆற்றலை” பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதக்கங்களை வெளியிட்டனர். பழைய மின்னணு கழிவுகளில் சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து அவை தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!