நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 22, 2019
TNPSC Group 4 OnlineTestSeries 2019
முக்கியமான நாட்கள்
ஆகஸ்ட் 22 – மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்
- பொதுச் சபை A / RES / 73/296 என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, ஆகஸ்ட் 22 ஐ “மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்” என்று நியமித்தது. இது மத சிறுபான்மையினருக்கு, மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் அல்லது பெயரில் பாதிப்பு ஏற்படுவதை கண்டிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது.
தேசிய செய்திகள்
டிசம்பர் 2019 முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்படவுள்ளது
- இந்த ஆண்டு டிசம்பர் முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டாக்ஸ் கட்டாயமாகிவிடும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். ஃபாஸ்டாக்கை பெற்ற வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் நிறுத்தாமல் பிரத்யேக ஃபாஸ்டாக் பாதை வழியாக பயணிக்க முடியும்.
மாநாடுகள்
நிலையான உணவு மதிப்பு சங்கிலிகளின் திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு
- மேம்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரத்திற்கான நிலையான உணவு மதிப்பு சங்கிலிகளின் திறனை வளர்ப்பது குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (என்.பி.சி) ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஆசிய உற்பத்தித்திறன் அமைப்புடன் சேர்ந்து புதுதில்லியில் தொடங்கியது.
புத்தகங்கள் & ஆசிரியர்கள்
மனு காந்தியின் டைரி
- நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல் ‘மனு காந்தியின் டைரி’ (1943-44) புத்தகத்தை வெளியிட்டார் .ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் உடன் இணைந்து மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்திய தேசிய ஆவணக்காப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது. குஜராத்தியில் இருந்த மனு காந்தியின் டைரியை டாக்டர் திருதிப் சுஹ்ருத் திருத்தி மொழிபெயர்த்துள்ளார். மனு காந்தி (மிருதுலா) மகாத்மா காந்தியின் நெருங்கிய உறவினர் ஆவார்
தரவரிசை & குறியீடுகள்
மின்சார அமைச்சர் ஸ்ரீ ஆர்.கே.சிங் SARAL ‘மாநில சூரியகூரை ஈர்ப்பு குறியீட்டை அறிமுகப்படுத்தினார்
- மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ஸ்ரீ ஆர்.கே.சிங், மாநில சூரியகூரை ஈர்ப்பு குறியீட்டை-“சாரல் “அறிமுகப்படுத்தினார். சூரியகூரை மேம்பாட்டுக்கான இந்திய மாநிலங்களின் மதிப்பிடும் குறியீட்டில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திரா முறையே 2, 3 மற்றும் 4 வது இடங்களைப் பெற்றுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவிற்கும் சாம்பியாவிற்கும் இடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
- புவியியல் மற்றும் கனிம வளங்கள், பாதுகாப்பு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தமும் மேலும் இந்தியாவின் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் ஜாம்பியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிப்ளமசி அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் மற்றும் ஈ.வி.பி.ஏ.பி நெட்வொர்க் திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சாம்பியாவின் தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் என மொத்தம் ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
நியமனங்கள்
ராஜீவ் கவுபா புதிய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
- மத்திய உள்துறை செயலாளரான ராஜீவ் கவுபா புதிய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் ஜார்கண்ட் கேடரின் 1982 பேட்சின் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இந்த மாதம் 30 ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டு கால அவகாசத்துடன் திரு கவுபாவை அமைச்சரவை செயலாளராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அஜய் குமார் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
- அஜய் குமாரை பாதுகாப்பு செயலாளராக அரசு நியமித்துள்ளது. அஜய் குமார், கேரள கேடரின் 1985 பேட்சின் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார், இவர் தற்போது பாதுகாப்பு உற்பத்தித் துறையின் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
லோக்பாலின் செயலாளர்
- ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஸ்ரீ பிரிஜ் குமார் அகர்வால், லோக்பாலின் செயலாளராக இந்திய அரசாங்கத்தின் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
திட்டங்கள்
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் நிஷ்டாவை அறிமுகப்படுத்தினார்
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ தொடக்க கல்வியின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்காகவும், பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான முன்னேற்றத்திற்காகவும் புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நிஷ்டாவை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியின் போது, நிஷ்டா வலைத்தளம், பயிற்சி தொகுதிகள், ப்ரைமர் கையேடு மற்றும் மொபைல் பயன்பாடு ஆகியவை அமைச்சரால் தொடங்கப்பட்டன.
விளையாட்டு செய்திகள்
ஓபி-ப்ளூ ஃப்ரீடம்
விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு மற்றும் இந்தியாவின் முன்னாள் கால்பந்து கேப்டன் பைச்சுங் பூட்டியா ஆகியோர் ஓபி -ப்ளூ ஃப்ரீடம் என்ற ஸ்கூபா டைவிங் திட்டத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.இது ஒரு முன்முயற்சியாகும், இதில் ஆயுதப்படை வீரர்கள் ஒரு குழு விளையாட்டு ஆர்வலர்களுக்கு உயிர்க்காக்கும் பயிற்சி மற்றும் தற்காப்பு பயிற்சியை அளிக்கவுள்ளார்கள் . ஓபி-ப்ளூ ஃப்ரீடம் என்பது நாடு தழுவிய தகவமைப்பு ஸ்கூபா டைவிங் திட்டமாகும், இது மாற்றுத்திறனாளிகளுக்காகவும் , உடல் திறன் உடையவர்களுக்காகவும் ஏற்பாடு செயப்பட்ட திட்டமாகும்.
சீனாவின் செங்டூவில் நடந்த உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டுகளில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் 10 பதக்கங்களை வென்றனர்
- உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டியில் உலகெங்கிலும் 70+ நாடுகளைச் சேர்ந்த 10,000 விளையாட்டு வீரர்கள் 60+ விளையாட்டுகளில் போட்டியிடுவர். உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டி 2019 ஆகஸ்ட் 18 முதல் சீனாவின் செங்டூவில் நடைபெற்றது, இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற சிஐஎஸ்எஃப் விளையாட்டு வீரர்கள் வெவ்வேறு விளையாட்டு போட்டியில் பத்து (10) பதக்கங்களை வென்றனர்.
PDF Download
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்