நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 26, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 26, 2019

முக்கிய தினம்:

ஏப்ரல் 26 – உலக அறிவுசார் சொத்துரிமை தினம் 

  • அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 26 இல் உருவாக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. 2019 கருப்பொருள்: Reach for Gold: IP and Sports.

தேசிய நிகழ்வுகள்:

1947 உடன்படிக்கைகளை மறுபரிசீலனை  செய்ய திட்டம்

  • ஒப்பனை இருப்பு கொண்ட 25 ஹிமாஸ் அல்லது காசி ராஜ்யங்களின் கூட்டமைப்பு, தற்போது மேகாலயா இந்தியாவின் ஒரு பாகத்தை உருவாக்கிய 1948 உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆலோசனை சட்ட குழுவின் தலைவர் மற்றும் காசி ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தலைவர் பிஸ்ஷங்காய்ஸ் என் சியெம் ஆவார்.

ஆந்திரப் பிரதேசம்:

VPTயின் பசுமை விருது

  • நாட்டின் சுற்றுச்சூழல் நட்பு துறைமுகங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் துறைமுகம் (VPT) AP Greenery மற்றும் Beautification Corporation ன் பசுமை விருதினை வென்றுள்ளது. இது இந்தியாவின் தரக் கவுன்சிலின் இரண்டாவது சுத்திகரிக்கப்பட்ட துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது

வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:

மைக்ரோசாப்ட் முதல் தடவையாக டிரில்லியன் டாலர் மதிப்பைக் பெற்றுள்ளது

  • மைக்ரோசாப்ட் முதன்முறையாக டிரில்லியன் டாலர் மதிப்பு குறியிட்டை அடைந்துள்ளது. மற்றும் இந்த மைல்கல் குறியீட்டை எட்டும் மூன்றாவது தொழில்நுட்ப நிறுவனமாக மைக்ரோசாப்ட் உள்ளது. தற்போதைய மட்டங்களில், மைக்ரோசாப்ட் உலகின் மிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 2020ல் இருந்து டீசல் கார்களை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு

  • இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம், ஏப்ரல் 1, 2020 முதல் டீசல் கார்களை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

சர்வேதேச நிகழ்வுகள்:

அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சி 2019ல் இந்திய பெவிலியன்

  • 29 வது அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதம மந்திரி திரு சைப் பின் சையத் அல் நஹாயன் இந்தியா பெவிலியனை திறந்துவைத்தார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 முதல் 30 வரை நடைபெறும் புத்தக கண்காட்சிக்கான சிறப்பு விருந்தினராக இந்தியா திகழ்கிறது குறிப்பிடத்தக்கது.

துபாயின் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இலங்கை கொடி

  • 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக துபாயின் பிரபல சின்னமான உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இலங்கையின் கொடியை வண்ண விளக்குகளால் ஒளிர விட்டுள்ளனர்.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா

  • 250 க்கும் மேற்பட்ட உயிர்சேதமடைந்த ஈஸ்டர் தாக்குதல், உளவுத்துறையில் “ஒரு பெரிய பின்னடைவு” என்று அரசாங்கம் கூறியதை அடுத்து இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பாதுகாப்பு மந்திரி ஹேமசீரி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார்.

 ஒரு மில்லியன் இனங்கள் அழியும் ஆபத்துக்காலத்தில் உள்ளது : U.N. அறிக்கை

  • AFP மூலம் பெறப்பட்ட U.N. அறிக்கையின் படி சுமார் ஒரு மில்லியன் இனங்கள் வரை மனித பாதிப்பு காரணமாக அழியும் ஆபத்துக்காலத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரேனிய மொழிப் பயன்பாட்டை பலப்படுத்த சட்டம்

  • உத்தியோகபூர்வ அமைப்புகளில் உக்ரேனிய மொழியை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள்:

நீச்சல் வீரர் லீகித் உலக தரநிலையில் ‘பி’ தரத்தை அடைந்துள்ளார்

  • இந்திய நீச்சல் வீரரான எஸ்.பீ. லிக்கித் 62 வது மலேசிய ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் ஆண்கள் 100 மீட்டர் போட்டியில் தங்கம் வென்றதை அடுத்து 2019 FINA உலக சாம்பியன்ஷிப்பிற்கான ‘பி’ தகுதித் தரத்தை அடைந்துள்ளார்.

அர்ஜன் சிங் மெமோரியல் சர்வதேச ஹாக்கி போட்டி 2019

  • ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 25 வரை, சண்டிகரில் இந்திய வான்படையின் 2 வது மார்ஷல் அர்ஜன் சிங் மெமோரியல் சர்வதேச ஹாக்கி போட்டியில் நடைபெற்றது. இதில். ஐ.சி.எஃப்., சென்னை அணி ஹைதராபாத் அணியை பெனால்டி ஷூட்அவுட் சுற்று மூலம் தோற்கடித்தது.

ISSF துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை 2019

  • பெய்ஜிங்கில் நடந்த ISSF துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை 2019ல் கலப்பு ஏர் ரைபிள் மற்றும் கலப்பு ஏர் பிஸ்டல் ஆகிய இரண்டு போட்டிகளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தங்கம் வென்றனர்.
  • 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பாக்கர் மற்றும் சௌத்ரியும், ஏர் ரைபிள் போட்டியில் அஞ்ஜூம் மௌத்கில் மற்றும் திவ்யாஞ்ச் சிங் பன்வார் ஆகியோர் தங்கம் வென்றனர்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019

  • இந்தியா 17 பதக்கங்களுடன் நான்காவது இடத்தை பிடித்தது, இதில் மூன்று தங்கம் மற்றும் ஏழு வெள்ளி பதக்கங்கள் அடங்கும்.

PDF Download

ஏப்ரல் 26 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!