நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 25, 2018

0

நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 25, 2018

தேசிய செய்திகள்

அசாம்

இரண்டாம் கவுகாத்தி சர்வதேச திரைப்பட விழா

  • அசாமில் இரண்டாவது கவுகாத்தி சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. முதல்வர் சர்பானந்த சோனோவால் விழாவை தொடங்கி வைப்பார்.

புது தில்லி

அனைத்து ரயில் நிலையங்கள் பயணிகள் செல்லும் ரயில்களில் முதல் உதவி அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் அறிமுகம்

  • அனைத்து இரயில் நிலையங்கள் மற்றும் அனைத்து பயணிகள் செல்லும் ரயில்களில் முதல் உதவி அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் இந்திய இரயில்வேயால் அறிமுகம் செய்யப்பட்டது.

மகாராஷ்டிரம்

இண்டர்நெட் இணைப்பு மற்றும் இலவச செட் டாப் பெட்டிகள் ஒரு லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படும்

  • மாநிலத்தில் கிராமப்புறங்களில் கல்வி, இண்டர்நெட் இணைப்பு மற்றும் இலவச செட் டாப் பாக்ஸ்கள் ஆகியவற்றை வழங்க கல்வித் துறை மற்றும் ஸ்ட்ரீம் செலவின நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மும்பையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படும்.

சர்வதேச செய்திகள்

தெற்காசிய பிராந்திய WASH கண்டுபிடிப்பு

  • இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தெற்கு ஆசியாவின் யுனிசெப் தூதர் சச்சின் டெண்டுல்கர், பூட்டான் தலைநகரான திம்புவில் தெற்காசிய பிராந்திய WASH கண்டுபிடிப்புக்கான வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஐக்கிய நாடுகளின் தலைமையக பொது சபை மண்டபத்தில் 2018 .நா. தின கச்சேரி நடைபெறும்

  • நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையக பொது சபை மண்டபத்தில் 2018 ஐ.நா. தின கச்சேரி நடைபெறுகிறது.
  • இந்த ஆண்டு கச்சேரியின் தீம் “Traditions of Peace and Non-violence”

ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீது தடை விதிக்கிறது

  • ஐரோப்பிய பாராளுமன்றம் கடல், வயல் மற்றும் நீர்வழிகள் ஆகியவற்றில் மாசுபாட்டை எதிர்க்க ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் மீது ஒரு பரவலான தடையை விதித்தது.

வணிகம் & பொருளாதாரம்

சீனாவிற்கு பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்காக ஐந்து அரிசி ஆலைகளுக்கு அரசு அனுமதி

  • சீனாவுக்கு பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்காக ஐந்து அரிசி ஆலைகளுக்கு அரசு அனுமதி அளித்தது. இதன் மூலம், சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் இந்திய ஆலைகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் இருந்து 5 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை சீனா வாங்குகிறது. வர்த்தக பற்றாக்குறையை நிர்வகிப்பதற்கு சீனாவுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்ய இந்தியா விரும்புகிறது.

மாநாடுகள்

சர்வதேச ஆரிய மஹாசம்மேளன்  – 2018

  • இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சர்வதேச ஆரிய மஹாசம்மேளன் 2018 (அக்டோபர் 25, 2018)ஐ டெல்லியில் தொடங்கி வைத்தார்.

10 வது அணு சக்தி கூட்டமைப்பு

  • டாக்டர் ஜிதேந்திர சிங் புது டெல்லியில் 10 வது அணு சக்தி கூட்டமைப்பை தொடங்கி வைத்தார். தீம் : ‘Nuclear Power- Towards a Clean & Base Load Energy’
  • கைகா அணு மின் நிலைய அலகு 895 நாட்களுக்கு தடையின்றி இயங்கிய அழுத்தம் நிறைந்த கன நீர் உலை [PHWR] எனும் உலக சாதனை படைத்தது

ஆரம்ப சுகாதார பராமரிப்பு பற்றிய 2 வது சர்வதேச மாநாடு

  • உலகளாவிய ஆரோக்கிய பராமரிப்பு [UHC] மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு[SDG]களை நோக்கிய ஆரம்ப சுகாதார பராமரிப்பு பற்றிய 2 வது சர்வதேச மாநாட்டில் ஸ்ரீ ஜே பி நடா பங்கேற்றார். இது அஸ்தானா, கஜகஸ்தானில் நடைபெற்றது.

திட்டங்கள்

BIOFACH இந்தியா

  • வேளாண் மற்றும் பதனிடப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மற்றும் புது டில்லியில் உள்ள இந்திய-ஜெர்மனியின் வர்த்தக அமைப்பு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய கரிம தொழில் நிகழ்வான BIOFACH இந்தியாவின் திறப்பு நிகழ்ச்சியில் வர்த்தக, கைத்தொழில் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுகலந்து கலந்து கொண்டார்.

பாதுகாப்பு செய்திகள்

நேட்டோவின் மிகப்பெரிய இராணுவப்பயிற்சி

  • பனிப்போருக்குப் பிறகு நடக்கும் நேட்டோவின் மிகப்பெரிய இராணுவ பயிற்சி நார்வேயில் தொடங்கியது.

பாதுகாப்புப்படை  ஓய்வூதிய அதாலத்

  • மகாராஷ்டிராவின் பூந்த், அவுன்ட் இராணுவ நிலையத்தில் ஒரு பாதுகாப்புப்படை ஓய்வூதிய அதாலத் நடத்தப்பட்டது.

ITBP யின் 57வது தொடக்க தின அணிவகுப்பு

  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் இந்திய-திபெத்திய எல்லை காவல்துறை (ITBP) யின் 57 வது தொடக்க தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விருதுகள்

  • காமன்வெல்த் கூட்டமைப்பு பொது நிர்வாக மற்றும் மேலாண்மை விருது, 2018 – இந்தியா
கலாச்சார நல்லிணக்கத்திற்கான தாகூர் விருது
  • 2014 – மணிப்புரி நடனம் ஷா. ராஜ்குமார் சிங்கஜித் சிங்
  • 2015 – சையானட் (வங்கதேசத்தின் கலாச்சார நிறுவனம்)
  • 2016 – இந்தியாவின் மிகப் பெரிய சிற்பி, ஷா. ராம் வஞ்சி சுடர்

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டுறவை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் இணைய போர்டல் (SPARC)

  • மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர், “கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டுறவை மேம்படுத்துவதற்கான (SPARC) திட்டம்” என்ற வலைத் தளத்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.

விளையாட்டு செய்திகள்

மேற்கிந்தியத் தீவுகள் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ ஓய்வு பெறுகிறார்

  • மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!