நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 18,19 2018
முக்கியமான நாட்கள்
நவம்பர் 18 – முதல் இயற்கை மருத்துவ [நேச்சுரோபதி] தினம்
- ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் அதன் முதல் இயற்கை மருத்துவ [நேச்சுரோபதி] தினத்தை கொண்டாடுகிறது.
- யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளூர் முகாமைத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து சுகாதார முகாம்கள், பட்டறைகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துகிறது.
நவம்பர் 18 – சாலை போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவு தினம்
- சாலை போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவு தினம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சாலை போக்குவரத்து விபத்துக்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சரியான அங்கீகாரமாக நடைபெறுகிறது. இது 1993 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சாலையின் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொண்டு, சாலை அமைதி எனத்தொடங்கியது, அதற்குப்பின் 2005ல் ஐ.நா. பொது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 2018 தீம்: “Roads have Stories”
நவம்பர் 19 – உலக கழிப்பறை தினம்
- உலக கழிவறை அமைப்பின் மூலம் உலக சுகாதார நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்க உலகளாவிய கழிப்பறை தினம் (WTD) நவம்பர் 19 ம் தேதி நிறுவப்பட்டது . பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.நா. பொதுச் சபை உலக கழிப்பறை தினத்தை 2013 ல் உத்தியோகபூர்வ ஐ.நா. தினமாக அறிவித்தது.
- 2018 தீம்: When Nature Calls
Qaumi Ekta Week [தேசிய ஒருமைப்பாடு வாரம்]
- சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் துடிப்பான பெருமை, ஒருங்கிணைந்த கலாச்சாரம் மற்றும் தேசியத்துவத்தைப் போற்றி வலியுறுத்தும் வகையில், தேசிய ஒருமைப்பாட்டு வாரம் (“Qaumi Ekta Week), நாடு முழுவதும் நாளை தொடங்கி, 2018, நவம்பர் 25 வரை கொண்டாடப்பட உள்ளது.
தேசிய செய்திகள்
அரியானா
- மேற்கு புறவழி விரைவு வழித்தடத்தின் குண்டலி – மனேசர் பிரிவு மற்றும் பல்லப்கார் – முஜேசர் மெட்ரோ இணைப்பு திறப்பு விழா.
- பிரதமர் நரேந்திர மோடி வெஸ்ட் பெரிஃபரல் எக்ஸ்பிரஸ்வேயின் குண்டில்-மானேசர் பகுதி திறந்துவைத்தார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி, அரியானா மாநிலம் குருகிராம் அருகே சுல்தான்பூரில் குண்டலி – மனேசர் – பல்வால் (KMP) மேற்கு புறவழி விரைவு வழித்தடத்தின் குண்டலி – மனேசர் பிரிவை தொடங்கி வைத்தார்.
- மேலும், பல்லப்கார் – முஜேசர் மெட்ரோ இணைப்பையும் தொடங்கி வைத்த பிரதமர், விஷ்வ கர்மா திறன் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
கர்நாடகம்
தேசிய பேரழிவு நிவாரண நிதியிடம் இருந்து 546 கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி
- தேசிய பேரழிவு நிவாரண நிதியம், [என்.டி.ஆர்.எஃப்.], கர்நாடகாவிற்கு 546 கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி அளித்தது.
மகாராஷ்டிரா
மும்பையில் அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட்
- திரைப்படம் மற்றும் ஒளிப்பதிவு துறையில் இளைஞரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கு மும்பையில் அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் நிறுவனத்தை அமைக்க அரசு திட்டம்.
உத்திர பிரதேசம்
ராணி லட்சுமிபாய் ஜெயந்தி
- ராணி லட்சுமிபாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
சர்வதேச செய்திகள்
பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு
- பாகிஸ்தானுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இராணுவ உதவி வழங்குவதை நிறுத்த தனது நிர்வாகத்தின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அறிவியல் செய்திகள்
ஜிசேட்-29 வெற்றிகரமாக அதன் நோக்க சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது
- இந்தியாவின் சமீபத்திய தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசேட்-29 அதன் மூன்றாவது சுற்றுப்பாதை நடவடிக்கைகளின் போது அதன் நோக்க சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
தரவரிசை & குறியீடு
தொழில்துறை பூங்கா மதிப்பீடு முறைமை பற்றிய அறிக்கை
- தொழில், தொழில்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (DIPP), வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட தொழில்துறை பூங்கா மதிப்பீடு முறைமை அறிக்கையை வெளியிட்டார்.
மாநாடுகள்
“காவல்துறை தொலைத் தொடர்பு நவீனமயமாக்கல் மற்றும் அதிலுள்ள சவால்கள்” என்பது பற்றிய மாநாடு
- “காவல்துறை தொலைத் தொடர்பு நவீனமயமாக்கல் மற்றும் அதிலுள்ள சவால்கள்” என்பது பற்றிய இரண்டு நாள் மாநாடு புதுதில்லியில் தொடங்குகிறது. மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. மனோஜ் சின்ஹா இந்த மாநாட்டை தொடங்கிவைக்கிறார்.
- நாட்டில் காவல்துறை தொலைத் தொடர்புக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டு ஆலோசனை அமைப்பான கம்பியில்லா ஒருங்கிணைப்பு இயக்ககம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் 8-ஆவது தேசிய மாநாடு
- காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் 8-ஆவது தேசிய மாநாடு, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்குகிறது. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஜார்கண்ட் மாநில காவல்துறையுடன் இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் பணித்திறமையை அதிகரிப்பது மற்றும் குறைப்பது தொடர்பான சூழலை உருவாக்குவது பற்றி இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
நியமனங்கள்
- அஜய் பூஷண் பாண்டே – புதிய வருவாய் செயலாளர்
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டம்
- டிசம்பர் 11 அன்று மக்களவை குளிர்காலக் கூட்டம் தொடங்கும் என அறிவிப்பு.
விருதுகள்
- ஏர்சேவா சாம்பியன் விருது – சென்னை விமான நிலையம் [ஒரு வருடத்தில் நூறு சதவிகித குறை தீர்ப்புக்காக).
மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்
ஏர்சேவா [AirSewa] 2.0
- மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் மாநில சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஆகியோர் புது டெல்லியில் மேம்படுத்தப்பட்ட ஏர்செவா0 வலைப் பக்கத்தையும் மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தினர்.
விளையாட்டு செய்திகள்
ஏடிபி வேர்ல்ட் டூர்
- ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் லண்டனில் நடைபெற்ற ஏடிபி இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிக்கை வீழ்த்தி கோப்பையை வென்றார்.
- ஒரே தொடரில் இறுதிப்போட்டியில் ஜோகோவிக் மற்றும் ஃபெடரர் ஆகிய இருவரையும் தோற்கடித்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.
ITTF சேலன்ஞ் பெலாரஸ் ஓபன் டேபிள் டென்னிஸ்
- சர்வதேச டேபிள் டென்னிஸ் பெடரேசன் சேலன்ஞ் பெல்கோஸ்ட்ராக் பெலாரஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரின் U-21 ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனவ் தாக்கர் வெண்கலம் வென்றார்.
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் – பாட்மிண்டன்
- கனடாவின் மார்க்கம் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் அரைஇறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
PDF Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு