நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 13 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 13 2018

முக்கியமான நாட்கள்

நவம்பர் 13 – உலக கருணை தினம்

  • நவம்பர் 13 அன்று உலக கருணை தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக கருணை தினம் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு உலக கருணை இயக்கத்தால் தொடங்கப்பட்டது, இது 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற கருணை அமைப்புக்களின் டோக்கியோ மாநாட்டில் உருவானது ஆகும்.

விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம்

  • நிறுவனத்தில் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படை மதிப்புகளை பராமரிப்பது பற்றிய ‘விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம்’ அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை இந்திய இராணுவத்தால் அனுசரிக்கப்பட்டது.

தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசம்

ஆதாரனா திட்டம்

  • மாநில அரசு ரூ.86.03 கோடி மதிப்புள்ள சொத்துக்களை 23,000 ஏழை பயனாளிகளுக்கு எஸ்.டி.பி.சி அடிப்படையில் ஆதாரனா திட்டம் II – பெடாரிகம் பை கெலுப்பு [Pedarikam Pai Gelupu]ன் கீழ் விநியோகித்தது. பல்வேறு அரசு நிறுவனங்களின் மூலம் பயனீட்டாளர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் உபகரணங்களை வழங்குவதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஒரு நிலையான வருமானத்தை பெற இது உறுதி செய்யும்.

கோவா

கோவா அரசாங்கம் மீன் இறக்குமதியை தடை செய்தது

  • கோவா அரசு, மாநிலத்தில் மீன் இறக்குமதி மீதான தடை விதித்து உத்தரவிட்டது. கோவாவில் இறக்குமதி செய்யப்படும் மீன்களில் உத்தியோகபூர்வமாக ஃபார்மலின் இருப்பதைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோவாவில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

  • ஆயுஷ்க்கான மத்திய மாநில மந்திரி ஸ்ரீபத் நாயக் வடக்கு கோவா தர்காலில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

சர்வதேச செய்திகள்

புலி, ரைனோ தயாரிப்புகளுக்கு சீனா வர்த்தகம் தடை விதித்தது

  • புலி எலும்பு மற்றும் ரைனோ கொம்பு ஆகியவை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இருப்பினும் அவற்றின் பயன்களுக்கான எந்த ஆதாரமும் இல்லை. இதனால் இந்த விலங்குகளின் எண்ணிக்கை மிகக் குறைந்துவிட்டது. சர்வதேச விமர்சனத்திற்குப் பின் சீனா, புலி மற்றும் ரைனோ தயாரிப்புகளுக்கு சீனா வர்த்தகம் தடை விதித்தது.

மியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்

  • அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற சிறப்புக்குரிய சூ கி (வயது 73), அந்த நாட்டின் அதிகாரமிக்க தலைவராக இருந்தபோதும், ரோஹிங்யா இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்கவில்லை. இது சர்வதேச அளவில் அவருக்கு எதிராக விமர்சனங்களை ஏற்படுத்தியது.
  • இந்த நிலையில், லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஆம்னஸ்டி இன்டர்நே‌ஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அவை, சூ கியுக்கு அளிக்கப்பட்ட ‘மனசாட்சி விருது தூதர்’ என்னும் கவுரவத்தை பறித்து விட்டது.

அறிவியல் செய்திகள்

வியாழனின் சுழலும் மேகங்களின் புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டது

  • நாசாவின் ஜுனோ விண்கலம் வியாழன், வாயு கிரகத்தின் மாபெரும் பல வண்ணமயமான, சுழலும் மேகங்களின் புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டது. அக்டோபர் 29-ம் தேதி ஜூனோ தனது 16வது வியாழன் கிரகத்தின் நெருங்கிய பயணத்தை நிகழ்த்திய பொழுது இந்த படம் எடுக்கப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்

  • நவீன தகவல் தொடர்புக்கான ஜிசாட் -29 செயற்கைக் கோளைத் தாங்கியபடி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஜி- சாட் 29 செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக் கோளை, ஜிஎஸ்எல்வி மார்க் – 3 ராக்கெட் எடுத்துச் செல்கிறது. இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்5 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்த உள்ளது.

மாநாடுகள்

பொது சுகாதாரத்திற்கான யோகா சர்வதேச மாநாடு திறந்துவைக்கப்பட்டது

  • பொது சுகாதாரத்திற்கான யோகாவின் சர்வதேச மாநாடு, பஞ்சிம் [கோவா] கலா அகாடமியில் தொடங்கப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்க சந்தை (GDCM)

  • 2018 ம் ஆண்டு நவம்பர்14 – 15, 2018 ஆம் தேதி வரை 2018 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்க சந்தை மாநாட்டை(GDCM)  தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை (DIPP), வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் புதுதில்லியில் நடத்துகிறது.
  • மாநாட்டில் இசை, திரைப்படம், ஒளிபரப்பு மற்றும் வெளியீடு, அதே போல் கூட்டு மேலாண்மை, வளர்ந்து வரும் மாதிரிகள் மற்றும் சந்தை மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களின் தாக்கங்கள் குறித்த அமர்வுகள் இடம்பெறும்.

பெய்ஜிங்கில் 2வது ஸ்டார்ட் அப் இந்தியா முதலீட்டு கருத்தரங்கு

  • இந்திய இளைஞர்களிடையே புதுமை மற்றும் தொழில் முயற்சியை ஊக்குவிப்பதற்காக 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி சீனாவின் ஸ்டார்ட் அப் இந்திய சங்கம் (SIA) மற்றும் துணிகர[வென்ச்சர்] குருகுல் ஆகியோருடன் இணைந்து சீனாவில் இந்திய தூதரகம் 2 வது தொடக்க இந்திய முதலீட்டு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. நவம்பர் 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய முதலீட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

திட்டங்கள்

இந்திய காற்று விசையாழி[டர்பைன்] சான்றளிப்பு திட்டம் (IWTCS)

  • புதிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், சென்னை எரிசக்திக்கான தேசிய நிறுவனத்துடன் ஆலோசனை செய்து, இந்தியக் காற்று டர்பைன் சான்றளிப்புத் திட்டம் (IWTCS) என்று அழைக்கப்படும் புதிய திட்டத்தின் ஒரு வரைவை தயாரித்துள்ளது. பல்வேறு வழிகாட்டுதல்களை டர்பைன் சான்றிதழ் திட்டம் (IWTCS) சேர்த்துக்கொள்கிறது.
  • IWTCS பின்வரும் பங்குதாரர்களுக்கு உதவுவதற்கும் எளிதாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது; (i.) அசல் கருவி உற்பத்தியாளர்கள் (OEM கள்) (ii.) இறுதி பயனர்கள் – நுட்பங்கள், SNA கள், உருவாக்குநர்கள், IPP கள், உரிமையாளர்கள், அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் (iii.) சான்றிதழ் நிறுவனங்கள் (IV) சோதனை ஆய்வகங்கள்.

உயர்கல்வி ஆசிரியர்களுக்கு கல்வியாளர்களுக்கான தலைமை (LEAP) மற்றும் உயர் கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான ஆண்டு புத்துணர்வு நிகழ்ச்சி (ARPIT)

  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய மாநில மந்திரி சத்ய பால் சிங் இரண்டு புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தினார்; புது தில்லியில் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு கல்வியாளர்களுக்கான தலைமை (LEAP), உயர் கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான ஆண்டு புத்துணர்வு நிகழ்ச்சி (ARPIT).

பாதுகாப்பு செய்திகள்

இந்த்ரா – 2018

  • கிளர்ச்சிகளை முறியடிப்பதற்காக ஐ.நா. ஆதரவுடன் இந்தியா – ரஷ்யா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இந்த்ரா – 2018 பாபினா ராணுவ முகாமில் உள்ள (உத்தரப்பிரதேச மாநிலம்) பாபினா துப்பாக்கிச் சுடும் பயிற்சித் திடலில்  நவம்பர் 18 முதல் நடைபெற உள்ளது.

10 வது இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் ஆண்டு விழா துவக்கம்

  • இந்திய பெருங்கடல் கடற்படை சங்கத்தின் பத்தாவது ஆண்டு விழா கொச்சியில் தொடங்கியது.

ஜனவரி மாதத்தில் கடல் கண்காணிப்பு கடலோரப் பாதுகாப்பு பயிற்சி

  • இந்திய கடற்படை அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம் முதல் கடலோர பிரதான நிலப்பரப்பு மற்றும் தீவு பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியை நடத்த உள்ளது.

விருதுகள்

அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான இன்ஃபோசிஸ் விருது 2018

  • அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான இன்போசிஸ் விருது 2018 – ஆறு சிறந்த பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • நவகாந்தா பாட், கவிதா சிங், ரூப் மாலிக், நளினி அனந்தராமன், எஸ்.கே.சதீஷ் மற்றும் செந்தில் முல்லைநாதன் ஆகியோர் பெறப்பட்ட 244 பரிந்துரைகளில் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

விளையாட்டு செய்திகள்

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் விராத் கோலி, ஜஸ்ப்ரித் பூம்ரா முதலிடம்

  • ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பூம்ரா ஆகியோர் முறையே முதலிடத்தில் உள்ளனர்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!