நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 03,04, 2019
முக்கியமான நாட்கள்
மார்ச் 3 – உலக வனவிலங்கு நாள்
- டிசம்பர் 20, 2013 அன்று, 68 வது அமர்வில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் அருகி வரும் இனங்கள் மீதான சர்வதேச வர்த்தக உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான மார்ச் 3 ம் தேதியை உலக வனவிலங்கு நாளாக அறிவிக்க முடிவு செய்தது. உலகின் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் விழிப்புணர்வுக்காகவும் அதை கொண்டாடவும் தாய்லாந்தால் இது முன்மொழியப்பட்டது.
- 2019 தீம்: “Life below water: for people and planet”
தேசிய செய்திகள்
குஜராத்
அகமதாபாத் மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார்
- அஹமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதம மந்திரி திறந்து வைத்தார் மற்றும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அரியானா
அரியானா முதலமைச்சர் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கினார்
- அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தர் 4,106 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு துறைகளின் 211 அபிவிருத்தி திட்டங்களின் அடிக்கல்லை நாட்டி திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மத்தியப் பிரதேசம்
மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டிற்க்கான மையம்
- மத்திய பிரதேசத்தில் குவாலியரில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டிற்க்கான மையம் அமைக்கப்படவுள்ளது. விளையாட்டில் மாற்றுத்திறனாளிகளின் திறமையான பங்கேற்பை உறுதிப்படுத்தவும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடவும் அவர்களுக்கு இந்த மையம் உதவும் . இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா
பல்கலைக்கழகங்களில் அரசு லோக்பாலை நியமிக்கவுள்ளது
- மகாராஷ்டிரா அரசாங்கம் மாணவர் குறைகளைத் தீர்க்க விவசாய பல்கலைக்கழகம் தவிர அனைத்து பல்கலைக்கழகங்களிலும் லோக்பாலை நியமிக்கவுள்ளது . பல்கலைக் கழகங்களுக்கு லோக்பால் வைத்திருக்கும் நாட்டின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கும்.
மும்பை மாநகரின் மோனோரயிலின் இரண்டாவது கட்டம் துவங்கியது
- மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் மும்பையில் மோனோரயிலின் இரண்டாவது கட்டத்தைத் தொடங்கினர். இது நாட்டின் முதல் மோனோரயில் அமைப்பாகும்.
திரிபுரா
பல எண்ணெய், எரிவாயு திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கினார்
- திரிபுரா அகர்தலாவில் பல எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்துவைத்தார். நாட்டில் அதிகபட்சமாக 4.96 எம்.எம்.சி.சி.எம்.டி.இயற்கை எரிவாயுவை தினம் உற்பத்தி செய்து திரிபுரா இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
உத்தரப் பிரதேசம்
பிரதமர் மோடி அமேதி தொகுதியில் ஆயுத தொழிற்சாலயை திறந்து வைத்தார்
- பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் 538 கோடி ரூபாய் மதிப்புள்ள 17 அபிவிருத்தி திட்டங்களைத் தொடங்கினார். ரஷ்ய ஒத்துழைப்புடன் கலஷ்னிகோவ் வரிசையில் சமீபத்திய ரகமானா AK 203 துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையும் இதில் உள்ளடங்கியுள்ளது.
சர்வதேச செய்திகள்
பாகிஸ்தானில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் சேவையை டெல்லிக்கு மீண்டும் தொடங்கியது
- பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பதற்றம் காரணமாக தடை செய்யப்பட்டிருந்த டெல்லி மற்றும் லாகூருக்கு இடையேயான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல், ரஷ்யா சிரியாவில் இருந்து வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுவதில் ஒத்துழைக்கவுள்ளன
- இஸ்ரேலின் பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தென்யாகு, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா சிரியாவில் இருந்து வெளிநாட்டுப் படைகள் திரும்பப் பெற ஒரு கூட்டுக் குழுவை உருவாக்கஉள்ளதாக கூறினார்.
சிரியா 2011 க்குப் பிறகு முதல் அரபு கூட்டத்தில் பங்கேற்கிறது
- சிரியாவில் 2011 ஆம் ஆண்டில் பதற்றம் தொடங்கியதில் இருந்து முதல் தடவையாக அரபு நாடுகளின் கூட்டத்தில் சிரியா கலந்துகொண்டது. கடந்த டிசம்பரில் டமாஸ்கஸில் தூதரகத்தை ஏற்கனவே UAE ஐ மீண்டும் திறந்துள்ளது.
சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தரப் உறுப்பினராவதற்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது
- ஐ.நா. பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்தரப் உறுப்பினராவதற்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. பிரான்ஸ், மார்ச்சில் யூ.என்.எஸ்.சி.யின் தலைமை பதவியை ஏற்றுக் கொண்டதிலிருந்து விரிவுபடுத்தியுள்ள கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவற்றிற்கான அதன் ஆதரவை தெரிவித்துள்ளது.
தரவரிசை மற்றும் குறியீடுகள்
உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை
- 57) இந்தியா 1) சுவிட்சர்லாந்து 2) நெதர்லாந்து 3) சுவீடன்
ஐசிசி பெண்கள் ODI பந்து வீச்சாளர்கள் தரவரிசை
- 1) ஜுலன் கோஸ்வாமி 5) ஷிகா பாண்டே
ஐசிசி பெண்கள் அணி ODI அணி தரவரிசை
- 2) இந்தியா 1) ஆஸ்திரேலியா
மாநாடுகள்
இந்த ஆண்டு வர்த்தக உடன்படிக்கையை முடிக்க பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துவதற்கு RCEP நாடுகள் ஒப்புக்கொள்கின்றன
- இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட RCEP குழுவில் உள்ள 16 உறுப்பினர்கள், அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க இந்த ஆண்டு பேச்சுவார்த்தையை முடிக்க முன்மொழியப்பட்ட மெகா வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளனர். 16 உறுப்பினர்கள் பொருட்கள், சேவைகள், முதலீடுகள், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, போட்டி மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றை சேர்த்து குறிக்கும் நோக்கத்துடன் உள்ளனர்.
நியமனங்கள்
-
மேதா நார்வேக்கர் – பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் மற்றும் செயலாளர்
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி-கஜியாபாத்-மீரட் பிராந்திய ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டம்-க்கு உத்தரபிரதேச அமைச்சரவை அங்கீகரிக்கிறது
- உத்தரப்பிரதேச அமைச்சரவை டெல்லி-கஜியாபாத்-மீரட் பிராந்திய ரேபிட் ட்ரான்ஸிட் சிஸ்டம்-க்கு விரைவான மற்றும் மாசில்லாத இலவச போக்குவரத்து முறைமையை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் 2024 இல் நிறைவு செய்யப்படும்.
ஆதாரின் தன்னார்வ பயன்பாட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்
- மொபைல் சிம் கார்டுகளை பெற்றுக்கொள்வதற்காகவும், வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்காகவும் அடையாள அட்டையாக ஆதாரின் தன்னார்வ பயன்பாட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாதுகாப்பு செய்திகள்
சிஐஎஸ்எஃப் ஒற்றை பாதை சைக்கிள் அணிவகுப்பில் கின்னஸ் உலக சாதனையை புரிந்துள்ளது
- சிஐஎஸ்எஃப், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை 50 ஆண்டுகள் ஆனதைக் குறிக்க ஒற்றை வரி சைக்கிள் அணிவகுப்பில் ஒரு கின்னஸ் உலக சாதனையை புரிந்துள்ளது.
- நொய்டாவில் உள்ள யமுணா எக்ஸ்ப்ரெஸ்வேயில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டது. சி.ஐ.எஸ்.எப் 1969 இல் உருவாக்கப்பட்டது மற்றும் அதன் பணிகளில் ஒரு லட்சம் 80 ஆயிரம் நபர்கள் உள்ளனர்.
சம்ப்ரிதி 2019
- இந்தியா மற்றும் பங்களாதேஷ் படைகள் இடையே கூட்டு ராணுவ பயிற்சி ‘SAMPRITI’ யின் எட்டாவது பதிப்பு பங்களாதேஷ் , தங்காலில் நடைபெற்றது. கூட்டு இராணுவ பயிற்சி ‘சம்ப்ரிதி’ இரண்டு நாடுகளின் படைகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஃபோல் ஈகிள்
- வட கொரியாவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு வாஷிங்டன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா தங்கள் வருடாந்த பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை முடிவுக்கு கொண்டுவருவதாகக் கூறியுள்ளன.
- இரண்டு நாடுகளின் தொடர்ச்சியான கூட்டு பயிற்சிகளில் மிகப் பெரியது ஃபோல் ஈகிள் ஆகும். முந்திய பயிற்சிகளில் இதில் 200,000 தென் கொரிய படைகள் மற்றும் சுமார் 30,000 அமெரிக்க வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
டான் கொலோவ்-நிகோலா பெட்ரோவ் போட்டி
- தங்க பதக்கம் – 65 கிலோகிராம் ஃப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா, பெண்கள் 59 கிலோ பிரிவில் பூஜா தந்தா.
- வெள்ளி பதக்கம் – பெண்கள் 59 கிலோ பிரிவில் சரிதா மோர், 65 கிலோ பெண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சாக்ஷி மாலிக் , 61 கிலோ ஆண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சந்தீப் தோமர்
ரோஜர் ஃபெடரர் 100 வது ATP பட்டத்தை வென்றுள்ளார்
- ரோஜர் ஃபெடரர், துபாயின் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 6-4, 6-4 என்ற கணக்கில் கிரேக்க ஸ்டீபனோஸ் சிசிபியாஸை தோற்கடித்து தனது 100 வது ATP பட்டத்தை வென்றுள்ளார்.
- 100 பட்டத்தை வென்ற அமெரிக்கன் ஜிம்மி கான்னர்ஸ்க்கு பிறகு, 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ரோஜர் ஃபெடரர் இரண்டாவது நபராவார்.
- ஃபெடரர் 109 பட்டங்கள் வென்ற ஜிம்மி கான்னர்ஸ்ஸின் சாதனையை முறியடிக்க 10 பட்டங்களை வெல்ல வேண்டும், மார்டினா நவரத்திலோவா தனது காலப்பகுதியில் 167 பெண்கள் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
PDF Download
ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு