நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 4 2018

0

நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 4 2018

முக்கியமான நாட்கள்

டிசம்பர் 4 – இந்திய கடற்படைத் தினம்

  • 1971ம் ஆண்டு, அதாவது கிட்டத்தட்ட 47 வருடங்களுக்கு முன்பு இந்திய கடற்கரையில் இருந்து சென்று பாகிஸ்தானுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற தினம் இன்று. ட்ரைடெண்ட் மற்றும் பைத்தான் ஆப்பரேசன் வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது கடற்படை தினம்.
  • இந்தியக் கடற்படை இந்திய ஆயுதப்படைகளின் கடல் கிளை ஆகும், மேலும் இந்திய ஜனாதிபதி அதன் தலைமை தளபதி ஆவார்.

தேசிய செய்திகள்

அசாம்

வடகிழக்கு மாநிலத்திற்கான நிதி[NITI] மன்றத்தின் இரண்டாம் கூட்டம்

  • வடகிழக்கு நிதி[NITI] மன்றத்தின் இரண்டாம் கூட்டம் கவுஹாத்தி நகரில் நடைபெறுகிறது. இப்பகுதியில் வளர்ச்சி நிலையை அவ்வப்போது மீளாய்வு செய்வதற்காக வட கிழக்கு மாநிலங்களுக்கான [NITI] மன்றம் அமைக்கப்பட்டது.

புது தில்லி

முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ ஆர். வெங்கடராமன் பிறந்த நாள் விழா

  • முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கடராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் மரியாதை செலுத்தினார்.

சர்வதேச செய்திகள்

2019 ஜனவரி முதல் OPEC விட்டு விலக கத்தார் முடிவு

  • கத்தார் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் (OPEC) அமைப்பை விட்டு விலகுவதற்கான தனது முடிவை அறிவித்தது, இயற்கை எரிவாயு உற்பத்தியில் மேலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
  • உலகின் மிகப்பெரிய எல்.பி.ஜி ஏற்றுமதியாளராக கத்தார் உள்ளது.

ஈரான் ஏவுகணை சோதனை பிரச்சினை குறித்து .நா. பாதுகாப்பு கவுன்சில்

  • உலக அமைப்பு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன், ஈரான் ஏவுகணை சோதனை செய்ததாக குற்றம்சாய்ட்டியதன் கோரிக்கையை அடுத்து ஈரான் ஏவுகணை சோதனை பிரச்சினை குறித்து ஐ.நா. பாதுகாப்புக் குழு சந்திப்பு.

வணிகம் & பொருளாதாரம்

புதிய எளிய ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அறிமுகம்

  • புதிய எளிமையான ஜி.எஸ்.டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • புது தில்லி வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் (டி.ஆர்.ஐ) அடிக்கல் தின விழாவில், வருவாய்த் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எல்.பி.ஜி மானியம் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை

  • எல்.பி.ஜி எனப்படும் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை என பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்தது.
  • தற்போது, ​பாஹல் ​பாலிசி திட்டத்தின் கீழ் எல்பிஜி நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்துகிறது.

மாநாடுகள்

சர்வதேச கரடிகள் மாநாடு

  • உத்தரப்பிரதேசத்தில், 11 நாடுகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆக்ராவில் நடைபெறும் சர்வதேச கரடிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
  • வனஉயிரனம் SOS, அமெரிக்க மற்றும் கனடா நாட்டின் கரடி பராமரிப்பு குழுவுடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்பட்டது.

இந்தியாவின் விசா ஆட்சியமைப்பை மாற்றியமைத்தல்மாநாடு

  • ஒரு எளிய மற்றும் தொந்தரவு இல்லாத விசா ஆட்சியமைப்பை உருவாக்குவது, நாட்டின் வெளிநாட்டு பயணிகள் வருகை மற்றும் தங்குவதற்கு வசதியளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று மத்திய உள்துறை செயலாளர் ஸ்ரீ ராஜீவ் கியூபா கூறினார்.

இந்தியா நீர் தாக்க உச்சி மாநாடு 2018

  • கங்கை நதி நீர்வளங்கள், நதி மேம்பாட்டு மற்றும் கங்கை நதி புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்காரி இந்தியா நீர் தாக்க உச்சி மாநாடு 2018ஐ திறந்துவைக்க உள்ளார். இது சுத்தமான கங்கைக்கான தேசியத் திட்டம் (NMCG) மற்றும் கங்கா ஆறு முகாமை மற்றும் ஆய்வுகள் மையம் (cGanga) இணைந்து டிசம்பர் 5-7, 2018 வரை புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் இரண்டு நாள் மாநாடு

  • ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கலாச்சார மரபு சார் பாதுகாப்புக்கான இரண்டு நாள் மாநாடு புது தில்லியில் தொடங்கப்பட்டது.

நியமனங்கள்

  • ஸ்ரீ ஏ. என். ஜா – நிதி செயலாளர்

திட்டங்கள்

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்

  • “பழங்குடி சர்க்யூட் வளர்ச்சி: பெரென்-கோஹிமா-வோக்கா திட்டம்” நாகலாந்தில் உள்ள கிசாமா ஹெரிடேஜ் கிராமத்தில், ஸ்ரீ நேபியோ ரியோ நாகாலாந்தின் முதல் அமைச்சரால் தொடங்கி வைக்க உள்ளார்.
  • இது, இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் முதல் திட்டமாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆசிய வளர்ச்சி வங்கி, மத்திய அரசு இடையே 85 மில்லியன் டாலர் கடனுக்கு ஒப்பந்தம்

  • ஒடிசாவில் திறமை மேம்பாட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 85 மில்லியன் டாலர்களுக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து.
  • புவனேஸ்வரில் ஒரு மேம்பட்ட திறன் பயிற்சி மையம், உலக திறமை மையம் (WSC) அமைக்க இந்த கடன் உதவி மூலம் நிறுவப்படும்.

ஆபிரிக்காவில் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பிற்கு, நாணய மாற்றுவியலுக்காக இந்தியா மற்றும் யுஏஇ ஒப்பந்தம்

  • ஆபிரிக்காவில் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பிற்கு, நாணய மாற்றுவியலுக்காக இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கும் இடையே கையெழுத்தானது.

பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ பயணம்

  • டிசம்பர் 02-07, 2018 அமெரிக்காவிற்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகபூர்வ விஜயம் செய்கிறார்.

விருதுகள்

  • ஆண்கள் 2018 பாலன் டி ஓர் [கால்பந்தின் ஆஸ்கர்] விருது– குரோஷியாவின் லூகா மோட்ரிச்
  • மகளிர் பாலன் டி ஓர் விருது – நார்வேயின் அடா ஹெகெர்பெர்க் [முதல் முறையாக வீராங்கனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது]

விளையாட்டு செய்திகள்

ISSF யின் நீதிபதிகள் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர்

  • சர்வதேச துப்பாக்கிச்சூடு விளையாட்டு கூட்டமைப்பின் (ஐ.எஸ்.எஸ்.எப்) நீதிபதிகள் குழுவில் ஏழு உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியராக பவன் சிங் தேர்வு.

தேசிய துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டி

  • ஜெய்ப்பூரில் நடந்த 62 வது தேசிய துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டிகளில் (NSCC) மகளிர் ஸ்கீட் பட்டத்தை வென்று ராஜஸ்தானின் மஹேஷ்வரி சௌஹான் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!