தேசிய செய்திகள்
புல்வாமாவின் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கோவிந்த அஞ்சலி செலுத்தினார்
புல்வாமாவில் பலியான தியாகிகளுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். ஜம்முவில், வீர மரணம் அடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணியாளர்களின் நினைவு நாள் பிப்ரவரி 14 அன்று லெத்போரா முகாமில் அனுசரிக்கப்பட்டது. நினைவிடத்தில், 40 தியாகிகளின் பெயர்களும் அவர்களின் படங்களுடன் சேவை மற்றும் விசுவாசம் என்ற வாசகத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா புதுடில்லியில் இரண்டு நாள் பிம்ஸ்டெக் ‘போதைப்பொருள் கடத்தலை எதிர்ப்பதற்கான மாநாட்டை’ தொடங்கி வைத்தார்
மத்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷா இரண்டு நாள் நீடித்த பிம்ஸ்டெக் ‘போதைப்பொருள் கடத்தலை எதிர்ப்பதற்கான மாநாடு’, புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இதை உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்தது. 2018 ஆம் ஆண்டில் நேபாளத்தின் காத்மாண்டுவில் 4 வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி செய்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்த மாநாடு நடைபெற்றது.
குஜராத்தின் வதோதராவில் ‘எங்கீக்ஸ்போ 2020’ கண்காட்சி நடைபெறவிருக்கிறது
மெகா தொழில்துறை கண்காட்சியின் 6 வது பதிப்பு ‘எங்கீக்ஸ்போ 2020’ குஜராத்தின் வதோதராவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக மூன்று நாள் மெகா கண்காட்சியை சிறு அளவிலான தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெயரை இந்திய அரசாங்கம் இரண்டு முக்கிய நிறுவனங்களுக்கு பெயரிட உள்ளது
மறைந்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெயரை இந்திய அரசு பிரவாசி பாரதிய மையம் மற்றும் வெளியுறவு சேவை நிறுவனம் ஆகிய இரண்டு இந்திய நிறுவங்களுக்கு சூட்ட உள்ளது.
பிரவாசி பாரதிய மையம் என்பது ஒரு கலாச்சார மையமாகும், இது உலகெங்கிலும் உள்ள அதன் புலம்பெயர்ந்தோருடனான இந்தியாவின் தொடர்பை பிரதிபலிக்கிறது.
வெளியுறவு சேவை நிறுவனம் என்பது இந்திய தூதர்களின் பயிற்சி நடத்தும் நிறுவனமாகும்.
போர்ச்சுகல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்
போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சௌசா 4 நாள் பயணமாக இந்தியா வந்தார்.
இரு நாடுகளும் பொருளாதாரம்,வணிகம், அறிவியல், கலாச்சாரத் துறையில் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச செய்திகள்
2019 ஆம் ஆண்டிற்கான உலக குழந்தைகள் அறிக்கையை யுனிசெப் வெளியிட்டது
யுனிசெப் இன் உலக குழந்தைகள் அறிக்கை 2019 இன் படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில் 1000 குழந்தைகளுக்கு 37 ஆக உள்ளது.
உலகமயமாக்கல், நகரமயமாக்கல், ஏற்றத்தாழ்வுகள், மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைமையில் முன்பில்லாத வகையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று யுனிசெப் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மாநில செய்திகள்
ஒடிசா
ஒடிசா சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை எச்.டி.எஃப்.சி வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது
ஒடிசாவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களுக்கு ஸ்மார்ட் வங்கி சம்மந்தமான தீர்வுகளை வழங்குவதற்காக ஒடிசா அரசாங்கத்தின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
விருதுகள்
சமூக ஆர்வலர் கீதா சென் டான் டேவிட் பரிசை வென்றார்
இந்தியாவின் புகழ்பெற்ற பெண்ணிய அறிஞரும் ஆர்வலருமான கீதா சென் மதிப்புமிக்க டான் டேவிட் பரிசை வென்றுள்ளார், இது ஆண்டுதோறும் உலகெங்கிலும் உள்ள தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. கீதா சென் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் இயக்குநராகவும் உள்ளார்.
பயோ ஏசியா 2020 ஜீனோம் வேலி எக்ஸலன்ஸ் விருதை விருதுகளை அறிவித்து உள்ளது
அமெரிக்க நோயெதிர்ப்பு நிபுணர் மற்றும் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கார்ல் எச் ஜூன் மற்றும் நோவார்டிஸ் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் வசந்த் நரசிம்மன் ஆகியோருக்கு பயோ ஏசியா 2020 இன் ஜீனோம் வேலி எக்ஸலன்ஸ் விருது வழங்கப்படவிருக்கிறது.
இந்த விழாவை தெலுங்கானா அரசாங்கத்தின் உலகளாவிய உயிரி தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை அறிவியல் மன்றம் பிப்ரவரி மாதம் 17 முதல் 19 வரை ஏற்பாடு செய்ய உள்ளது.
நியமனங்கள்
ராஜீவ் பன்சலை ஏர் இந்தியாவின் தலைவராக இரண்டாவது முறையாக அரசு நியமித்துள்ளது
இரண்டாவது முறையாக ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜீவ் பன்சலை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது. பன்சால் தற்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக உள்ளார். விமான நிறுவனத்தின் தலைவராக தனது ஓராண்டு காலத்தை நிறைவு செய்த அஸ்வானி லோகானிக்கு பதிலாக அவர் நியமிக்கப்படுகிறார்.
ஸ்ரீநாத் நரசிம்மனை தலைமை நிர்வாக அதிகாரியாக டாடா டிரஸ்ட்ஸ் நியமித்து உள்ளது
டாடா குழுமத்தின் ஸ்ரீநாத் நரசிம்மனை டாடா டிரஸ்ட்ஸ் தங்கள் முதல் தலைமை நிர்வாகியாக நியமித்து உள்ளது. தற்போது டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிரா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான நரசிம்மன் தனது ஏப்ரல் 1 முதல் டாடா டிரஸ்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.
இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி ஜி நாராயணன் NSIL தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
மூத்த இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி ஜி நாராயணன், இந்திய அரசின் பொதுத்துறை பிரிவு நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் யூனிட் லிக்விட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் சென்டரில் துணை இயக்குநராக நாராயண் பணியாற்றினார், இது ஏவுகணை வாகனங்களுக்கான திரவ உந்துவிசை நிலைகளை வடிவமைத்து உருவாக்க உதவுகிறது.
மாநாடுகள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மொபைல் உலக காங்கிரஸ் ரத்து செய்யப்பட்டது
பார்சிலோனாவுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் வருடாந்திர தொலைத் தொடர்பு மாநாடான மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ், கொரோனா வைரஸ் அச்சத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை குளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் தொலைத் தொடர்பு சங்கம் நடத்தவிருந்தது.
விளையாட்டு செய்திகள்
ஒலிம்பிக் தகுதிகளுக்கான ஐ.ஓ.சியின் குத்துச்சண்டை தரவரிசையில் அமித் பங்கல் முதலிடத்தைப் பிடித்தார்
வெள்ளிப் பதக்கம் வென்ற அமித் பங்கல் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான 52 கிலோகிராம் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார், இந்த பட்டியலை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் குத்துச்சண்டை பணிக்குழு அடுத்த மாத ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு முன்னதாக வெளியிட்டது.
உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியரானார் அமித், 2018 காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
பெண்கள் தரவரிசையில் இந்திய குத்துச்சண்டை வீரர் மேரி கோம் 51 கிலோ பிரிவு தரவரிசையில் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் 2019 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தால் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
மிட்பீல்டர் மன்பிரீத், 1999 ஆம் ஆண்டில் விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
குல்மார்க்கில் தேசிய குளிர்கால விளையாட்டுக்கள் நடைபெற உள்ளன
தேசிய குளிர்கால விளையாட்டுக்கள் மார்ச் 7, 2020 முதல் குல்மார்க்கில் நடைபெற உள்ளது. குல்மார்க்கில் இந்த விளையாட்டுக்கள் ஐந்து நாட்கள் நடைபெற உள்ளன. இது கெலோ இந்தியா போட்டிகளின் கீழ் நடைபெறுகிறது.
கெலோ இந்தியா முதன்முதலில் 2018 இல் நடைபெற்றது. கெலோ இந்தியா நிகழ்வின் முக்கிய நோக்கம் இந்தியா முழுவதும் அடிமட்ட அளவிலான திறமைகளை ஊக்குவிப்பதாகும்.
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்