நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018

0

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 15, 2018

முக்கியமான நாட்கள்

ஆகஸ்ட் 15 – 72வது இந்திய சுதந்திர தினம்

  • 15 ஆகஸ்ட் 1947 அன்று இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றதற்காக இந்தியாவில் தேசிய விடுமுறை தினமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

வம்சதாரா திட்டத்தை தேசத்திற்கு அர்ப்பணிக்கவுள்ளார் முதல்வர்

  • ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு சுதந்திர தினத்தன்று வம்சதாரா திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

மகாராஷ்டிரம்

இளஞ்சிவப்பு காய்புழுவை சமாளிக்க அவசர நடவடிக்கைகள்

  • நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்கவும், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்புக்களை குறைக்கவும் மாநிலத்தின் பகுதிகளில் பரவலான இளஞ்சிவப்பு காய்புழுவை (PBW) சமாளிக்கவும் மகாராஷ்டிர அரசு அவசர நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் முதல்வர் பொதுநல நடவடிக்கைகளை வெளியிடுகிறார், பால் திட்டத்தை விரிவுபடுத்துகிறார்

  • ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பள்ளிக்கல்விக்கு அன்னபூர்ணா பால் திட்டம் விரிவாக்கம், புதிய உள்கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு வட்டி மானியம் வழங்கல், செப்டம்பர் மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ கொண்டாடுதல் போன்ற பொதுநல நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து ஜெய்ப்பூர் திரும்பியவர்

  • லாகூர் கோட் லக்பத் சிறையில் 36 ஆண்டுகள் செலவிட்ட பிறகு, ஜெய்ப்பூர் தொழிலாளி கஜானந்த் சர்மா வீடு திரும்பினார்.

பஞ்சாப்

‘துமேரா படி’ திட்டம்

  • பஞ்சாப் முதல் அமைச்சர் அமரிந்தர் சிங், மாநிலத்தில் போதைப்பொருட்களின் பிரச்சனையை சமாளிக்க ‘துமேரா படி’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

சர்வதேச செய்திகள்

கம்போடியாவின் ஆளும் கட்சி அனைத்து நாடாளுமன்ற இடங்களையும் வென்றது

  • கம்போடியாவின் ஆளும் கம்போடியன் மக்கள் கட்சி பொதுத் தேர்தலில் 125 நாடாளுமன்ற இடங்களை வென்றது.

வணிகம் & பொருளாதாரம்

‘JioGigaFiber’

  • 4 ஜி மொபைல் சேவைகளுக்குப் பின்னர், ரிலையன்ஸ் ஜியோ “ஆப்டிகல் ஃபைபர் அடிப்படையிலான நிலையான-வரி பிராட்பேண்ட் சேவைக்கான JioGigaFiber பதிவு செய்யப்பட்டது, இதன்மூலம் இது ஒரு விநாடிக்கு ஒரு ஜிகாபிட் பதிவிறக்க வேகத்தை வழங்குவதாகக் கூறியுள்ளது.

சீனா, பாகிஸ்தானிற்கு தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

  • 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் தேநீர் ஏற்றுமதி பெரிய அளவில் செய்யப்பட்டது.

மாநாடுகள்

லடாக்கில் இந்தியா, சீனா படைகள் சந்திப்பு

  • கிழக்கு லடாக் பகுதியில் டெம்ஷோக்கில் தொடர்ச்சியான மீறல் ஏற்பட்ட போதும், இந்தியா மற்றும் சீனாவின் படைகள் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு சம்பிரதாய தனிப்பட்ட கூட்டம் நடைபெற்றது.

நியமனங்கள்

  • ஏ.கே. சிங்இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பைப்லைன் இயக்குநர்
  • டி.பாலா வெங்கடேஷ் வர்மாரஷ்யாவிற்கான தூதர்
  • ஆனந்தி பென் படேல் (மத்தியப் பிரதேச ஆளுநர்)சத்தீஸ்கர் கவர்னர் கூடுதல் பொறுப்பு
  • ஆசாத் கைசர்பாகிஸ்தானின் புதிய பாராளுமன்ற சபாநாயகர்

திட்டங்கள்

ககன்யான் மிஷன் மூலம் 2022ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்

  • ககன்யான் மிஷன் மூலம் 2022ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களுடன் கூடிய விண்கலத்தைச் செலுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த சாதனையைப் புரியும் 4ஆவது நாடாக இந்தியா திகழும்.

வெலிகொண்டா திட்டம்

  • ஆந்திராவில் மேற்கு பிரகாசத்தின் வறட்சிக்குட்பட்ட மாவட்டத்திற்கு ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா நீரைக் கொண்டு வருவதற்கு பல கோடி ரூபாய் செலவில் வெலிகொண்டா திட்டத்தின் முதற்கட்டம் வரும் சங்கராந்திக்குள் பூர்த்தி செய்யத்திட்டம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

200 மில்லியன் யூரோ கடனுக்காக ஜெர்மன் வங்கியுடன் REC கையெழுத்து ஒப்பந்தம்

  • இந்தியாவில் சுத்தமான ஆற்றல் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 200 மில்லியன் யூரோவுக்கு KfW மாநில கிராம மின்சாரமயமாக்கல் கார்ப்பரேஷன்(REC) ஜெர்மானிய வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

விருதுகள்

  • தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சேவைக்கான மதிப்புமிக்க ஜனாதிபதி பதக்கம் – 1) ஏடிஜிபி (தமிழ்நாடு போலீஸ் ஹவுஸ் கார்ப்பரேஷன்) M.N. மஞ்சுநாதா 2) ஐ.ஜி. (தென் மண்டலம்) கே.பி.சண்முக ராஜேஸ்வரன் 3) ஏ.எஸ்.பி. (விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநர்) எஸ். திருநாவுக்கரசு

விளையாட்டு செய்திகள்

பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பயிற்சிபெறும் பெண்களை பாதுகாக்கும் SAI

  • இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தங்கள் பயிற்சியாளர்களின் கைகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்த்து பெண் விளையாட்டு வீரர்களை காப்பாற்றும் நோக்கில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியாவின் 53வது செஸ் கிராண்ட்மாஸ்டர் நிகில் சாரின்

  • அபுதாபி மாஸ்டர்களில் அவரது மூன்றாவது மற்றும் இறுதி GM- நெறியை அடைந்த பின் நிகில் சாரின் 53வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 15, 2018

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!