நடப்பு நிகழ்வுகள் – 8 மார்ச் 2023
தேசிய செய்திகள்
8வது தேசிய புகைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் புதுதில்லியில் வழங்கினார்.
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் 8வது தேசிய புகைப்பட விருதுகளை புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தொழில்சார் மற்றும் அமெச்சூர் பிரிவில் தலா 6 விருதுகள் உட்பட மொத்தம் பதின்மூன்று விருதுகள் வழங்கினார்.
- தொழில்முறை வகைக்கான கருப்பொருள் “உயிர் மற்றும் நீர்“, அமெச்சூர் பிரிவில் “இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்“.
8வது தேசிய புகைப்பட விருதுகளை வென்றவர்கள் பின்வருவனவற்றில்,
வாழ்நாள் சாதனையாளர் விருது | திருமதி சிப்ரா தாஸ் |
இந்த ஆண்டின் தொழில்முறை புகைப்படக் கலைஞர் விருது | ஸ்ரீ சசி குமார் ராமச்சந்திரன் |
ஆண்டின் சிறந்த அமெச்சூர் புகைப்படக் கலைஞர் விருது | ஸ்ரீ அருண் சாஹா |
சர்வதேச செய்திகள்
இந்திய வம்சாவளி பெண் மாவட்ட தலைமை நீதிபதியாக அமெரிக்காவில் பதவியேற்பு
- அமெரிக்காவின் மாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயர் மாவட்ட தலைமை நீதிபதியாக தேஜஸ் மேத்தாப் பதவியேற்றுள்ளார்.
- தற்போது ஏயர் மாவட்ட நீதிமன்றத்தின் முதலாவது அதிகாரியாக மேத்தா பணியாற்றுகிறார்
மாநில செய்திகள்
திரிபுரா ,மேகாலயாவில் முதலமைச்சர்கள் பதவியேற்பு
- திரிபுராவில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக97 சதவீத வாக்குகளுடன் 32 இடங்களில் வெற்றிப்பெற்றறு மாணிக் சாஹா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
- மேகாலயாவில் நடைபெற்ற தேர்தலில் 26 இடங்களில் வெற்றி பெற்று தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா தொடர்ந்து இரண்டாவது முறையாக மேகாலயா முதல்வராக பதவியேற்றார்.
நியமனங்கள்
கணக்கு கட்டுப்பாட்டாளராக எஸ்.எஸ்.துபே பொறுப்பேற்றுள்ளார்
- சிவில் கணக்குகள் சேவை அதிகாரி எஸ்.எஸ்.துபே கணக்கு கட்டுப்பாட்டு ஜெனரலாக பொறுப்பேற்றார் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- துபே இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் 28வது கணக்கு கட்டுப்பட்டுளராக பதவியேற்றுள்ளார்
ஆசியாவில் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்களில் திருச்சி 2வது இடம்.
- சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் கணக்கெடுப்பில் ஆசியாவில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட விமான நிலைய பட்டியலில் திருச்சி 2ம் இடம் பெற்றிருக்கிறது.
- திருச்சியில் இருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, கொழும்பு, குவைத், அபுதாபி, மஸ்கட் மற்றும் தோஹா ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தொல்லியல் ஆய்வுகள்
16 ஆம் நூற்றாண்டு நடுகல் சிற்பம் கண்டெடுப்பு
- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் விவசாய நிலத்தில் நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. 3 அடி உயரம், 2 அடி அகலம், 12 செ.மீ. தடிமன் கொண்டது.இது தனி பலகை கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- கல்வெட்டின் எழுத்தமைப்பை பொறுத்து அது கி.பி 16-ம் நூற்றாண்டு காலத்தை சார்ந்தது என தெரியவந்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
மெக்சிகோ டென்னிஸ் சாம்பியன்
- மெக்சிகோவில் நடந்த டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் டோனா வேகிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இவர் 2021க்கு பிறகு தனது முதல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.
ஏடிஎக்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்
- அமெரிக்காவில் நடந்த ஆஸ்டின் டெக்சாஸ் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் மார்தா கோஸ்ட்யுக் சாம்பியன் பட்டம் வென்றார். ஏடிஎக்ஸ் ஒற்றையர் பிரிவில் மார்த்தா சாம்பியன் பட்டம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
- பைனலில் ரஷ்யாவின் வார்வரா கிரச்சேவாவுடன் மோதிய மார்தா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.
சா்வதேச பாரா பாட்மின்டன்
- சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்றது.
- இதில் மகளிர் ஒற்றையரில் மனீஷா ராம்தாஸ், மன்தீப் கௌர், ஆடவா் இரட்டையரில் சிராக் பரேதா/ராஜ் குமார் கூட்டணி, கலப்பு இரட்டையரில் மானசி ஜோஷி/சந்தியா விஸ்வநாதன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனா்.
முக்கிய தினம்
சர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8
- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8,2023 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள்: DigitALL: Innovation and technology for gender equality.
Download PDF : Click Here