நடப்பு நிகழ்வுகள் – 7 பிப்ரவரி 2023
தேசிய செய்திகள்
22வது பாரத் ரங் மஹோத்சவ் – 2023
- தேசிய நாடகப் பள்ளி (NSD) பாரத் ரங் மஹோத்சவ் (BRM),-2023 இன் 22வது பதிப்பை பிப்ரவரி 16 முதல் 26,2023 வரை நடைபெறவுள்ளது.
- பாரத் ரங் மஹோத்சவ் மற்ற நாடுகளுடன் சர்வதேச உறவுகள் மற்றும் கலாச்சார பரிமாற்ற திட்டங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள நாடக மரபுகளைப் பற்றி மேலும் ஆராய ஒரு தளத்தை உருவாக்குகிறது, மேலும் தேசிய தலைநகரான டெல்லி உட்பட 9 நகரங்களில் தியேட்டர் திருவிழா நடத்தப்படவுள்ளது.
பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயில் ‘ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
- இந்திய இரயில்வே தனது பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயிலை இயக்குவதன் மூலம் குஜராத் மாநிலத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கார்வி குஜராத்தில் மிகவும் சிறப்பான சுற்றுலாவைக் கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த ரயில் டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 28 ஆம் தேதி புறப்படவுள்ளது.
- சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லப் பாய் படேலின் வாழ்க்கையைக் கருத்திற் கொண்டு, இந்திய அரசின் “ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்” திட்டத்தின் கீழ் இந்த ரயில் பயணப் பேக்கேஜ் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த ரயில் 8 நாட்கள் பயணத்தின் போது சுமார் 3500 கிமீ தூரம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான டிஜிட்டல் விரிவாக்கத் தளத்தை உருவாக்குவதற்காக டிஜிட்டல் கிரீன் நிறுவனத்துடன் MoA&FW புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டுள்ளது
- தேசிய அளவிலான டிஜிட்டல் விரிவாக்கத் தளத்தை உருவாக்குவதற்காக, இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், டிஜிட்டல் கிரீன் (Digital Green) நிறுவனத்துடன் பொதுத் தனியார் கூட்டாண்மை கட்டமைப்பின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் 6 பிப்ரவரி 2023 அன்று புது தில்லியில் கையெழுத்திடப்பட்டது.
- இந்த டிஜிட்டல் தளமானது பல வடிவிலான பல மொழி உள்ளடக்கங்களைக் கொண்ட டிஜிட்டல் நூலகத்தை வழங்கும், விவசாயம், தோட்டக்கலை, மீன்வளம், கால்நடைகள் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான விரிவாக்கப் பணியாளர்களின் பரந்த வலையமைப்பை, விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் அணுகவும், க்யூரேட் உள்ளடக்கத்தை வழங்கவும் விரிவாக்கப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செய்திகள்
இந்தியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முத்தரப்பு ஒத்துழைப்பு முயற்சியை நிறுவுகின்றன
- இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவை சூரிய மற்றும் அணுசக்தி,காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் இராணுவ வன்பொருள் கூட்டு உற்பத்தி திட்டங்களுக்கான முறையான முத்தரப்பு ஒத்துழைப்பு முயற்சியை உருவாக்குவதாக அறிவித்தன.
- இந்த முயற்சியானது, மூன்று நாடுகளின் வளர்ச்சி முகமைகளுக்கு இடையே நிலையான திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் செயல்படவுள்ளது,மேலும் இது பாரிஸ் ஒப்பந்தத்தின் நோக்கங்களுடன் அவர்களின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூகக் கொள்கைகளை சீரமைக்கும் வகையில் அறிவிக்கப்ட்டுள்ளது.
மாநில செய்திகள்
பெங்களூரில் E20 எரிபொருளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்
- இந்தியா எரிசக்தி வாரம் (India Energy Week (IEW)) 2023, பிப்ரவரி 6 முதல் 8, 2023 வரை நடைபெறுகிறது, மேலும் இது ஒரு ஆற்றல் மாற்ற சக்தியாக இந்தியாவின் வளர்ந்து வரும் திறமையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி E20 பெட்ரோல், அதாவது 20 சதவிகிதம் எத்தனாலுடன் கலக்கப்பட்ட பெட்ரோலை அறிமுகப்படுத்தினார், மேலும் இந்தியன் ஆயிலின் முயற்சியின் கீழ் ‘(Unbottled) அன்பாட்டில்ட்’ சீருடைகளை பிரதமர் அறிமுகப்படுத்தினார், இந்த சீருடைகள் மறுசுழற்சி செய்யப்பட்ட PET பாட்டில்களால் செய்யப்பட்டவையாகும்.
நியமனங்கள்
உச்சநீதிமன்றத்தில் புதிதாக 5 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
- உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நீதிபதிகள் 5 பேர் பங்கஜ் மித்தல், சஞ்சய் கரோல், அசானுதீன் அமானுல்லா, மனோஜ் மிஸ்ரா, பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் பிப்ரவரி 6,2023 அன்று பதவியேற்றனர்.
- புதிதாக பதவியேற்ற நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார், புதிய நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஹார்வர்ட் சட்ட ஆய்வுக் குழுவின் தலைவராக முதல் இந்திய-அமெரிக்கர் நியமனம்
- அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹார்வர்டு சட்ட பள்ளியின் ஒரு பகுதியாக கடந்த 1887-ம் ஆண்டு முதல், சட்டம் பயில கூடிய மாணவ மாணவியர்களால் சட்டம் சார்ந்த தகவல்களை அளிக்கும் பத்திரிகை ஒன்று வெளிவர தொடங்கியது
- இந்நிறுவனத்தின் 137-வது தலைவராக இந்திய அமெரிக்கரான அப்சரா ஐயர் என்பவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், 136 ஆண்டு கால வரலாற்றில் இந்திய அமெரிக்கர் ஒருவர், இந்த பொறுப்பை ஏற்பது இதுவே முதன்முறையாகும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
NISER செயற்கை கோள் திட்டம்
- NISAR (NASA-Isro Synthetic Aperture Radar), என்பது நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய புவி அறிவியல் செயற்கைக்கோள் ஆகும், மேம்பட்ட ரேடார் இமேஜிங்கைப் பயன்படுத்தி நில மேற்பரப்பு மாற்றங்களை உலகளாவிய அளவீடு செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்,
- மேலும் இச் செயற்கைகோள் 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது, பூகம்பங்கள், நிலச்சரிவுகள் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு முன்னதாக நிலப்பரப்பின் மெதுவாக நகரும் மாறுபாடுகளைக் கண்டறிய இந்த செயற்கைக்கோள் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
கிராமி விருது 2023 (Grammy Awards 2023)
- 65வது கிராமி விருதுகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளcom அரங்கில் 5 பிப்ரவரி 2023 அன்று நடைபெற்றது.
- இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ், தனது உலகப் புகழ்பெற்ற ஆல்பமான டிவைன் டைட்ஸ் வித் ராக்-லெஜண்ட் ஸ்டீவர்ட் கோப்லேண்டிற்காக தனது மூன்றாவது கிராமி விருதை வென்றார், இந்த விருதை வென்ற பிறகு ரிக்கி கேஜ் 3 கிராமி விருதுகளை வென்ற ஒரே இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
மாத்ருபூமி புக் ஆஃப் தி இயர் விருது-2023
- மாத்ருபூமி சர்வதேச கடிதத் திருவிழாவின் (MBIFL 2023) நான்காவது பதிப்பில், எழுத்தாளர் டாக்டர் பெக்கி மோகன் ‘மாத்ருபூமி புக் ஆஃப் தி இயர்’ விருதைப் பெற்றுள்ளார்.
- இடம்பெயர்ந்ததன் விளைவாக மொழியின் பரிணாம வளர்ச்சியை சித்தரிக்கும் அவரது புத்தகமான ‘வாண்டரர்ஸ், கிங்ஸ் அண்ட் மெர்ச்சண்ட்ஸ்’, -க்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது, மேலும் இவ் விருதானது இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு சிற்பத்தை கொண்டதாகும்.
விளையாட்டு செய்திகள்
பாஸ்டன் நியூபேலன்ஸ இன்டோர் கிராண்ட் பிரீ தடகள போட்டி 2023
- பாஸ்டன் நியூபேலன்ஸ இன்டோர் கிராண்ட் பிரீ தடகள போட்டி அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இப் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர்26 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
- பகாமசின் டொனால்ஸ் தாமஸ்23 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். மற்றும் அமெரிக்காவின் டேரில் சல்விவன் 2.19 மீட்டர் தாண்டி வெண்கலம் வென்றார்.
ஜாக்ரெப் ஓபன் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டி 2023
- ஜாக்ரெப் ஓபன் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்த போட்டி குரோஷியாவில் நடைபெற்றது.
- இப் போட்டியில் கிரிக்கோ ரோமன் பிரிவின் 67 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அஷூ, லிதுவேனியாவின் அடோமஸ் கிரிகாலினாசை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி 2023
- தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) ஆதரவுடன் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
- இந்த போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் பிப்ரவரி 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இப் போட்டியில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக 2019-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வீரர் கோரென்டின் மோடெட் சாம்பியன் பட்டம் வென்றார்.
இரங்கல் செய்தி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்
- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அமிலாய்டோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக துபாயில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முஷாரப் 05/02/2023 அன்று காலமானார், தற்போது அவருக்கு வயது
- 1965-ல் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது, முஷாரப் முக்கியப் பங்கு வகித்தார்,மேலும் அப்போர்க்கான முஷாரப்பின் வீரத்துக்காக அவருக்கு சிறப்புப் பதக்கம் வழங்கப்பட்டது.
முக்கிய தினம்
சர்வதேச வளர்ச்சி வாரம் 2023
- சர்வதேச வளர்ச்சி வாரம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது, தற்போது 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 11,2023 வரை அனுசரிக்கப்படுகிறது.
- சர்வதேச வளர்ச்சி வாரம் (IDW) வறுமையை ஒழிப்பதற்கும் மேலும் அமைதியான, உள்ளடக்கிய மற்றும் வளமான உலகத்தை வளர்ப்பதற்கும் மக்களின் பங்களிப்புகளைக் நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.