Current Affairs – 24th September 2022
தேசிய செய்திகள்
Scheme for Special Assistance to States for Capital Investment for 2022-23
- இந்தத் திட்டத்தின் கீழ், மூலதன முதலீட்டுத் திட்டங்களுக்கு 50 வருட வட்டியில்லா கடனாக மாநில அரசுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
- மேலும் ஒளியிழை கம்பிவட கணினி கட்டமைப்பில் மூலதன திட்டத்திற்காக மாநிலங்களுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தொலைதொடர்புத் துறை, செலவினத் துறை சமீபத்தில் உத்தரகாண்ட், ஜார்கண்ட், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களின் முன்மொழிவுகளுக்கு 50 கோடி, 84 கோடி, 65 கோடி மற்றும் 156 கோடி என ஒதுக்கீடு செய்துள்ளது.
5G சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ளார்
- 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியாவில் 5G சேவை தொடங்க உள்ளது, ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்தியா மொபைல் காங்கிரஸில் இந்த சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அக்டோபர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 5G சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
- அதன் ஒரு பகுதியாக 5G சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, அதானி குழுமம், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நான்கு முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.
ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தியுள்ளது
- ரயில்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ரயில்களின் வருகை, புறப்பாடு, வழித்தடம் என ரயில்கள் இயக்கப்படும் நேரங்களை தானாக பெறுவதற்கு ரயில் இயந்திரங்களில் நிகழ்நேர தகவல் சாதனம் பொறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - இந்த சாதனம் பொருத்தப்பட்ட ரயில்களின் இருப்பிடம், வேகம் உள்ளிட்டவை எவ்வித தடையும் இன்றி கண்காணிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.
- தற்போது 2700 தொடர்வண்டிகளில் நிகழ் நேர தகவல் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் SRS 2020 புள்ளியியல் அறிக்கை வெளியிட்டுள்ளது!!!
- SRS புள்ளிவிபர அறிக்கை 2020 இன் படி, புதிதாகப் பிறந்த குழந்தைகள், சிசு மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் 2030 க்குள் நாடு ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதை நோக்கி நகர்கிறது என்பதைக் காட்டுகிறது.
- இந்தியாவின் சராசரி பிறந்த குழந்தை இறப்பு (பிறந்த 30 நாட்களுக்குள் இறப்பு) 2019 இல் 22 மற்றும் 2014 இல் 26 இல் இருந்து 2020 இல் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு இறப்பு 20 ஆகக் குறைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
- குழந்தை இறப்புக்கான நிலையான வளர்ச்சி இலக்கான 12ஐ ஆறு மாநிலங்கள் எட்டியுள்ளது.
- பதினொரு மாநிலங்கள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) இலக்கான 25ஐ எட்டியுள்ளது.
SRS – Statistical Report
SDG- Sustainable Development Goals
உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி ஓய்வு பெற்றார்!!!
- உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் வெள்ளிக்கிழமை(23-09-2022) அன்று ஓய்வு பெற்றார்.
- 2017 -ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.
- 2018 -ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.
- மேலும் இவர் நீதி துறைக்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.
- இவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3- ஆக குறைந்துள்ளது.
- கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 26 -ம் தேதி முதல் உச்சநீதிமன்றம் தொடங்கிய நிலையில் அந்த நீதிமன்ற பெண் நீதிபதிகளாக 11 பேர் நியமிக்கப்பட்டனர், அவர்களில் 8 வது பெண் நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனங்கள்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய இயக்குனர் நியமனம்!!!
- எய்ம்ஸ் மருத்துவமனையில் 2017 முதல் டாக்டர் ரந்தீப் குலேரியா இயக்குனராக பதவி வகித்தார், அவரது பதவிக்காலம் 23/09/2022 அன்று முடிவடைந்ததை அடுத்து புதிய இயக்குநராக ஸ்ரீ நிவாஸ் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.
- ஸ்ரீனிவாஸ் ஐதாராபாத்தின் சனத்நகரில் உள்ள இ.எஸ் .ஐ மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி குழந்தைகள் நலப்பிரிவுத் துறை தலைவராக பணிபுரிந்தார்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஸ்ரீனிவாஸ் ஐந்தாண்டு காலத்திற்கு அல்லது 65 வயதை அடையும் வரை இயக்குநராக பதவியில் இருப்பார்.
- எய்ம் எஸ் நிறுவனம், எய்ம்ஸ் சட்டம், 1956-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படுகிறது.
பவர் கிரிட் நிறுவனத்திற்கு புதிய நிதி இயக்குனர் நியமனம்!!!
- தலைநகரமான தில்லியை சேர்ந்த பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற பொதுத்துறை நிறுவனத்தின் புதிய நிதி இயக்குனராக ஜி.ரவிசங்கர் பதவி ஏற்று உள்ளார்,
- இவர் சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்றவர்
- இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் பதவியை வகித்தார்,தற்போது புதிய இயக்குனராக பதவி ஏற்றுள்ள இவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்த நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவு, சார்பு நிறுவனங்கள்,மண்டல தலைமையகம் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
- மேலும் இவர்,இந்த நிறுவனத்தில் 32 ஆண்டு கால நீண்ட பணி அனுபவம் கொண்டவர்.
தமிழ்நாடு செய்திகள்
முதல்வர் ஸ்டாலின் 2.80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்
- 2.80 லட்சம் மரக்கன்றுகள் நடும் தமிழ்நாடு பசுமை இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.
- தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2.80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை வண்டலூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.
- பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
- இத்திட்டம் பழங்குடியினர், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோருக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் பரப்புரை கழகத்தை முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைக்கிறார்!!
- முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ,சனிக்கிழமை மாலை தமிழ் பரப்புரை கழகத்தை தொடங்கி வைக்கிறார்.
- உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் மற்றும் இளம் தலைமுறையினரும் தமிழ் மொழியைக் கற்பிக்கவும் ,தமிழ் மொழியின் சிறப்பைமக்களிடம் கொண்டு செல்லும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
- மேலும் தமிழின் பெருமையை மக்களிடம் கொண்டு செல்வதில் ஒரு பகுதியாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்களுக்கு தமிழை கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் மற்றும் தமிழ் பாடநூல்கள் தயாரிக்கும் பணிகளுக்காக தமிழ் பரப்புரை கழகம் தொடங்கப்படவுள்ளது .
- இப்பணிக்கு முதல் கட்டமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு செப்டம்பர் 26-ம் தேதி நடக்க இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!!!
- தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் செப்டம்பர் 26-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
- இதில், ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்ட மசோதாவை இறுதி செய்து ஒப்புதல் அளிக்கவும், புதிய முதலீடுகளுக்கு அனுமதி மற்றும் சலுகைகள் அளிக்கவும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
- தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளால் ஏராளமானோர் பணத்தைப் பறிகொடுத்து, தற்கொலை செய்து கொள்கின்றனர்.
- இந்நிலையில் தற்போதைய திமுக அரசு, சட்டவல்லுநர்களுடன் ஆய்வு செய்தும், பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டும், புதிய அவசரச் சட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
- அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு . மேலும், விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொருளாதார செய்திகள்
ஏப்ரல் – ஜூன் 2022 காலாண்டில் வணிக வங்கிகளின் (SCBs) கடன் வளர்ச்சி 14% ஆக அதிகரித்துள்ளது!!!
- வணிக வங்கிகளின் (SCBs) கடன் வளர்ச்சி ஏப்ரல்-ஜூன் 2022 காலாண்டில் 14% ஆக அதிகரித்துள்ளது,,
- தொடர்ந்து 10 காலாண்டுகள் சரிவுக்குப் பிறகு இது முதல் காலாண்டு அதிகரித்துள்ளது
- ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 6% ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டில் பதிவான 10.7% வளர்ச்சியை விடவும் அதிகமாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- வங்கிகளின் டெபாசிட் மற்றும் வரவுகளின் காலாண்டு செயல்திறனை ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
- சமீப காலத்தில் கடன் வளர்ச்சி, டெபாசிட் வளர்ச்சியை விட அதிகமாக இருப்பதால், கடன்-டெபாசிட் விகிதம் அதிகரித்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
SCB- Scheduled Commercial Bank
விருதுகள்
ஜனாதிபதி திரௌபதி முர்மு 2020-21 ஆம் ஆண்டிற்கான NSS விருதுகளை வழங்கியுள்ளார்
- ஜனாதிபதி திரௌபதி முர்மு 2020-21 ஆம் ஆண்டிற்கான (தேசிய சேவை திட்டம்) NSS விருதுகளை வழங்கியுள்ளார்.
- மொத்தம் 42 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 30 NSS தன்னார்வலர்கள், திட்ட அலுவலர்கள், பத்து NSS பிரிவுகள், இரண்டு பல்கலைக்கழகங்கள் விருதுகளைப் பெற்றன.
- இந்த விருது NSS தன்னார்வத் தொண்டர்கள், கல்லூரிகளில் உள்ள தனிநபர்களின் செயல்பாடுகளை அங்கீகரித்து வெகுமதி அளிக்க ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- NSS என்பது ஒரு மத்தியத் துறைத் திட்டமாகும், இது 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது மற்றும் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கங்கள் மாணவர் இளைஞர் தன்னார்வ சமூக சேவையின் ஆளுமை மற்றும் பண்புகளை மேம்படுத்துவதாகும்.
o NSS– National Service Scheme
கண்டுபிடிப்புகள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முழங்கால் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை காலை உருவாக்கியுள்ளது
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முழங்கால் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சுழலும் தன்மை உடைய செயற்கை காலை உருவாக்கியுள்ளது.
- இது நடப்பவரின் தன்மையை தழுவி அதற்கேற்றவாறு எளிதாக்குகிறது.
1.6 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கால் நுண்செயலி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
புவியில் அடையாளங்கள்
- காஞ்சிபுரம் அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டி அகழாய்வில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். - இந்நிலையில் ஒரு கிராம் தங்கத்தால் ஆன அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது 4000-10000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருளாக இருக்கும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புத்தக வெளியீடு
பெங்களூரில் “ஒரே நாடு ஒரே இசை” புத்தகம் வெளியிட்டு விழா!!!
- பிரபல வயலின் இசைக் கலைஞர்கள் டாக்டர் எம்.லலிதா, எம்.நந்தினி, இந்துஸ்தானி இசைப் பாடகர் பண்டிட் இமான் தாஸ் இணைந்து ‘ஒரே நாடு, ஒரே இசை’ என்ற நூலை எழுதியுள்ளனர்.
- இப்புத்தகம் ஷுபி பப்ளிகேஷன்ஸ்,வெளியீடான ‘ரீ இமேஜினிங் ஒன் நேஷன், ஒன் மியூசிக்’ என்ற தலைப்பில், முதலில் கொல்கத்தாவிலும், சமீபத்தில் பெங்களூருவிலும் வெளியிடப்பட் டது.
- இந்துஸ்தானி இசை பற்றி பாடகர் பண்டிட் இமான் தாஸும், கர்னாடக இசை பற்றி லலிதா, நந்தினியும் எழுதியுள்ளனர்.
இந்த புத்தகத்துடன், ‘ஒரே நாடு, ஒரே இசை’யை விளக்கி புதிய ராக, தாள அமைப்பில் உருவாகியுள்ள பாடல் அடங்கிய குறுந்தகடும் வெளியிட்டுள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவராக போட்டியின்றி திலீப் திர்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்!!!
- ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவராக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் திலீப் திர்கி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஹாக்கி இந்தியா அமைப்புக்கான தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற இருந்தது.
- தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்த மத்திய பிரதேச ஹாக்கி அமைப்பின் தலைவர் ராகேஷ் கத்யால், ஜார்க்கண்ட் மாநில ஹாக்கி சங்க தலைவர் போலா நாத் சிங் ஆகியோர் நேற்று தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து திலீப் திர்கி, போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- போலே நாத் சிங், பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
- துணைத் தலைவர்களாக அசிமா அலி, எஸ்விஎஸ் சுப்ரமண்ய குப்தா, பொருளாளராக தமிழ்நாடு ஹாக்கி பிரிவின் சேகர் ஜே.மனோகரன், இணை செயலாளர்களாக ஆர்த்தி சிங்,சுனில் மாலிக் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, திலிப் திர்கி தலைமையிலான நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய தினங்கள்
உலக கொரில்லா தினம் இன்று
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24 அன்று உலக கொரில்லா தினம் அனுசரிக்கப்படுகிறது.
- அழிந்து வரும் கொரில்லாகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- கொரில்லாக்கள் 1.25 முதல் 1.8 மீட்டர் உயரமும், 100 முதல் 270 கிலோ வரை எடையும், 2.6 மீட்டர் வரை நீளமும் கொண்டது.
- கொரில்லாக்கள் பெரும்பாலும் பூமத்திய ரேகை ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.
- கொரில்லாவின் தொகை பல தசாப்தங்களாக குறைந்த இனப்பெருக்க விகிதம் காரணமாக குறைந்து வருகிறது.
ஜம்முவில் மகாராஜாஹரி சிங்- ன் பிறந்தநாள் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது!!!
- செப்டம்பர் 23 அன்று வரும் மகாராஜா ஹரி சிங் கின் பிறந்தநாள் இன்று ஜம்முவில் உள்ள பல்வேறு கல்வி மற்றும் சமூக நிறுவனங்களால் மிகுந்த உற்சாகத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது.
- 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஹரிசிங்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- மகாராஜா ஹரி சிங் (23 செப்டம்பர் 1895 – 26 ஏப்ரல் 1961) ஜம்மு மற்றும் காஷ்மீர் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜா ஆவார்.
- 1947 இல், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீர் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பஷ்டூன் பழங்குடியினர் காஷ்மீர் மீது படையெடுத்து வந்த போது ராஜா சிங் அவசரநிலை காரணமாக மகாராஜா தனது முழு சமஸ்தானத்தையும் இந்தியாஉடன் இணைத்து, 26 அக்டோபர் 1947 -ல் கையெழுத்திட்டார்.
- இந்த நிகழ்வுகள் இந்தியா பாகிஸ்தான் போரை தூண்டின.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்