நடப்பு நிகழ்வுகள் – 21 அக்டோபர் 2022
தேசிய செய்திகள்
மிஷன் லைஃப் – மாநாடு
- பிரதமர் நரேந்திர மோடி கேவாடியாவில் MISSION LIFE (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) திட்டத்தை தொடங்கினார்
- MISSION LIFE என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இந்தியா தலைமையிலான உலகளாவிய இயக்கமாக விளங்கும்.
குஜராத்தின் தாபியில் உள்ள வியாராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- குஜராத்தில் உள்ள வியாரா, தபியில் ரூ.1970 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சி முயற்சிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- சாபுதாராவில் இருந்து ஒற்றுமை சிலை வரையிலான சாலையை மேம்படுத்துதல், காணாமல் போன இணைப்புகள் ஒன்றிணைத்தல் மற்றும் தபி மற்றும் நர்மதா மாவட்டங்களில் ரூ.300 கோடி மதிப்பிலான நீர் வழங்கல் திட்டங்கள் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.மேலும் பிரதமர் “நாட்டில் முதன்முறையாக,பிரபு பிர்சா முண்டாவின் பிறந்தநாளை நவம்பர் 15 அன்று பழங்குடியினரின் பெருமை தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
2022க்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை தொடங்கி வைத்தார் தர்மேந்திரா பிரதான்
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடித்தளம் 2022க்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
- நிகழ்வில் உரையாற்றிய திரு. பிரதான், பள்ளி மாணவர்களுக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பைத் தயாரிப்பது தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் முக்கியப் பகுதியாகும் என்று தெரிவித்தார்.
- இந்நிகழ்ச்சியில்,கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான பால்வதிகா திட்டத்தையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சர்வதேச செய்திகள்
இணைய சுதந்திரம்– ப்ரீடம் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது
- இந்தியாவில் இணைய சுதந்திரம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முன்னேற்றம் அடைந்திருப்பத்தை அமெரிக்கா நிறுவனமான ப்ரீட ம் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- இணைய சேவைகளை துண்டிப்பது, இணையத்தின் வேகம் குறைக்கப்படுவது,இணைய தகவல்களை கட்டுப்படுத்துவது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இணைய சுதந்திரம் கணக்கிடப்படுகிறது.
- மேலும் 2021-ல் 49 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 51 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியை ராஜினாமா செய்தார்
- லிஸ் ட்ரஸ் 45 நாட்கள் பதவிக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார், பிரிட்டனின் மிகக் குறுகிய காலப் பிரதமர் லிஸ் ட்ரஸ் ஆவார்.
- பிரிட்டன் ஏற்பட்ட பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர் பதவி விளக்கினார் மேலும் அடுத்த பிரதமர்க்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்
தமிழகத்தில் புகை குழல் கூடத்துக்கு தடை
- சென்னை மாநகரங்களில் புகை குழல் கூடம் அதிகரித்து வருவதை தொடர்ந்து மக்களின் உடல் நலம் கருதி புகை குழல் கூடங்களுக்கு தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
- மேலும் தடையை மீறி புகை கூடங்கள் நடத்தினால் 1 முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனையும் மற்றும் 20 முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
புத்துயிர் பெறுகிறது இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் திட்டம்
- மகாராஷ்டிரா மாநிலம் ஜெய்தாபூரில் 9900 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத் திட்டம் மீண்டும் தொடங்கபடஉள்ளது.
- இத்திட்டத்தின் மூலம் குறைவான விலையில் இந்தியாவிற்கு மின்சாரம் கிடைக்கும்,மற்றும் கரியமில வாயு வெளியேற்றமும் குறைக்கப்படும்.
நியமனங்கள்
பிரதீப் சிங் கரோலா IPTOவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
- முன்னாள் சிவில் ஏவியேஷன் செயலாளர் பிரதீப் சிங் கரோலா இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ITPO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- கரோலா, 1985 பேட்ச்சைச் சேர்ந்த கர்நாடகாவில் இந்திய ஆட்சி பணியில் (IAS) பொறுப்பேற்று , செப்டம்பர் 2021 இல் சிவில் விமானப் போக்குவரத்துச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
தொல்லியல் ஆய்வுகள்
ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்த மொசைக் கட்டுமான அமைப்பு கண்டுபிடிப்பு
- சிரியாவில் ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்த மொசைக் கற்கள் கொண்ட கட்டுமானத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான இந்த கட்டுமான அமைப்பு 20 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது மேலும் இந்த மொசைக் கற்களில் கிரேக்க புராண கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
ஓமிக்ரானின் 300 க்கும் மேற்பட்ட துணை வரிசைகளில் BA.5 முதன்மையானது
- உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழுவின்படி, 300க்கும் மேற்பட்ட ஓமிக்ரானின் துணைப் பிரிவுகள் உலகளவில் புழக்கத்தில் உள்ளன, பெரும்பாலானவை (~76%) பிஏ.5 துணைப் பிரிவுகளாகும்.
- தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வாராந்திர இறப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், மற்ற சுவாச வைரஸ்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.
ஐரோப்பா முதல் ஏரியன் 6 ராக்கெட்டை ஏவ திட்டமிட்டுள்ளது
- ஐரோப்பா அதன் அடுத்த தலைமுறை விண்வெளி ஏவுதளமான முதல் ஏரியன் 6 ராக்கெட்டை 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஏவ திட்டமிடபட்டுள்ளது,ஏரியன் 6 ஆனது ஏர்பஸ் மற்றும் சஃப்ரானின் கூட்டு முயற்சியான ஏரியன் குரூப் மூலம் உருவாக்கப்பட்டது.
- $3.9 பில்லியனுக்கும் குறைவான செலவில் உருவாக்கப்பட்டது மற்றும் முதலில் ஜூலை 2020 இல் தொடக்க வெளியீட்டிற்குத் திட்டமிடப்பட்டது.
புத்தக வெளியீடு
Re-Discovering Self in Selfless Service–புத்தகம் வெளியீடு
- தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் தனது 4-வது ஆண்டு பணியை தொடங்கியுள்ள நிலையில், அவரது 3 ஆண்டு கால பணிகள் குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- Re-Discovering Self in Selfless Service’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது.
விருதுகள்
ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ் விருதுகள் 2022
- இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ் விருதுகளின் 14வது பதிப்பில் ,ஹெல்த்கேரில் டிஜிட்டல் கண்டுபிடிப்பிற்கான பிரிவில் Dozee நிறுவனத்திற்கு வழங்கியது.
- இந்தியாவின் முதல் தொடர்பு இல்லாத AI-ஆல் இயங்கும் தொலை நோயாளி கண்காணிப்பு(RPM) அமைப்புக்காக இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பான செயல் பாட்டிற்கான RM விருதுகள்
- மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் 2021-22 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ரக்ஷா மந்திரியின் விருதுகளை தனியார் துறை உட்பட இந்திய பாதுகாப்புத் துறைகளுக்கு அக்டோபர் 20 அன்று குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற 12 வது DefExpo வில் வழங்கினார்.
- மேலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 22 விருதுகள் வழங்கப்பட்டன,2022 ஆம் ஆண்டு முதல் தனியார் தொழில்துறைகளை இணைத்து விருதுகள் மீண்டும் வழங்கபட்டுள்ளது, அரசாங்கத்தின் ‘ஆத்மநிர்பர் பாரத் அபியானை’ ஊக்குவிப்பதோடு, இந்த நிறுவனங்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும், என்றார்.
கர்நாடக ரத்னா விருது 2022
- கர்நாடக ரத்னா விருது என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மிக உயரிய சிவிலியன் விருதாகும் . எந்தவொரு துறையிலும் ஒரு நபரின் அசாதாரண பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இது வழங்கப்படுகிறது. இது 1992 ஆம் ஆண்டு கர்நாடக அரசால் நிறுவப்பட்டது. மொத்தம் பத்து பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
- கடந்த ஆண்டு காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மரணத்திற்குப் பின் ‘கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். நவம்பர் 1,2022 அன்று, கர்நாடக மாநிலம் உருவான நாளான கன்னட ராஜ்யோத்சவா தினத்தில் விருது வழங்கப்படவுள்ளது.
விளையாட்டு செய்திகள்
ஐந்தாவது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் அறிவிப்பு
- கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டி வரவிருக்கும் பதிப்பு மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
- இதற்கான அறிவிப்பை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ அனுராக் சிங் தாக்கூர் தேசிய தலைநகரில் வெளியிட்டார்.
- இந்த விளையாட்டுப் போட்டி 31 ஜனவரி 2023 அன்று தொடங்கி பிப்ரவரி 11, 2023 அன்று முடிவடையும்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2022
- 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள பாண்டேவெட்ரா நகரில் நடந்து வருகிறது.
- இப்போட்டியில் உக்ரைன் வீரர் டிமிட்ரோ வாசெட்ஸ்கியுடன் சஜன் பன்வாலா போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இதன் மூலம் அரியானாவை சேர்ந்த சஜன் பன்வாலா இந்த போட்டியில் கிரீகோ ரோமன் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி 2022
- உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.
- இதில் ஜூனியர் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் ரவிசங்கர் ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ், திவ்யனாஷ் சிங் பன்வார், விதித் ஜெயின் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதி சுற்றில் 17-11 என்ற புள்ளி கணக்கில் சீனாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
- 10 மீட்டர் ஏர் ரைஃபில் ஜூனியர் மகளிர் தனிநபர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் ரமிதா சீனாவின் யிங் -ஐ வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
- இதுவரை 10 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் இந்தியா 2-ஆவது இடத்தில் இருக்கிறது.
அலிசா ஹீலி துணை கேப்டனாக நியமனம்
- கிரிக்கெட் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் துணை கேப்டனாக நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் அலிசா ஹீலியை நியமிக்கப்பட்டுள்ளார்.
- கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரேச்சல் ஹெய்ன்ஸிடம் இருந்து ஹீலி பொறுப்பேற்றார்.
முக்கிய தினம்
உலக அயோடின் குறைபாட்டுத் தினம்:
- உலக அயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் தடுப்பு தினம் (IDD) அல்லது உலக அயோடின் குறைபாட்டுத் தினம் ஒவ்வொரு அக்டோபர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாள் மனித ஆரோக்கியத்தில் அயோடின் வகிக்கும் முக்கியமான செயல்பாடு குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்