நடப்பு நிகழ்வுகள் – 17 டிசம்பர் 2022
தேசிய செய்திகள்
இந்தியாவில் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
- இந்தியாவில் 5,000 கி.மீ. தொலைவு வரை சென்று இலக்கைத் தாக்கக் கூடிய அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட ‘அக்னி- 5’ பாலிஸ்டிக் ஏவுகணை ஒடிஸா கடற்கரையையொட்டி உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து இந்த ஏவுகணை சோதனை இந்தியா வெற்றிகரமாக செய்துள்ளது.
- இந்த ஏவுகணை, சீனாவின் வட எல்லை வரையிலும், ஐரோப்பாவின் சில பகுதிகள் வரையிலும் உள்ள இலக்குகளை நோக்கி அக்னி-5 ஏவுகணையை துல்லியமாகச் செலுத்த இயலும்.
தபால் நிலையங்களின் நவீனமயமாக்கல் திட்டம் 2.0
- தகவல் தொழில்நுட்பத் துறையின் நவீனமயமாக்கல் திட்டம்0, எட்டு ஆண்டுகளுக்காக ₹ 5785 கோடி செலவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீ தேவுசின் சவுகான் தெரிவித்தார்.
- தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டம்0 பல்வேறு பயன்பாடுகள், அறிவுபூர்வமான தளங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது.
இந்திய மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு
- இந்தியா டுடே செய்தி நிறுவனம் ஸ்டேட் ஆப் ஸ்டேட்ஸ் என்ற பெயரில் மாநிலங்களின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு அதற்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.அதன் படி 2022-ம் ஆண்டு வெளியிட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
- பொருளாதாரம், உட்கட்டமைப்பு வசதி, மருத்துவம், விவசாயம், கல்வி, சட்டம் ஒழுங்கு, ஆளுமை, ஒருமித்த வளர்ச்சி, தொழில் முனைவு, சுற்றுலா, சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் இந்தியா டுடே நிறுவனம், பெரிய மற்றும் சிறிய மாநிலங்களை பட்டியலிட்டது.
- 1,312 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இமாச்சல பிரதேசமும்,
- 1,263 புள்ளிகளுடன் கேரளம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
- 1,161 புள்ளிகளுடன் கர்நாடகா 8வது இடத்தை பிடித்துள்ளது.
- மத்திய பிரதேசம் 13வது இடத்தையும்,
- உத்திரப்பிரதேசம் 18வது இடத்தையும் பிடித்துள்ளன.
பரதீப் துறைமுகம் அதிக எண்ணிக்கையிலான பொருட்களை கையாண்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது
- பாரதீப் துறைமுகம் 14 டிசம்பர் 2022 அன்று ஒரே நாளில் 6, 49,730 மெட்ரிக் டன் சரக்கு போக்குவரத்தை கையாண்டதன் மூலம் மற்றொரு புதிய மைல்கல்லை எட்டியது.
- வடக்கு கப்பல்துறையை ஆழப்படுத்திய பிறகு, சமீபத்தில், பாரதீப் துறைமுகம் KICT பெர்த்தில் 1, 46,554 டன் கோக்கிங் நிலக்கரியை ஏற்றிச் செல்லும்20 மீட்டர் கேப் கப்பலான MV கோல்டன் பார்னெட்டை வெற்றிகரமாக நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
“திவ்யகல்சக்தி” -2022
- மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை (DEPwD) (திவ்யங்ஜன்), இந்திய அரசு, 17.12.2022 அன்று குவஹாத்தியில் உள்ள GMCH ஆடிட்டோரியத்தில் “திவ்யகல்சக்தி” -2022 ஐ ஏற்பாடு செய்ய உள்ளது.
- இந்த பிராந்திய “திவ்ய கல் சக்தி” நிகழ்வில் வடகிழக்கு மண்டலம் முழுவதும் திவ்யாஞ்சன் நடனம், பாடல், நுண்கலைகள் போன்ற துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
NIT மணிப்பூர் மற்றும் NHIDCL இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
- தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கார்ப்பரேஷன் லிமிடெட் (NHIDCL), மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் ஒரு CPSE, Govt. அதிதீவிர தட்பவெப்ப நிலைகளை எதிர்கொள்ளும் நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதில் உள்ள சவால்களுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளைக் கண்டறிய புதுமையான தொழில்நுட்பங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அதன் படி அந்தச் செயல்பாட்டிற்காக, ஐஐடி ரூர்க்கி, ஐஐடி கான்பூர், சிஎஸ்ஐஆர்-சிஆர்ஆர்ஐ போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களுடன் என்ஹெச்ஐடிசிஎல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மேலும் 14 டிசம்பர் 2022 அன்று வீடியோ காணொளி மூலம் என்ஐடி மணிப்பூருடன் சமீபத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
IGNCA மற்றும் CSIR-TKDL இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
- இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) மற்றும் CSIR-பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகம் (CSIR-TKDL) யூனிட் இடையே புது தில்லியில் 16 டிசம்பர் 2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடப்பட்டது.
- இந்திய பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய அறிவு (TK) பற்றிய மதிப்புமிக்க தகவல்களைக் கொண்ட இரண்டு கோடி கையெழுத்துப் பிரதிகளை இந்தியா கொண்டுள்ளது. நமது பாரம்பரிய கலாச்சார வெளிப்பாடுகள் (TCE) இன்னும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வார்த்தைகள் மூலம் அனுப்பப்படுகின்றன.
- இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பாரம்பரிய கலாச்சார வெளிப்பாடுகளிலிருந்து இந்தியாவின் பாரம்பரிய அறிவு பற்றிய தகவல்களைச் சேர்ப்பது ஆகும்.
சர்வதேச செய்திகள்
அமெரிக்க செனட் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தை நிறைவேற்றியது
- யு.எஸ். செனட் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தி மற்றும் ஆண்டு பாதுகாப்புச் செலவிற்காக 858 பில்லியன் அமெரிக்க டாலர்களை அங்கீகரிக்கிறது. இதில் தைவானுக்கான பாதுகாப்பு உதவியாக 10 பில்லியன் டாலர்களும் உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர்களும் இடம் பெற்றுள்ளன.
- பென்டகனுக்கான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் (NDAA) அமைக்கும் கொள்கையை செனட்டர்கள் 83-11 இரு கட்சி பெரும்பான்மையுடன் ஆதரித்தனர்.
- தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டமானது இராணுவத்தின் கோவிட்-19 தடுப்பூசி ஆணையை ரத்து செய்தல், இராணுவ ஊதியத்தை உயர்த்துதல் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புள்ள கட்டுப்பாடுகளை விதித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை கொண்டுள்ளது
மாநில செய்திகள்
முதல் காது கேளாத வழக்கறிஞராக டெல்லி பார் கவுன்சிலில் சௌதாமினி பெத்தே பதிவு செய்தார்
- சௌதாமினி பெத்தே — டில்லி பார் கவுன்சிலில் முதல் காது கேளாத வழக்கறிஞராக பதிவு செய்தார், மேலும் அவர் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் உரிமைகளுக்காக பணியாற்றவும், கல்வி, சுகாதாரம் மற்றும் நீதிக்கான அணுகலைப் பெற அவர்களுக்கு உதவும் வகையில் பணியாற்றுவார்.
- 45 வயதான பெண் வழக்கறிஞர் இந்திய சைகை மொழி (ISL) மொழிபெயர்ப்பாளரின் மூலம் நீதிமன்றங்களில் தனது வழக்குகளை வாதிடுவார் மற்றும் காது கேளாத இளைஞர்கள் சட்டத் தொழிலில் சேரவும் அவர்களின் சமூகத்தின் நலனுக்காக சிறப்பாக பணியாற்ற உள்ளார்
பொருளாதார செய்திகள்
பாங்க் ஆஃப் இங்கிலாந்து அதன் முக்கிய வட்டி விகிதத்தை 3% இலிருந்து 3.5% ஆக உயர்த்துகிறது
- பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் முக்கிய வட்டி விகிதம் 3 சதவீதத்தில் இருந்து5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அக்டோபரில் விலை வளர்ச்சி 41 ஆண்டுகால உயர்வை எட்டிய பின்னர், பணவீக்கத்தை இலக்கை நோக்கி திரும்ப விரைவுபடுத்த வங்கி முயற்சிப்பதால், இது தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக வட்டி விகித உயர்வு ஏற்பட்டுள்ளது.
- பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் நாணயக் கொள்கைக் குழு இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக 6-3 என்ற கணக்கில் வாக்களித்தது மற்றும் விலைகள் மற்றும் ஊதியங்களில் இருந்து உள்நாட்டு பணவீக்க அழுத்தங்களைச் சமாளிக்க வங்கி விகிதத்தில் மேலும் அதிகரிப்பு தேவைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.8% குறைந்துள்ளது
- 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி8 வீதம் குறைந்துள்ளது. ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 வீதமாக குறைந்துள்ளதால் இந்த வருடத்தின் காலாண்டு செயல்திறன் மிகவும் சரிவான நிலையில் உள்ளது.
- பணம் அச்சிடுதல் மற்றும் நாணயச் சரிவு காரணமாக இலங்கை இரண்டு வருடங்களில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
- தொழில்துறைகளில்2 சதவீதத்தில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது, சேவைகள் 2.6 சதவீதத்தால் சரிவு . விவசாயம் 8.7 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது
நியமனங்கள்
தமிழக அரசு தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நியமனம்
- தமிழக அரசு பணியாளா் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி.,) தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக அஜய் யாதவ் பொறுப்பேற்றுக் கொண்டார்,இவா்முன்னதாக எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார்.
- அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த கிரண் குராலா, பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
விண்வெளியில் ரேடியோ உமிழ்வின் மர்ம வட்டங்கள் கண்டுபிடிப்பு
- ஒரு புதிய ஆராய்ச்சியில், வானவெளியில் ஆழமான வானொலி உமிழ்வின் மர்மமான மங்கலான வட்டங்களுக்கு நம்பத்தகுந்த விளக்கங்களை வழங்குகிறது, இது Odd Radio Circles (ORCs) என்று அழைக்கப்படும், இது மிகவும் உணர்திறன் வாய்ந்த சர்வதேச ரேடியோ தொலைநோக்கிகள் சிலவற்றைப் பயன்படுத்தி சமீபத்தில் கண்டறியப்பட்டது.
- டாக்டர். அமிதேஷ் ஓமர், நைனிடால், ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் கழகத்தின் (ARIES) விஞ்ஞானி (இந்திய அரசின் DST இன் தன்னாட்சி நிறுவனம்) தனது ஆராய்ச்சியில் இந்த ORC களில் சில, தெர்மோநியூக்ளியர் சூப்பர்நோவாக்களின் எச்சங்களாக இருக்கலாம் என்று நிரூபித்துள்ளார். சூரியனை விட4 மடங்கு கனமான பைனரி அமைப்பில் வெள்ளை குள்ள நட்சத்திரத்தின் வெடிப்பு என கண்டறியபட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
2022-ம் ஆண்டின் உலக சாம்பியன்கள் பட்டியல் வெளியீடு
- சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) சார்பில் 2022-ம் ஆண்டின் உலக சாம்பியன்களாக ஸ்வியாடெக், ரபேல் நடால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனா்,ரபேல் நடால் உலக சாம்பியனாக தோ்வு பெறுவது 5-ஆவது முறையாகும். அதே வேளையில், ஸ்வியாடெக் முதன்முறையாக உலக சாம்பியனாக தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
- பெண்கள் இரட்டையா் பிரிவில் பார்பரா -கேத்ரீனாவும், ஆடவரில் ராஜீவ் ராம்-ஜோ சாலிஸ்பரியும் உலக சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.