நடப்பு நிகழ்வுகள் – 16 டிசம்பர் 2022
தேசிய செய்திகள்
கூட்டுப் பயிற்சி “KAZIND-22”
- இந்தோ – கஜகஸ்தான் இடையேயான “KAZIND-22” கூட்டுப் பயிற்சியின் 6வது பதிப்பானது டிசம்பர் 15 முதல் 28 வரை உம்ரோய் (மேகாலயா) வில் நடைபெறுகிறது.
- Kazind கூட்டு பயிற்சியானது இரு நாடுகளுக்கு இடையே நேர்மறையான இராணுவ உறவுகளை உருவாக்குவதையும், மற்றும் அரை நகர்ப்புற அல்லது காடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஒன்றாக செயல்படும் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் மேலும் சில பொருட்களுக்கு புவிசார் குறியீட்டு GI வழங்கப்பட்டுள்ளது
- நாடு முழுவதும் உள்ள 9 புதிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI) மத்திய அரசால் வழங்கபட்டுள்ளது, இதன் மூலம், இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மொத்த GI தயாரிப்புகளின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது.
- அதிகபட்ச புவிசார் குறியீட்டு பொருட்கள் கொண்ட முதல் 5 மாநிலங்கள் கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகும்.
- புவியியல் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது தோற்றத்துடன் தொடர்புடைய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் தனித்துவமான பெயர் அல்லது அடையாளம் ஆகும்.
- புதிதாக சேர்க்கப்பட்ட தயாரிப்புகள்
- அஸ்ஸாமின் கமோசா,
- தெலுங்கானாவின் தந்தூர் ரெட்கிராம்,
- லடாக்கின் ரக்ட்சே கார்போ ஆப்ரிகாட்,
- மகாராஷ்டிராவின் அலிபாக் வெள்ளை வெங்காயம்,
- கேரளாவின் அட்டப்பாடி துவார,
- கேரளாவின் காந்தள்லூர் வட்டவாடா வெளுத்துள்ளி,
- கேரளாவின் கொடுங்கல்லூர் பொட்டுவெள்ளரி.
இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி அறிமுகம்
- உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பெரிதும் இந்திய பெண்களே பாதிக்கப்படுகின்றனர்,மேலும் இந்நோய்க்கான தடுப்பூசி வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை விலையானது டோசுக்கு ரூ.4 ஆயிரம் ஆக உள்ளது.
- இதனை தடுக்கும் வகையில் முற்றிலும் உள்நாட்டிலேயே ‘செர்வாவேக்’ என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சீரம் நிறுவனம் இத்தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது.
- 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் போடப்படும் என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் அரோரா தெரிவித்தார்.
பிரதான் மந்திரி கௌஷல் கோ காம் காரியக்ரம் (PMKKK) பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன் (PM VIKAS) திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது
- சிறுபான்மையினர் விவகார அமைச்சர் திருமதி.ஸ்மிருதி ஜூபின் இரானி பிரதான் மந்திரி கௌஷல் கோ காம் காரியக்ரம் (PMKKK) திட்டம் பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன் (PM VIKAS) திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- PM VIKAS திட்டம் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக கைவினைஞர் சமூகங்கள், திறன் மேம்பாடு, கல்வி, பெண்கள் தலைமைத்துவம் மற்றும் தொழில்முனைவு ஆகியவர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.
சூர்ய கிரண் -XVI கூட்டுப் பயிற்சி
- இந்தோ-நேபாள கூட்டுப் பயிற்சியான “சூர்ய கிரண்-XVI” 16வது பதிப்பு இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான நேபாள ராணுவப் போர்ப் பள்ளியில், சல்ஜாண்டியில் (நேபாளம்), டிசம்பர் 16 – 29, 2022 வரை நடத்தப்படும்.
- “சூரிய கிரண்” என்ற பயிற்சி ஆண்டுதோறும் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே நடத்தப்படுகிறது, இதன் நோக்கத்துடன் காடுகளில் போர் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்க்கும் அதிக கிடைக்கும் பேரிடர் மீட்பு (HADR) மற்றும் ஐ.நா ஆணையத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது.
- பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய கடந்த 2016, செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- அந்த வகையில் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்த 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்துள்ள நிலையில், கடைசி மற்றும் 36 ஆவது ரஃபேல் விமானம் 15/12/2022 அன்று இந்தியா வந்தடைந்தது.
சர்வதேச செய்திகள்
நெவாடாவின் காட்டுப்பூ (Tiehm’s buckwheat) அழிந்து வரும் இனமாக மாறுகிறது
- எஸ்மரால்டா கவுண்டியின் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும் அரிதான காட்டுப்பூ டைஹம்ஸ் பக்வீட், அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு ஆணையம் இந்த பூவை அழிந்துவரும் இனமாக அறிவித்துள்ளது .
- டைஹம்ஸ் பக்வீட் என்பது ஒரு சிறிய, வற்றாத மூலிகை தாவரமாகும், இது சுமார் 30 செமீ (12 அங்குலம்) குறுக்கே வளரும் மற்றும் நீல சாம்பல் இலைகளுடன் 16 செமீ (6 அங்குலம்) உயரம் வரை வளரும்,தற்போது சுமார் 16,000 தாவரங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், டைஹம்ஸ் பக்வீட் அழிவின் விளிம்பில் இருப்பதாக கருதப்படுகிறது.
நியமனங்கள்
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி நியமனம்
- உலக சுகாதார அமைப்பு (WHO) புதிய தலைமை விஞ்ஞானியாக டாக்டர் ஜெர்மி ஃபாரர் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் டாக்டர் அமெலியா லாடு அஃபுஹாமங்கோ துய்புலோடு உலக சுகாதார அமைப்பின் தலைமை செவிலியர் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- வெல்கம் அறக்கட்டளையின் இயக்குநராக உள்ள டாக்டர் ஃபரார், அவர் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் WHO இல் இணைவார். WHO இன் முதன்மை விஞ்ஞானியாக, டாக்டர் ஃபரார் அறிவியல் பிரிவை மேற்பார்வையாளராக பணியாற்றுவார்.
விருதுகள்
உலகின் சிறந்த 10 முதன்மையான மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விருது அறிவிப்பு
- ஐக்கிய நாடுகள் சபை (UN) இந்தியாவின் புனித நதியான கங்கையை புத்துயிர் பெறுவதற்கான “நமாமி கங்கே” முயற்சியை இயற்கை உலகிற்கு புத்துயிர் அளிக்கும் சிறந்த 10 உலக மறுசீரமைப்புத் திட்டங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.
- டிசம்பர் 14, 2022 அன்று கனடாவின் மாண்ட்ரீலில் நடந்த பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டிற்கான (CBD) கட்சிகளின் 15வது மாநாட்டில் (COP15) நடந்த விழாவில், நமாமி கங்கேயின் இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ ஜி. அசோக் குமார் அவர்களால் இந்த விருதைப் பெற்றார்.
- இந்தியாவின் இரண்டாவது தேசிய சின்னமான கங்கை நதி மாசுபடுவதைத் தடுக்கவும், 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நதிப்படுகையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் உள்ள கங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் திட்டம் ”நமாமி கங்கே” எனப்படும்.
தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள்
- தேசிய எரிசக்தி சேமிப்பு விருது வழங்கும் விழா புது தில்லி விக்யான் பவனில் நடைபெற்றது, விழாவில் இந்திய ஜனாதிபதி, ஸ்ரீமதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
- இந்த விருதுகள் 2022 ஆம் ஆண்டில் சிறந்த ஆற்றல் மேலாண்மை நடைமுறைகளுக்காக வழங்கப்படுகின்றன; ரயில்வே துறை மொத்தம் 9 விருதுகளைப் பெற்றுள்ளது.
- விருது பெற்றவர்கள்
- போக்குவரத்து வகை / ரயில் நிலையங்கள் துறை:
- கச்சேகுடா ரயில் நிலையம் முதல் பரிசைப் பெற்றது
- குண்டக்கல் ரயில் நிலையம் இரண்டாம் பரிசை வென்றது
- கான்பூர் மத்திய ரயில் நிலையம் தகுதிச் சான்றிதழை வென்றது
- தெனாலி ரயில் நிலையம் தகுதிச் சான்றிதழை வென்றது
- ராஜமுத்ரி ரயில் நிலையம் (SCR) தகுதிச் சான்றிதழை வென்றது
- கட்டிடங்கள் வகை / அரசு கட்டிடங்கள் துறை:
- வட மேற்கு ரயில்வேயின் அஜ்மீர் பணிமனை முதல் பரிசைப் பெற்றது.
- ரயில்வே மருத்துவமனை / குண்டக்கல் (SCR) தகுதிச் சான்றிதழை வென்றது
- மின்சார இழுவை பயிற்சி மையம் (ETTC), விஜயவாடா (SCR) தகுதிச் சான்றிதழை வென்றது.
- டிவிஷனல் ரயில்வே மருத்துவமனை, பிரதாப்நகர் (WR) தகுதிச் சான்றிதழை வென்றது.
விளையாட்டு செய்திகள்
பெண்கள் நேசன்ஸ் ஹாக்கி போட்டி
- பெண்களுக்கான நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி 8 அணிகளுக்கு இடையிலான ஸ்பெயினின் வலேன்சியா நகரில் நடந்து வருகிறது.
- இதில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து வென்றது. முன்னதாக சிலி, ஜப்பானை வீழ்த்திய இந்தியா 3 வெற்றிகளுடன் அரைஇறுதியை எட்டியது. அரைஇறுதி போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியுடன் மோதவுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி 2022
- உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, மொராக்கோ அணியை எதிர்த்து போட்டியிட்டு இறுதி சுற்றுக்கு பிரான்ஸ் அணி முன்னேறியுள்ளது.
- உலக கோப்பைக்கான இறுதிப் போட்டி டிசம்பர் 18ம் தேதி பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
FINA உலக நீச்சல் சாம்பியன்ஷிப் 2022
- FINA உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி – 2022 ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நகரில் நடைபெற்றது.
- லிதுவேனியாவின் ருட்டா மெய்லுடைட்டில், ஒட்டுமொத்த பந்தய தூரத்தை கடந்து 1 நிமிடம், 3.81 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். தென்னாப்பிரிக்காவின் 19 வயதான லாரா வான் நிகெர்க் 1 நிமிடம்93 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் லில்லி கிங் 1 நிமிடம் 3.94 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
- அந்த போட்டியில் இந்திய நீச்சல் வீராங்கனை சாஹத் அரோரா, பெண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பந்தயத்தில் 1 நிமிடம், 13.13 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார்.
முக்கிய தினம்
விஜய் திவாஸ் 2022
- இந்தியாவில் டிசம்பர் 16 அன்று விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
- டிசம்பர் 3 அன்று, இந்திய-பாகிஸ்தான் போர் 1971 இல் தொடங்கி 13 நாட்கள் நீடித்தது. டிசம்பர் 16 அன்று அப்போர் முடிவுக்கு வந்தது, பாகிஸ்தான் இந்தியாவிடம் சரணடைந்தது. பதின்மூன்று நாள் போரின் விளைவாக பாகிஸ்தான் படைகள் முழுமையாக சரணடைந்து மிகப்பெரிய வெற்றியை இந்தியா பெற்றது,இது விஜய் திவாஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.
சர்தார் வல்லபாய் படேல் நினைவு நாள்
- இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் முக்கிய பங்கு வகித்தார். அவர் நன்கு படித்த, செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர் மற்றும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், முதல் துணைப் பிரதமராகவும் ஆகஸ்ட் 15, 1947 முதல் டிசம்பர் 15, 1950 வரை பணியாற்றியுள்ளார்.
- இந்தியாவின் இரும்பு மனிதனான சர்தார் வல்லபாய் படேல் மாரடைப்பால் டிசம்பர் 15, 1950 அன்று பம்பாயில் காலமானார், இந்த ஆண்டு 72வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.