தேசிய செய்திகள்
யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் (UHC) மாநாடு 2022
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2022 டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாரணாசியில் “யுனிவர்சல் கவரேஜ் டே (UHC) 2022” நினைவாக இரண்டு நாள் மாநாடு நடைபெறவுள்ளது.
- யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் (UHC) நோக்கமானது, ‘அனைத்து மக்களுக்கும் தேவையான ஊக்குவிப்பு, தடுப்பு, நோய் குணப்படுத்தும் மற்றும் மறுவாழ்வு சுகாதார சேவைகள், போதுமான தரத்தில் பயனுள்ளதாக இருக்கும்.அதே நேரத்தில் இந்த சேவைகளுக்கு பணம் செலுத்தும் போது மக்கள் நிதி நெருக்கடியை சந்திக்காமல் இருப்பதையும் உறுதிசெய்கிறது.
- UHC நாளின் கருப்பொருள் “நாம் விரும்பும் உலகத்தை உருவாக்குங்கள்: அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்” என்பதாகும்.
கிரிஷி உதான் திட்டம் 2.0 மேலும் 5 நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது
- கிருஷி உதான் திட்டம் 2.0 அக்டோபர் 27, 2021 அன்று இந்தியாவில் உள்ள மலைப்பாங்கான பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் அழிந்துபோகும் பொருட்களை விரைவாக கொண்டு செல்வதற்காக அறிவிக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் முதல் கட்டம் 25 விமான நிலையங்களில் வடகிழக்கு, மலை மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் கவனம் செலுத்தி செயல்படுத்தப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு இது 28 விமான நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது, தற்போது மேலும் 5 விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டு மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச செய்திகள்
19வது ஆசிய கலைப் போட்டி வங்கதேசத்தில் நடைபெறுகிறது
- பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்காவில் 19வது ஆசிய கலை போட்டியை தொடங்கி வைத்தார்,
- இக்கலை கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்கும் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புதிய ஊடகக் கலை ஓவியங்கள், அச்சிட்டுகள், புகைப்படங்கள், செயல்திறன் கலை, சிற்பம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்கள் காட்சிப்படுத்தப்படும்.
- இருநாள் கருத்தரங்கம் ‘வீடு மற்றும் இடம்பெயர்வு’ என்ற கருப்பொருளுடன் நடத்தப்படுகிறது.
சர்வதேச கடற்படை மதிப்பாய்வு 2022
- தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு நினைவாகவும், பங்களாதேஷின் சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடவும் பங்களாதேஷ் கடற்படை (BN) மூலம் 2022 -ம் ஆண்டுக்கான சர்வதேச கடற்படை மதிப்பாய்வு நடத்தப்படுகிறது.
- இந்திய கடற்படை கப்பல்கள் கொச்சி, கவரட்டி மற்றும் சுமேதா வங்காளதேசத்தின் காக்ஸ் பஜாருக்கு வந்து பங்களாதேஷ் கடற்படை (BN) நடத்தும் முதல் சர்வதேச கடற்படை மதிப்பாய்வில் (IFR) பங்கேற்கின்றன.
- ஐஎன்எஸ் கொச்சி இந்திய கடற்படையின் மும்பையை தளமாகக் கொண்ட மேற்கு கடற்படையின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் ஐஎன்எஸ் கவரத்தி மற்றும் ஐஎன்எஸ் சுமேதா ஆகியவை விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையின் ஒரு பகுதியாகும்.
2022- ஆண்டுக்கான கடவுச்சீட்டு குறியீடு தரவரிசை
- ஆர்டன் கேப்பிட்டலால் 2022 -ம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு குறியீடு வெளியிடப்பட்டது, இது உலகின் வலிமையான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்டுகளை தரவரிசைப்படுத்தியது.
- அந்த பட்டியலில் 2022 ஆம் ஆண்டிற்கான பாஸ்போர்ட் மதிப்பீட்டில் ஐக்கிய அமீரகம் முதலிடத்திலும், உலகின் வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 87வது இடத்திலும் உள்ளது.
- கடவுச்சீட்டுக் குறியீடு ஐக்கிய நாடுகள் சபையின் 139 உறுப்பினர்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பட்டியலுக்காக ஆறு பிரதேசங்கள் பரிசீலிக்கப்பட்டன.
மாநில செய்திகள்
பெங்களூருவில் புதிய தொழில் நுட்பத்துடன் ‘ரேபிட் ரோடு‘ சாலை திறக்கப்பட்டுள்ளது
- பெங்களூருவில் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரேபிட் ரோடு சாலையை அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
- நகரில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை முடிக்க அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு பணிகளுக்காக சாலையை உடைத்து அகற்றுவது மிகவும் கடினமான பணியாகும், இதை தவிர்க்கும் வகையில், சோதனை அடிப்படையில் ” ரேபிட் ரோடு ” சாலை திறக்கப்பட்டுள்ளது.
- “ரேபிட் ரோடு” சாலை – இத் திட்டத்தில் முன்கூட்டியே கான்கிரீட் சிலாப்புகள் தயாரிக்கப்பட்டு அதை எடுத்து வைத்து சாலை அமைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்ற இயக்க திட்டம் தொடங்கப்பட்டது
- தமிழகத்தில் கால நிலை மாற்றத்தை கண்காணிக்கும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள காலநிலை மாற்ற இயக்க திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் டிசம்பர் 9, 2022 அன்று தொடக்கி வைக்கிறார்.
- ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்’ திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.77.35 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளது.
- இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க ரூ.3.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்கங்களுக்கு மாவட்ட ஆட்சியா் தலைவராக இருப்பார்.
தமிழகத்தில் சர்வதேச தகவல் தொல்நுட்ப கருத்தரங்கம் 2023-ம் ஆண்டு தொடங்கப்படவுள்ளது
- தமிழக அரசு சார்பில் வளரும் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு சென்னையில் 2023 -ம் ஆண்டு மார்ச் 23 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
- தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) சார்பில் ‘தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர்ப்பு’ என்ற கருத்துருவில் மாபெரும் உச்சி மாநாடு நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்தில் 53,301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், கையுறை, கால் உறை, ஒளிரும் மேல்சட்டை ஆகியவை வழங்கப்படும்.மேலும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறை காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தும் புதிய திட்டம் அறிமுகம்
- தமிழகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிறை காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் மத்திய புழல் சிறையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இத்திட்டம் முதல் கட்டமாக புழல் மத்திய சிறை -1 ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சிறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும், சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் நேரலையும் காண முடியும்.
- தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச் சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள், 12 சிறுவா் சீா்திருத்தப்பள்ளிகள் (பார் ஸ்டல் பள்ளிகள்), 3 திறந்த வெளிச் சிறைகள், 3 சிறப்புச் சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன.
நியமனங்கள்
அமெரிக்காவின் இளைய கறுப்பின மேயராக ஜெய்லன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் இருந்து கிழக்கே இயர்லே என்ற சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தலில்,சாலை மற்றும் துப்புரவு சூப்பிரெண்டாக உள்ள நெமி மேத்யூஸ் என்பவரை எதிர்த்து போட்டியிட்ட 18 வயதான ஜெய்லன் ஸ்மித் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
- இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
லூபின் ஸ்பிரோ கவாரிஸ் அமெரிக்க பொது வணிகத்தின் தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார்
- மருந்து தயாரிப்பு நிறுவனமான லூபின் லிமிடெட் அதன் அமெரிக்க ஜெனரிக்ஸ் வணிகத்தின் தலைவராக ஸ்பிரோ கவாரிஸை நியமித்தது.
- ஸ்பிரோ, ஏற்கனவே மல்லின்க்ரோட் பார்மாசூட்டிகல்ஸில் ஸ்பெஷாலிட்டி ஜெனரிக்ஸ் வணிகத்தின் தலைவராகவும், ஹிக்மாவில் உள்ள யுஎஸ் இன்ஜெக்டபிள்ஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளார், மேலும் லூபினின் யுஎஸ் ஜெனரிக்ஸ் வணிகமான நிறுவனத்தின் ஒட்டுமொத்த உத்தி, செயல்படுத்தல் மற்றும் வளர்ச்சிக்காக அவர் பணியாற்றயுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஸ்மிதா சுக்லா நியூயார்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்
- நியூயார்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஷ்மிதா சுக்லாவை முதல் துணைத் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக நியமித்துள்ளது.
- முதல் துணைத் தலைவராக, 54 வயதான சுக்லா, நிறுவனத்தின் இரண்டாவது தரவரிசை அதிகாரியாக இருப்பார். மற்றும் அவரது நியமனம் பெடரல் ரிசர்வ் அமைப்பின் ஆளுநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.
விளையாட்டு செய்திகள்
ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் 2022
- கத்தார் நாட்டில் நவம்பர் 20-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் காலிறுதி சுற்றை நெருங்கியுள்ளது.
- கால் இறுதி சுற்றுக்கு குரோஷியா, அர்ஜென்டினா, பிரேசில், நெதர்லாந்து, பிரான்ஸ், மொராக்கோ, இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் என எட்டு அணிகள் விளையாடவுள்ளன.
- கால் இறுதி போட்டியில் நேரடியா மோதும் அணிகள்
- குரோஷியா vs பிரேசில்
- நெதர்லாந்து vs அர்ஜென்டினா
- மொராக்கோ vs போர்ச்சுகல்
- இங்கிலாந்து vs பிரான்ஸ்
முக்கிய தினம்
மனித உரிமைகள் தினம்
- மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை (UDHR) 1948 இல் ஏற்றுக்கொண்டது.
- 2022 இல் மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் “அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி”.