தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு – தடையின்றி செயல்படும் தபால் சேவை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் இந்தியா முழுவதும் மருந்துகளை தபால் மூலமாக அனுப்பலாம் என பொள்ளாச்சி மாவட்ட தபால் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த தடை அமலில் உள்ள நிலையில், பார்சல் சேவைக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தபால் சேவை தொடர்ந்து நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் தபால் நிலையங்கள் வாயிலாக, இந்தியா முழுவதும் தபால், பார்சல் சேவைகள் அனுப்பி வந்தனர்.
இரவு 9 மணிவரை உணவகங்கள் திறக்க அனுமதி – அரசுக்கு கோரிக்கை!
பார்சல் சேவை தொடங்கப்பட்டத்தில் இருந்து தபால் சேவை பயன்பாடு குறைவாக காணப்பட்டது. இதற்கு காரணம் தபால் சேவை மூலமாக பார்சல் அனுப்பினால் நாட்கள் அதிகமாகும் என்பதால் தான். ஆனால் பல முக்கிய அரசு கடிதங்கள், வங்கி கடிதங்கள் தபால் மூலமாக மட்டுமே தற்போது வரை அனுப்பப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி மாவட்ட தபால் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையின் படி, கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்த போதிலும் தபால் சேவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் தபால் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பொள்ளாச்சி, உடுமலை தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணை, கிளை தபால் நிலையங்கள் வாயிலாக நாடு முழுவதும் தபால் அனுப்பப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் இருந்து முகக்கவசம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் மக்களுக்கு தடையின்றி மருந்துகள் கிடைக்கின்றன. மக்கள் தொடர்ந்து தபால் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04259 224866, 97888 15985 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.