ஆகஸ்ட் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் படிப்படியாக குறைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது பாதி மாவட்டங்களில் தினசரி குறைந்த எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகள் பதிவான நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதன்மை செயலாளர் (சுகாதாரம்) அனில் குமார் சிங்கால் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்!
அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கோவிட் -19 நிலவரத்தை முழுமையாக ஆய்வு செய்து நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் 144 பிரிவு தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், விழாக்கள் மற்றும் மத நிகழ்வுகளில் கூட்டங்கள் 150 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அனைத்து இடங்களிலும் மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், கொரோனா விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் ஐபிசி படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
8 th govt job iruntha sollunga pa