தமிழகத்தில் விரைவில் ஊரடங்கு அமல்? மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு எகிறி வருகிறது. அதனால் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு:
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவல் கடந்த இரு ஆண்டுகளாக அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை குறைய ஆரம்பித்ததால் அனைத்து நாடுகளும் ஓரளவு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
TNPSC 7ம் வகுப்பு முடித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் சென்னையில் மொத்தமாக 15 மண்டலங்கள் உள்ளது. அதில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்புகள் இல்லை என்று தெரிவித்து உள்ளனர். இது தவிர சென்னையின் மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் ஒரு நாளுக்கு இரு இலக்க எண்களில் பதிவாகி வருவதாக மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பாக தெரிவித்து உள்ளனர்.
வங்கித்துறையில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மேலும் இந்த மாதம் ஆரம்பத்தில் குறையத் தொடங்கிய கொரோனா தொற்று ஏப்ரல் 11 ஆம் தேதியில் இருந்து மீண்டும் தலை தூக்கி உள்ளது. மேலும் இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இல்லாமல் குறைவான நிலையில் தான் உள்ளது என்பதையும் கூறியுள்ளனர். மேலும் தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.