தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிஏ 2 வைரஸ் எதிரொலி! பொதுமக்கள் கலக்கம்!
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. அதனால் தொற்று பரவல் அதிகரித்து மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. அத்துடன் தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அன்று அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சாரங்களையும் பொது கூட்டங்களையும் நடத்தி வந்தனர். தற்போது கொரோனா பரவல் உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மாதம் 10 கிலோ இலவச ரேஷன்! முழு விவரம் இதோ!
ஆனால் இதில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், பொது மக்களும் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்று பல்வேறு புகார்கள் பெறப்பட்டன. அத்துடன் தற்போது பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் தொற்றின் திரிபான “பிஏ 2” வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது என்றும் ஜப்பான் நாட்டைைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அறிவுறுத்தல்!
மேலும் இது ஓமைக்ரான் வைரஸ் தொற்று போன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவ தொடங்கினால் மீண்டும் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். தமிழகத்திலும் தொற்று கண்டறியப்பட்டால் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள், கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அம்பலப்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பிஏ 2 வைரஸ் தொற்றின் தாக்கத்தை பொறுத்து இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அதனால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.