தமிழகத்தில் அக்.31க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்தை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதம் 10 ம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மக்கள் வெளியில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் அரசு நோய் தடுப்பு நடவடிகைகளில் தீவிரம் காட்டியது. 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் ஓரளவு குறைந்தது.
தமிழக ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நவ.1 முதல் 3 வரை – சூப்பர் அறிவிப்பு!
அதனால் அரசு மக்களின் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி முழு ஊரடங்கில் தளர்வுகளை அளித்தது. தற்போது வரி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் அவ்வப்போது மருத்துவத்துறை வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர்கள் கூறும் கருத்துக்களை ஆராய்ந்து அதற்கேற்றவாறு ஊரங்கில் தளர்வுகளை அளித்து வருகிறார். அதன்படி கொரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அக்.29 முதல் நவம்பர் 7 வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் விஜயதசமியை முன்னிட்டு கோவில் திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் அக்டோபர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது. அடுத்த கட்டமாக ஊராகில் அளிக்கப்பட வேண்டிய தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.