சென்னை மாநகராட்சியில் தீவிரமாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – கொரோனா அதிகரிப்பு!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. அதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஊரடங்கு அமல்படுத்தியதை தொடர்ந்து நோய் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. நோய் தொற்று பரவும் விகிதம் குறைந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி நிபந்தனைகள் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!
கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 1608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 பேர் பலியாகி 1,512 பேர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நோய்த்தாக்கம் அதிகமாகி வருகிறது. கோவையில் 212 பேருக்கும், ஈரோட்டில் 160 பேருக்கும், தஞ்சையில் 115 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு – 40% ஆக அதிகரிப்பு!
அரியலூர், கடலூர், ஈரோடு, புதுக்கோட்டை கரூர் உள்பட 26 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. ஆனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 170லிருந்து 197 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.