நாட்டில் அவசரநிலை பிரகடனம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
இலங்கை படு மோசமான பொருளாதார வீழ்ச்சியடைந்ததற்கு காரணமாக அமைந்த இலங்கை அரசை எதிர்த்தும், அதிபரை பதவி விலக கூறியும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மக்களை கட்டுப்படுத்த இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஊரடங்கு:
கடந்த சில வருடங்களாகவே இலங்கை பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆனால் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு தற்போது தான் படு மோசமான தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள், எண்ணெய் என அனைத்தின் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் அவசியமான பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பொது மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்த இலங்கை அரசின் மீது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – ஆதார் இணைப்பு! ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
இலங்கை அதிபரான கோத்தபய ராஜபட்சே உடனே பதவி விலக வேண்டும் என மக்கள் அவரது இல்லம் அருகே சென்று போராட்டம் நடத்தினர். இதுமட்டுமல்லாமல் நாட்டின் பல இடங்களிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார தட்டுப்பாட்டின் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதிய நிலக்கரி இல்லை. இதனால் இலங்கையில் நாள் ஒன்றிற்கு மட்டுமே 13 மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தெருவிளக்குகள் கூட இல்லாத காரணத்தினால் இலங்கை இருளில் மூழ்கியுள்ளது.
இருப்பினும் பொது மக்கள் இலங்கை அரசை எதிர்த்தும், இலங்கை அதிபரை பதவி விலக கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகள் கூட எரியாத நிலையில் தீப்பந்தங்களை வைத்து பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அதிபரின் வீட்டிற்கு வெளியே இருக்கும் தடுப்புகளை தாண்டியும் பொது மக்கள் உள்ளே நுழைவதால் காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்துகின்றனர்.