தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு!

0
தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழகத்தில் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனா அதிகரித்து வரும் காரணத்தால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்களும் உயிரிழந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரண்டு தவணையாக தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. தற்போது வரைக்கும் 95% மக்கள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் மற்றும் 25 சதவீத மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கொரோனா பரவாமல் தடுக்க கண்டிப்பாக அனைவரும் இரண்டு தடுப்பூசியும் போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த ஒரு வாரத்திற்கு மட்டும் மக்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் கொரோனா பரவலை சில மாதங்களுக்கு கட்டுப்படுத்தவே முடியாது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மக்கள் முடிந்தவரைக்கும் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தானாகவே சமூக இடைவெளியை பொது இடங்களில் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் NALCO நிறுவனத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பொது இடங்களுக்கு வந்து விட்டு வீட்டிற்கு சென்றதும் கை கால்களை நன்றாக கழுவி கொரோனா பரவாமல் தடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் தற்போது தொடர்ந்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கூடிய விரைவில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என மக்கள் பீதியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!