12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஈத் பண்டிகை அன்று நடைபெற்ற பிரச்சனையின் விளைவுகளை குறைக்கும் நோக்கத்தில் தற்போது மீண்டும் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
ஈத் பண்டிகைக்கு முன் ஜோத்பூரில் ஒரு வகுப்புவாத மோதல் வெடித்தது, ஜெய்ப்பூரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறை தொடர்பாக மொத்தம் 211 பேர் கைது செய்யப்பட்டு 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறையால் பாதிக்கப்பட்ட நகரின் 10 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மே 8 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.
Infosys, TCS மற்றும் இதர ஐடி நிறுவனங்களில் முடிவுக்கு வரும் Work From Home – ஊழியர்கள் கவனத்திற்கு!
தற்போதைய சூழ்நிலையில், நகரின் 10 காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜோத்பூர் கமிஷனரேட் பகுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு 08.05.2022 நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊரடங்குச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், வங்கி அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக காலை 8 மணி முதல் இரண்டு மணி நேரம் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது. அமைதியான பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக நகரில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தளர்வின் போது வாகனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் மிகவும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.