ஜூன் 22 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 22 வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தபோதிலும் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி செலுத்திய 14 நாட்கள் கழித்து ரத்ததானம் – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
அந்த வகையில் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஜூன் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது கடைகள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டன. மேலும் பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி போன்ற கடைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டன. மேலும் மதுபான கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
மேலும் அந்த தளர்வுகளில் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் சமோலி, ருத்ரபிரயாக் மற்றும் உத்தரக்காசி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முறையே பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் கங்கோத்ரி – யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 22 வரை நீடிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.