ஜூலை 1 முதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – மாநிலங்கள் தோறும் புதிய கட்டுப்பாடுகள்!
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வரும் சூழலில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று (ஜூலை 1) முதல் தளர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்தெந்த மாநிலங்களில் எவ்வகையான தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதையொட்டி கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 1) முதல் சில மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸின் தாக்கம் சற்றே உயர்ந்து வருவதால், பல மாநில அரசுகள் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்தியாவில்கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 3,03,62,848 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 45,951 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தினசரி பலி எண்ணிக்கையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,000 க்கும் குறைவாகவே உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 3,98,454 இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், சுமார் 81 நாட்கள் கழித்து நேற்று ஒரு நாளில் 817 பலி நிகழ்ந்துள்ளது.
இதற்கிடையில் கொரோனா தொற்று நோயின் மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தடுப்பூசிகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் தான் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலையை தவிர்க்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்கள் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்பதை சுட்டிக்காட்டிய காட்டிய பிரதமர், போர்க்கால நடவடிக்கையின் படி தடுப்பூசி போட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருவதை தொடர்ந்து இந்தியாவில் சில மாநிலங்களில் இன்று (ஜூலை 1) முதல் புதிய கட்டுப்பாடுகளும், கூடுதல் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, மேற்கு வங்க மாநிலத்தில் மாநிலம் தழுவிய பொது முடக்கத்தை ஜூலை 15 வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், மாநிலம் முழுவதும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தை பொருத்தளவு கொரோனா வைரஸ் புதிய பாதிப்புகள் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஒன்றரை மாத கால முழு ஊரடங்கிற்கு பின்னர் இன்று முதல் 10 நாட்களுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மே 14 முதல் விதிக்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட்டு வந்த ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளானது ஜூலை 10 வரை அமலில் இருக்கும்.
கேரளாவில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு கொரோனா கட்டுப்பாடுகளை ஜூலை 1 முதல் தளர்த்தியுள்ளது. அந்த வகையில் 50 சதவீத இருக்கைகள் கொண்ட பார்கள், விடுதிகள் மீண்டுமாக திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவான 9 மாவட்டங்களில் ஜூலை 1 முதல் ஊரடங்கு தளர்வுகளில் 3 மணி நேரம் நீட்டித்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தை பொறுத்தவரை ஜூலை 16 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் பகுதி நேர கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.