ஜூலை 1 முதல் 8 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி!
மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வரும் பட்சத்தில் நாளை (ஜூலை 1) காலை 6 மணி முதல் கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 8 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, மதுபான கடைகள், உணவகங்கள் மற்றும் பிற கடைகள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு உத்தரவானது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்படும்.
ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு அமல் – கென்யா அரசு அறிவிப்பு!
எனினும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடுவதற்கு ஒரு மணிநேர கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் ஜூலை 7 வரை அமலில் இருக்கும். இருப்பினும், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, சித்தூர் மற்றும் பிரகாசம் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்படும் என முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா 2வது அலையை சிறப்பாக கையாண்டதில் தமிழகம் முதலிடம்!
தற்போது விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், குண்டூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் மற்றும் கர்னூல் உள்ளிட்ட இடங்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதலாக மூன்று மணி நேரம் தளர்வுகள் அளிக்கப்படும் என அறிக்கை தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கொரோனா தினசரி பாதிப்பானது கடந்த 27 ஆம் தேதி அன்று 4,250 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.