காலை 10 மணிமுதல் கடைகளை திறக்க அனுமதி – 7 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள்!
கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் மணிப்பூர் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏழு மாவட்டங்களில் சில தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
முழு ஊரடங்கு:
மணிப்பூர் மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவானது மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், கச்சிங், பிஷ்ணுபூர், சுராச்சந்த்பூர் மற்றும் உக்ருல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது ஜூன் மாதம் 11 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என மணிப்பூர் தலைமை செயலாளர் ராஜேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் இந்த ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த மாவட்டத்தின் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார். தவிர நகராட்சி பகுதிக்குள் சரக்கு லாரிகள், பெட்ரோல் டேங்கர்கள் போன்றவைகள் இயங்குவதற்கு, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு – தள்ளுவண்டி கடைகள் அதிகரிப்பு!
தொடர்ந்து மணிப்பூர் மாவட்டம் தங்கல் பஜாரில் உள்ள உதிரி பாகங்கள் கடைகள், டயர் கடைகள் மற்றும் கனரக வாகனங்களின் பேட்டரி கடைகள் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த கடைகள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர காப்பீட்டு அலுவலகங்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது.