ஜூலை 11 முதல் 13ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு – ஒடிசா அரசு உத்தரவு!
ஒடிசாவின் பூரி நகரத்தில் ஜூலை 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை ரத யாத்திரை காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
ரத யாத்திரை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த சில மாதங்களாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரிசா மாநிலத்தில் உலகப்புகழ் பெற்ற ரத யாத்திரை நிகழ்ச்சிக்காக மீண்டும் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த ESI பயனாளர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் – ESI அலுவலகம் அறிவிப்பு!!
ஒடிசா மாநில அரசு, கொரோனா பரவல் அச்சம் காரணமாக பூரி ஜெகநாதர் கோவிலின் ரத யாத்திரை நிகழ்ச்சிக்காக ஜூலை 11ம் தேதி இரவு 8 மணி முதல் 13ம் தேதி இரவு 8 மணி வரை பூரி நகரில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இதனால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் சுற்றுலா பயணிகள் மற்றும் விருந்தினர்களை நகரத்தை விட்டு வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் கிராண்ட் வீதியில் வாகன இயக்கம் மற்றும் வேதி பொருட்கள் விற்பனை கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், ரத யாத்திரையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆர்டி – பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு எதிர்மறை முடிவு வந்த முழுமையான தடுப்பூசி போட்டுள்ள 1000 பேர் தேர் இழுக்க யாத்திரையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும், போலீசாரை தவிர 1000 அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரை ஜூலை 12ம் தேதி நடக்க இருக்கிறது.
இதனால் மாநிலத்தில் ஜூலை 16ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள வார இறுதி ஊரடங்கு பூரி நகரில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், 10.01.2021 (சனிக்கிழமை) அன்று பூரி நகரத்தில் வார இறுதி ஊரடங்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.