டிச.31 வரை 8 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு உத்தரவு!
குஜராத் மாநிலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா மாறுபாடான ஒமிக்ரான் வைரஸின் புதிய வழக்குகள் காரணமாக அம்மாநிலத்தின் எட்டு முக்கிய நகரங்களில் அமலில் இருக்கும் இரவு ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு
நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக புதிய நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வழக்குகளுக்கு மத்தியில், குஜராத் அரசு அம்மாநிலத்தின் எட்டு முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்குச் சட்டமானது தினசரி அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் குஜராத்தின் அகமதாபாத், காந்திநகர், சூரத், ராஜ்கோட், வதோதரா, பாவ்நகர், ஜாம்நகர் மற்றும் ஜுனகர் ஆகிய எட்டு நகரங்கள் இரவு நேர ஊரடங்கு உத்தரவைத் தொடர்கின்றன. இதற்கிடையில், அப்பகுதிகளில் அனைத்து வணிகங்களும் இரவு 12 மணி வரை தொடருவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை பராமரித்து உணவகங்கள் அதன் உட்காரும் திறனில் 75 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் பரவலை தடுக்க மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தீவிரமடையும் கட்டுப்பாடுகள்!
அதே நேரத்தில் திருமண நிகழ்வுகளில் 400 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் முதல் ஒமிக்ரான் மாறுபாடு பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் மகேஷ் பாபு கடந்த டிச.19ம் தேதி அறிவித்திருந்தார். அதேசமயம், மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் ஒமிக்ரான் வழக்குகள் கணிசமாக பதிவாகியுள்ளன. தவிர இந்தியாவில் இதுவரை மொத்தம் 161 ஒமிக்ரான் தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்