அக்டோபர் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – இலங்கை அரசின் புதிய அறிவிப்பு!
கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக அமலில் இருந்து வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுக் கூட்டங்கள் மற்றும் விருந்துகளுக்கு தடை விதித்துள்ளது இலங்கை அரசு.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா தொற்றின் 2ம் அலை, ஏப்ரல் மாதத்தில் அங்கு கொண்டாடப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு பாதிப்பின் தினசரி எண்ணிக்கை 4,000 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 250 ஆகவும் உயர்ந்தது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதிகாரபூர்வ அறிவிப்பின் படி கிட்டத்தட்ட 13,000 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
திருப்பதி தரிசனம் – 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டுப்பாடு? தேவஸ்தானம் விளக்கம்!
மேலும், 5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 56% பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆறு வாரங்களாக அமலில் இருந்து வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை இலங்கை அரசு நீக்கியுள்ளது. மேலும் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பணமோசடி எச்சரிக்கை!
ஆனால் பொதுக் கூட்டங்கள் மற்றும் விருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார். இருப்பினும், அங்கு இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்குமாறு சுகாதார அமைச்சகம் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.