தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் அச்சுறுத்தல்! தலைமை செயலர் ஆலோசனை!
தமிழகத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் மீண்டும் உருமாறிய கொரோனாவாக அறியப்பட்ட ஒமிக்ரான் வகை தொற்று தீவிரமாக அச்சுறுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ஒமிக்ரான் பரபரப்பு:
உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வகையாக அறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடந்து கடந்த சில மாதங்களாக கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அதனால் இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு பரவி வரும் ஒமிக்ரான் வகை வைரஸ் 32 வகைகளில் உருமாற்றம் அடையக்கூடிய புதிய வகை வைரஸாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்னாப்பிரிக்கா நாட்டில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து சிங்கப்பூர், மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போஸ்ட்வானா, நியூசிலாந்து, சீனா, ஜிம்பாப்வே, ஹாங்காங், மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது. அதனால் இந்த குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா அச்சம் எதிரொலி!
அவ்வாறு பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் வகையான ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதித்தல் மற்றும் ஊரடங்கு அமல்படுத்துதல் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் மருத்துவர் குழுவுடன் ஆலோசனை நடத்தி முடிவை வெளியிடுவார் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக ஊரடங்கு அமலுக்கு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.